search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pranayama"

    • இந்த பயிற்சி செய்யும் போது வயிறு காலியாக இருப்பது அவசியம்.
    • நீங்கள் பழகும் போது மன அழுத்தம் குறைவதை உணருவீர்கள்.

    பிராமரி பிராணாயாமத்தை மேலும் சில வகைகளிலும் செய்யலாம். இன்று நாம் இரண்டாவது வகையான அமைதியான பிராமரி பிராணாயாமம் செய்முறையை பார்க்கலாம்.

    செய்முறை

    விரிப்பில் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகு நேராக இருப்பதை உறுதி செய்யவும். நிதானமாக இரண்டு அல்லது மூன்று முறை சாதாரணமாக மூச்சு விடவும்.

    பின் மூச்சை ஆழமாக இழுக்கவும். மூச்சை வெளியேற்றும் போது, 'ம்ம்ம்' என்று வாயை திறக்காமல் குரல் ஒலிக்கவும். உங்கள் தொண்டையில் அதிர்வுகளை உணரவும். இது நேற்று பார்த்த அடிப்படை பிராமரி பிராணாயாமம்.

    அடிப்படை பிராணாயாமத்தை ஆறு முறை செய்யவும். பின், மூச்சை இழுத்து விடும் போது, ஒலி எழுப்பாமல், மனதுக்குள் ஒலி எழுப்பி, தொண்டையில் அதிர்வுகளை உணரவும். ஆறு முறை இவ்வாறு செய்யவும்.

    துவக்கத்தில் மனதுள் ஒலி எழுப்பும் போது தொண்டையில் அதிர்வுகளை உணர முடியாமல் இருக்கலாம். ஆனால், மனதில் நீங்கள் ஒலி எழுப்பும் போது தொண்டையில் உணர முடிவதாக எண்ணி பயிலும் போது, நாளடைவில் இது சாத்தியப்படும்.

    அமைதி பிராமரி பிராணாயாமம் செய்வதால் அடிப்படை பிராமரி பிராணாயாமம் செய்வதன் பலன்கள் கிடைப்பதோடு மனம் ஒருநிலைப்படவும் உதவுகிறது. மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் பொது இடமாக இருந்தாலும் இதை நீங்கள் பழகும் போது மன அழுத்தம் குறைவதை உணருவீர்கள். வயிறு காலியாக இருப்பது அவசியம்.

    • பிராமரி பிராணாயாமம் தனிச் சிறப்பு வாய்ந்தது.
    • நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

    பிராணாயாமத்தில் பல வகைகள் உண்டு என்றாலும், பிராமரி பிராணாயாமம் தனிச் சிறப்பு வாய்ந்தது. மனித உடல் இயற்கையாக உருவாக்கும் நைட்ரிக் அமிலம் (nitric acid) உடம்பின் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாததாகும். உடம்பின் பெரும்பாலான அணுக்கள் நைட்ரிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன.

    நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுதல், நுரையீரலின் நலத்தை பாதுகாத்தல், இருதய நலத்தை பாதுகாத்தல், அதிக இரத்த அழுத்தத்தை குறைத்தல், மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், தன்னியக்க நரம்பு மண்டலத்தின் (autonomic nervous system) சமிக்ஞை கடத்தியாக இருத்தல், சிறுநீரகத்துக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்தல் ஆகியவை நைட்ரிக் அமிலத்தின் முக்கிய பணிகளில் சில.

    வயது கூடக் கூட, நைட்ரிக் அமில உற்பத்தி குறைவதால் மூளை, இருதயம், காது இவற்றின் இரத்த ஓட்டம் பாதிப்படையும். இந்த நைட்ரிக் அமில உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் பிராமரி பிராணாயாமத்துக்கு உண்டு.

    பிராமரி பிராணாயாமத்தில் எழுப்பப்படும் வண்டு ரீங்கார ஒலி, நைட்ரிக் அமில உற்பத்தியை 15 மடங்கு அதிகமாக்குவதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. இந்த ஒரு காரணமே பிராமரி பிராணாயாமத்தை தொடர்ந்து செய்ய போதுமானது.

    பலன்கள்

    தொண்டை நலத்தை பராமரிக்கிறது.

    சளியை போக்க உதவுகிறது

    குரல் வளத்தை பாதுகாக்கிறது.

    தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

    பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

    அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

    நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

    கேட்கும் திறனை வளர்க்கிறது.

    தூக்கமின்மையைப் போக்குகிறது.

    மன அழுத்தத்தைப் போக்குகிறது.

    மனதை தியான நிலைக்குத் தயார் செய்கிறது.

    செய்முறை

    விரிப்பில் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகு நேராக இருப்பதை உறுதி செய்யவும். நிதானமாக இரண்டு அல்லது மூன்று முறை சாதாரணமாக மூச்சை இழுத்து விடவும்.

    பின், மூச்சை நன்றாக இழுக்கவும். மூச்சை வெளியேற்றும் போது, 'ம்ம்ம்' என்று வாயை திறக்காமல் குரல் ஒலிக்கவும். உங்கள் தொண்டையில் அதிர்வை உணர்வீர்கள். ஐந்து முதல் ஆறு முறை வரை இவ்வாறு செய்யவும். பின் சிறிது நேரம் சாதாரண மூச்சில் இருந்த பின் மீண்டும் ஐந்து அல்லது ஆறு முறை பிராமரி பிராணாயாமம் செய்யவும்.

    காதுகளின் திறனை அதிகரிக்கும் பயிற்சியாக இருந்தாலும், தீவிரமான காது பிரச்சினை உள்ளவர்கள் பிராமரி பிராணாயாமம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    • உடம்பில் ஓடும் நாடிகள் அனைத்தையும் சுத்திகரித்து சமநிலைப்படுத்துகிறது.
    • நுரையீரலை பலப்படுத்தி சுவாசக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

    மூச்சு பயிற்சிகளை பத்மாசனம் / அர்த்த பத்மாசனம் / சுகாசனம் / வஜ்ராசனம் போன்ற கால்கள் பூட்டிய நிலையிலேயே செய்ய வேண்டும். இரத்தம் சீராகிறது என்றால் அது கால்களுக்கு செல்ல வேண்டாமா? அவற்றை பூட்டி விட்டு செய்வதா? என கேள்வி எழலாம். இரத்தம் இடுப்புக்கு மேல் கல்லீரல், மண்ணீரல், இருதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற இராஜ உறுப்புகளுக்கும் தலைப்பகுதிக்கும் சீராகப் பாயும் போது இந்த உறுப்புகள் பலம் பெறுகிறது. அதன் பலனாக இயல்பாகவே கால்களுக்கு பலம் அளிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் உள்ள இயக்கம் பலமடைகிறது. அதனால், கால்கள் பூட்டிய நிலையில் மூச்சு பயிற்சி செய்வதே சரியானது.

    பலன்கள்

    உடம்பில் ஓடும் நாடிகள் அனைத்தையும் சுத்திகரித்து சமநிலைப்படுத்துகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாசக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

    உடலில் பிராண வாயுவை அதிகரிக்கிறது. வலது மற்றும் இடது மூளையின் சமநிலையை வளர்க்கிறது. இருதய நலத்தை பாதுகாக்கிறது.

    நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. மன அழுத்தத்தை போக்கி மன அமைதியை ஏற்படுத்துகிறது. மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது.

    செய்முறை

    பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சுகாசனம் அல்லது வஜ்ராசனத்தில் (வஜ்ராசனம் பற்றி வரவிருக்கும் நாட்களில் பார்க்கலாம்) அமரவும். முதுகுத்தண்டை நேராக வைக்கவும். இடது கையை சின் முத்திரையில் வைக்கவும்.

    மூச்சை முழுவதும் வெளியே விடவும். வலது கை பெருவிரலால் வலது நாசியை பூட்டுங்கள் (அடையுங்கள்). இடது நாசி வழியே மூச்சை முடிந்த வரை உள் இழுக்கவும். இப்போது, இடது நாசியை, வலது கை மோதிர விரலால் பூட்டி, வலது நாசி வழியே மூச்சை மெதுவாக வெளியே விடவும்.

    பின் வலது நாசி வழியே (மூச்சை வெளியே விட்ட வழியே) மூச்சை உள்ளிழுக்கவும். இப்போது வலது நாசியை அடைத்து இடது நாசி வழியே மூச்சை வெளியேற்றவும்.

    இவ்வாறு, வலது நாசி பூட்டி இடது நாசி வழியே இழுத்து, இடது நாசியை பூட்டி வலது வழியே வெளியேற்றி, பின் வலது நாசி வழியே மூச்சை உள்ளிழுத்து, பின் வலது நாசியை பூட்டி இடது நாசி வழியே வெளியேற்றினால் ஒரு சுற்று ஆகும். இது போல் 5, 9, 11, 15 சுற்றுகள் செய்யலாம்.

    குறிப்பு

    மூச்சை உள்ளிழுக்கும் நேர அளவிலேயே மூச்சை வெளியேற்ற வேண்டும். துவக்கத்தில் இது சமமாக இல்லாவிட்டாலும் தொடர் பயிற்சியில் சரியாக வந்து விடும். முடிந்த அளவு ஆழமாக, மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும். நாசிகள் மாற்றி, மாற்றி மூச்சை உள் இழுத்து விடுவதில் உடலின் இருபக்க நாடி நரம்புகள் வலுப்பெற்று உடலின் இயக்கம் சீராகிறது.

    ஆசனத்தில் அமர்ந்து செய்ய இயலாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து, முதுகை நேராக வைத்து செய்யலாம். கவனிக்கவும், இது தரையில், கூறப்பட்டுள்ள ஆசனங்களில் ஒன்றில் அமர முடியாதவர்களுக்கு மட்டுமே.

    தீவிர தலைவலி, ஜூரம், கடுமையான சோர்வு ஏற்படும் நேரங்களில் நாடி சுத்தி செய்வதை தவிர்க்க வேண்டும்.

    • சளி, இருமல் பிரச்சனைகளுக்கு யோகாசனங்கள் கை கொடுக்கும்.
    • மருத்துவர் மற்றும் யோகா ஆசிரியர் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது அவசியம்.

    மழை, குளிர் காலங்களில் சளி, இருமல் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பானது. குளிர்ச்சியான கால நிலை காரணமாக உண்டாகும் இத்தகைய ஒவ்வாமைகளை தவிர்ப்பதற்கு உடல் நலத்தில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு சில யோகாசனங்கள் கை கொடுக்கும். மருத்துவர் மற்றும் யோகா ஆசிரியர் ஆலோசனை பெற்று இவற்றை செய்வது அவசியம்.

    1. சர்வாங்காசனம்: தரைவிரிப்பில் மல்லாந்த நிலையில் படுக்கவும். பின்பு மூச்சை நன்றாக உள்ளிழுத்தபடி இரு உள்ளங்கைகளால் உடலை தூக்கி உயரே கொண்டு வரவும். அதாவது இரு உள்ளங்கைகளையும் இடுப்பில் வைத்தபடி கால்களை நேராக தூக்க வேண்டும். அப்போது முதுகு, இடுப்பு, கால்களை நேர் நிலையில் மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும். எந்த அசைவும் இல்லாமல் சீராக சுவாசிக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் அதே நிலையில் வைத்திருந்த பிறகு கால்களை மடித்து முதுகு பின்புறத்தை உள்ளங்கைகளில் கொண்டு வந்து மெதுவாக கால்களை ஆரம்ப நிலைக்கு திருப்ப வேண்டும்.

    2. உஜ்ஜயி பிராணாயாமம்: கால்களை மடக்கி, உடலை நேராக நிமிர்த்தி தியான நிலையில் அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடிக்கொள்ளவும். பின்பு இரு நாசி துவாரங்கள் வழியாக நிதானமாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுக்கவும்.சில விநாடிகள் அதே நிலையில் இருந்துவிட்டு மெதுவாக மூச்சை வெளியே விடவும். அப்படி மூச்சு வெளிப்படும்போது 'ஹா' என்ற சத்தத்தை வெளியிடவும். இந்த மூச்சுப் பயிற்சி நுரையீரலை வலுப்படுத்த உதவும். அதில் தேங்கி இருக்கும் சளியை வெளியேற்ற உதவும்.

    3. அர்த்த மத்ஸ்யேந்திராசனம்: தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் கால்களை நீட்டியபடி அமர வேண்டும். பின்பு இடது காலை வலது பக்கமாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு வலது காலை இடது காலுக்கு வெளிப்புறமாக கொண்டு வந்து தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். அதே நிலையில் மூச்சை வெளியேற்றியபடி உடலின் மேல்பாகத்தை வலது பக்கமாக திருப்ப வேண்டும். அப்போது முதுகுத்தண்டுவடம் வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வலது கால் பாதத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையை பின்புறமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நிலையில் இயல்பாக மூச்சை உள் இழுத்தவாறு 20 முதல் 30 நொடிகள் இருக்க வேண்டும். பின்பு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

    ‘பிராண’ என்றால் ஆற்றல், சக்தி. ‘நியமம்’ என்றால் ஒழுங்கு. மூச்சை முறையாக ஒழுங்குபடுத்தி விடுவதே பிராணாயாமம்.
    ‘பிராண’ என்றால் ஆற்றல், சக்தி. ‘நியமம்’ என்றால் ஒழுங்கு. மூச்சை முறையாக ஒழுங்குபடுத்தி விடுவதே பிராணாயாமம்.

    கால்களை நன்றாக மடித்து சம்மணக்காலிட்டு தரையில் அமரவேண்டும். இந்த நிலையை சுகாசனம் என்கிறோம். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். ஆரம்ப நிலையில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொள்ளலாம். இரு கைகளையும் தியான முத்திரையில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆள்காட்டி விரலை கட்டை விரல் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இதுதான் தியான முத்திரை. இப்போது மூச்சை பொறுமையாக இழுத்து பொறுமையாக விடவேண்டும். இதை 15-25 முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

    காலை மற்றும் மாலையிலும் 4 மணி முதல் 6 மணிக்குள் செய்வது அதிக பலன் தரும். எவ்வளவு தூரம் மூச்சை உள்வாங்க முடியுமோ இழுத்து, மெதுவாக மூச்சை வெளியில் விடவும். ஆரம்ப நிலையில், ஒருபோதும் மூச்சை உள்ளடக்கி வைக்க முயற்சிக்க வேண்டாம். இதனால் இதயம் சிரமப்படும்.

    நுரையீரல் செயல்பாடு பிராணாயாமம்வால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும்.
    பிராணாயாமம் என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை. பிராணாயாமம் என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’ என்ற வார்த்தைகளின் கூட்டாகும். ‘பிராண’ என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் ‘அயாமா’ என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணாயாமம் என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும்.

    வேறு எந்த செயல்முறையும் தர முடியாத பல உடல்நல பயன்களை பிராணாயாமம் உங்களுக்கு தருகிறது. இந்த சுவாசப்பயிற்சி வழிமுறை உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பல அதிசயங்களை நிகழ்த்தும். பிராணாயாமம்வால் கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்களில் உடல் மற்றும் மனரீதியான பயன்கள் என இரண்டுமே அடங்கும்.

    பிராணாயாமம் செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம்வால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட வேண்டும். அதே போல் அதனை செய்யும் போது சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிராணாயாமம்வை முயற்சிப்பதற்கு முன், ஒரு தேர்ந்தெடுத்த யோகா ஆசிரியரிடம் பயிற்சி பெற பரிந்துரைக்கப்படுகிறது.

    நுரையீரல் செயல்பாடு பிராணாயாமம்வால் கிடைக்கும் முக்கியமான உடல்நல பயன்களில் இதுவும் ஒன்றாகும். பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். எடை குறைப்பு பிராணாயாமம்வால் கிடைக்கும் உடல்நல பயன்கள், உங்கள் உடலுக்குள் இருக்கும் அங்கங்களின் ஒழுங்காக செயல்பாட்டோடு மட்டும் நிற்பதில்லை.

    உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பிராணாயாமம் உதவுகிறது என்ற சந்தோஷமான விஷயத்தையும் தெரிந்துக் கொள்ளுங்கள். பிராணாயாமம்வை தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள். நச்சுத்தன்மையை வெளியேற்றுதல் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுப் பொருட்களை நீக்க சிறந்த வழியாக விளங்குகிறது பிராணாயாமம் பயிற்சி. உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க யோகாவில் பல வழிகள் உள்ளது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்றாக விளங்குகிறது பிராணாயாமம்.

    மன அழுத்தத்திற்கான சிகிச்சை பிராணாயாமம்வால் கிடைக்கும் உடல் நல பயன்கள், மனதை திடமாக வைப்பதிலும் நீள்கிறது. தினமும் பிராணாயாமம் பயிற்சியை மேற்கொண்டால் உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் தணியும். ஒரு நல்ல யோகா ஆசிரியிடம் இந்த பயிற்சியை கற்ற பிறகு, இதனை தினசரி செய்திடுங்கள். சுவாச குழாய்களை தெளிவாக்குங்கள் உங்கள் வாழ்க்கையில் எரிச்சலடைய வைக்கும் பிரச்சனைகளில் ஒன்றான மூக்கடைப்பை ஒரு முறையாவது சந்தித்திருப்பீர்கள்.

    பிராணாயாமம்வால் கிடைக்கும் உடல் நல பயன்களில் தெளிவான சுவாச குழாய்களும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல வழிகளை முயற்சி செய்து பார்த்து வெறுத்து போயிருப்பீர்கள். அப்படியானால் நீங்கள் பிராணாயாமம் பயிற்சியை தொடங்கும் நேரம் இது. பிராணாயாமம்வால் கிடைக்கும் முக்கியமான உடல் நல பயன்களில் இதுவும் ஒன்று. செரிமான கோளாறுகளை குணப்படுத்தும் நம் உடல் நலம் கெட்டுப் போவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது ஒழுங்கற்ற உணவு பழக்கமே.

    பிராணாயாமம் மற்றும் இன்னும் பல ஆசனங்களின் மூலமாக உங்கள் செரிமான பிரச்சனைகளை போக்க யோகா உதவுகிறது. உங்களுக்கு செரிமான பிரச்சனை இருந்தால், சீரான முறையில் பிராணாயாமம் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இதய குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அனுலோம் விலோம் மற்றும் பாஸ்ட்ரிகா போன்ற பிராணயாமம் வழிமுறைகளின் மூலமாக உங்கள் உடலில் உள்ள இதய குழாய்களின் செயல்பாட்டை மேம்படுத்தலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளளவையும் அதிகரிக்கும்.

    மன ஒருமித்தலை மேம்படுத்தும் மன ஒருமித்தல் சக்தியை மேம்படுத்த பிராணாயாமம் ஒரு சிறந்த வழியாக விளங்குகிறது. இது உங்கள் அறிவு கூர்மையை மேம்படுத்த உதவும். மன ஒருமித்தலை மேம்படுத்துவதும் கூட பிராணாயாமம்வால் கிடைக்கும் ஒரு முக்கிய உடல் நல பயனாகும். சைனஸ் பிரச்சனையை எதிர்த்து போராடும் பிராணாயாமம் பயிற்சியால் கிடைக்கும் உடல் நல பயன்களில் சைனஸ் பிரச்சனையை எதிர்த்து போராடுவதும் முக்கியமான ஒரு பயனாகும். சைனஸ் பிரச்சனையை தவிர்க்க அல்லது சிகிச்சை அளிக்க பாஸ்ட்ரிகா என்ற பிராணாயாமம் வழிமுறையை பயிற்சி செய்யுங்கள். அதனை முயற்சி செய்து உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை கவனியுங்கள்.

    சவாசனத்தில் பிராணாயாமம் செய்து வந்தால் மனமும் உடலும் பூரண ஓய்வுகொள்கிறது. மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி, படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும்.
    இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம். சூடு இல்லாத சமமான ஒரு தரையில் விரிப்பைப் போட்டு, தரையில் முதுகு படும்படி மல்லாந்து படுங்கள்.  கைகளையும் கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள். உடல் உறுப்புகளை விறைப்பு இன்றி கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும் கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்கட்டும். மூட வேண்டாம். பாதங்கள் நேரே சற்று விலகி இருக்கட்டும். உடலின் தசைகள், நரம்புகள், உறுப்புகள் எல்லாம் தளர்ந்து இருக்கட்டும். அகலமாக இருந்தால் கட்டிலில் கிடந்து இதைப் பண்ணலாம்.

    இரு மூக்குத் துளைகள் மூலமாக ஓசையின்றி மூக்கு சுருங்குதலோ, விரிதலோ இல்லாமல் மெள்ள சீராக மூச்சை உள்ளே இழுங்கள். முடியும் வரை சிரமம் இல்லாத வரையில் மூச்சை உள்ளே நிறுத்துங்கள். விடத் தோன்றும்போது இரு மூக்கின் வழியாகவும் மெள்ளச் சீராக மூச்சை, தொடர்ச்சியாக வெளியே விடுங்கள்.

    இப்படி காலையில் 10 முறையும், மாலையில் 10 முறையும் செய்து பழகுங்கள். மூச்சை இழுக்கும்போதும் விடும்போதும் 'ஓம்’ என்று ஜெபிக்கலாம். கும்பகத்தின்போதும் ஜபிக்கலாம்.  

    பலன்கள்: மனமும் உடலும் பூரண ஓய்வுகொள்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் சுகமாக இதைப் பயிற்சிக்கலாம். மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி, படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும். இதயம் இதமாக இருக்கும்.
    மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
    மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

    முதல் நிலை:

    இது சாதாரணப் பிராணாயாமம்.

    'தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல் விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம் செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து (கும்பகம் செய்து), 24 முறை மூச்சை வெளியே (ரேசகம்) விடுவது.  (ஒரு முறை என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு. இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.)

    ஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.

    நடு நிலை:

    இதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64 முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே விடலாம்.  உடம்பில் வியர்வை வழியும். அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல் வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.

    இந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும். இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை அடையவேண்டும்.

    உயர் நிலை:

    இதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும். உடனே, 96 முறை  உள்ளே நிறுத்திக் கும்பகம் செய்யவும்.  கும்பகம் செய்தவுடன் 48 முறை வெளிவிடவும்.  இப்படி ஒழுங்காக உயர்த்தி, திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி சீராகவும் இழுக்கவும் விடவும் பழகவேண்டும்.  

    காலை 4 மணிக்கு அதாவது சூரிய உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும் தெய்வத்தை வணங்கிவிட்டு, பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி செய்யவேண்டும்.  

    காலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11 மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை பயிற்சியில் ஈடுபடவேண்டும்.  ஒரு தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள் ஒரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர பயிற்சி.

    பலன்கள்: பயிற்சியில் நாம் பிரணவ மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம் உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும். புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன. சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும். உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய் ஆகியவை பயன்படுத்தவேண்டும். எண்ணெய்க் குளியல் அவசியம் தேவை.
    எளிமையான பயிற்சிகள் மூலம் வலிமையான உடலையும் உயிரையும் செதுக்க அவர்கள் உருவாக்கிய அற்புத பயிற்சியே மூச்சு பயிற்சி பிராணாயாமம்.
    எளிமையான பயிற்சிகள் மூலம் வலிமையான உடலையும் உயிரையும் செதுக்க அவர்கள் உருவாக்கிய அற்புத பயிற்சியே மூச்சு பயிற்சி பிராணாயாமம்.

    பிராணயாமா அல்லது பிராணாயாமம் என்பது ஒரு சமஸ்கிருத சொல், அதற்கு “பிராணா அல்லது மூச்சைக் கட்டுப்படுத்தி வைத்தல்” என்பது பொருள். அந்தச் சொல் இரு சமஸ்கிருத சொற்கள் இணைந்து உருவாக்கப்பட்டது. அது “பிராணா” வாழ்வாற்றல் அல்லது முக்கியமான வலிமை குறிப்பாக மூச்சோட்டம் மற்றும் “ஆயாமா” நிறுத்தி வைத்தல் அல்லது கட்டுப்படுத்தி வைத்தல் என்று பொருள்.அது அவ்வப்போது வாழ்வாற்றலை கட்டுப்படுத்துதல் என்று அர்த்தமாகும்.

    யோகாவில் ஒரு தொழில்நுட்ப வார்த்தையாகப் இதை பயன்படுத்தும்போது அது பெரும்பாலும் குறிப்பாக “மூச்சுக் கட்டுப்பாடு” மூச்சு பயிற்சி என்றே அழைக்கப்படுகிறது.

    முதலில் சுவாசத்தை உள்ளே இழுப்பது. இதை பூரகம் என்று பெயர்.

    இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை ரேசகம் என்பர்.

    இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இதை கும்பகம் என்று கூறுவர்.

    வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல்.இதை பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்றும் கூறுவர்கள். பிராணாயாமம் பயிற்சியை பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து தான் செய்ய வேண்டும்.

    பிராணயாமா என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’ என்ற வார்த்தைகளின் கூட்டாகும். ‘பிராண’ என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் ‘அயாமா’ என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணயாமா என்பது ஒரு உன்னத உடற்பயிற்சியாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும்.

    வேறு எந்த செயல்முறையும் தர முடியாத பல நல்ல உடல்நல பயன்களை பிராணாயாமம் உங்களுக்கு தருவதால் இந்த சுவாசப்பயிற்சி வழிமுறை உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பல அதிசயங்களை நிகழ்த்தும். பிராணாயாமம் செய்வதால் கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்களில் உடல் மற்றும் மன ரீதியான பயன்கள் என இரண்டுமே கிடைக்கும்.

    பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.

    உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பிராணாயாமம் உதவுகிறது என்ற சந்தோஷமான விஷயத்தையும் தெரிந்துக் கொள்ளுங்கள். பிராணாயாமம் பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள்.

    உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க யோகாவில் பல வழிகள் இருக்கிறது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்று தான் பிராணாயாமம்.

    பிராணாயாமம் உடலுக்கு பல நல்ல பயன்களை தருவதோடு, அதோடு இது மனதை திடமாக வைப்பதற்கும் உதவுகிறது. தினமும் பிராணாயாமம் பயிற்சியை செய்து வாருங்கள உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் தணியும். ஒரு நல்ல யோகா ஆசிரியிடம் இந்த பயிற்சியை கற்ற பிறகு, தானாக இதனை தினசரி செய்து வாருங்கள். சில நிமிட பயிற்சி சீரிய மாற்றம் கொடுக்கும்.
    ஷித்தாலி பிராணாயாமம் நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
    செய்முறை :

    யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும்.

    இப்போது மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும். அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும். வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும். பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.

    பலன்கள்

    இந்த பிராணாயாமம் மூச்சினை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், உடலினுள் வெப்பத்தையும் உருவாக்குகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது. உடல், மனம் இரண்டும் புத்துணர்வு அடைகிறது.

    நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. உள்ளே சேர்ந்திருக்கும் சளி இதனால் வெளியேறி விடும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
    ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும். மன வலிமை கூடும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும்.
    யோகிகளாலும், சித்தர்களாலும், ஞானிகளாலும் யோகம் மற்றும் வேதாந்தமான உபநிஷத்துக்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ள ஒரு பயிற்சியாக ஸோஹம் தியானம் உள்ளது.

    ஒரு மனிதன் தனது சிறைவடிவான ஆன்மாவை அறிய ஸோஹம் தியானத்திற்கு ஒப்பான ஒரு உபாசனையோ, ஜபமோ இல்லை என்று தியான பிந்து உபநிஷத்து கூறுகிறது. முக்தி அடைய யோகிகளுக்கு ஸோஹம் தியானம் ஒரு பொக்கிஷம் போல் உள்ளது என்று ஹம்ஸோப நிஷத்து கூறுகிறது.

    சரபோக நூல்களான சிவ ஸ்வரோதயா மற்றும் ஞான சர நூலிலும் சரயோக சாற்கள் ஜீவன் முக்தி நிலையை அடைய ஸோஹம் தியானப் பயிற்சியை கூறி உள்ளது.

    பெயர் விளக்கம் :- மூச்சின் இயக்கத்தில் இயற்கையாகவே இருக்கும் ஹம்ஸோ என்ற சூட்சும நாதத்தை ஸோஹம் என்று மாற்றி ஜப தியானம் செய்வதால் ஸோவும் தியானம் என்று இப்பயிற்சி அழைக்கப்படுகிறது.

    செய்முறை-1 :- அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். முழங்கால் முட்டிகளின் மேல் இரண்டு கை விரல்களால் சின்முத்திரை செய்யவும். கண்களால் சாம்பவி (கண்களால் புருவ நடுவை பார்க்கவும்) அல்லது அகோசரி (கண்களால் மூக்கு நுனியை பார்க்கவும்) செய்யவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். சுவாச இயக்கத்தில் மூச்சுக் காற்று உள்ளே செல்வதை அமைதியாக ஒரு நிமிடம் கவனிக்கவும்.

    இப்போது மூச்சுக்காற்றோடு ஸோ என்ற நாதத்தை (ஓசையை) மனதால் ஜபித்துக் கொண்டு ஆக்ஞா சக்கரத்திலிருந்து மூலாதார சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும். மூச்சுக் காற்றை வெளியே விடும்போது மூச்சுக் காற்றோடு ஹம் என்ற நாதத்தை ஜபித்துக் கொண்டு மூலாதாரத்திலிருந்து அக்ஞா சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும்.

    ஒரு சங்கிலித் தொடர் போல், உள் மூச்சில் உடலின் முன் பக்கத்தில் புருவ நடுவில் உள்ள ஆக்ஞாவி லிருந்து மூலாதாரம் வரை கவனம் செலுத்தி தொடர்ந்து வெளிமூச்சின் போது மூலாதாரத்திலிருந்து உடலின் பின் பக்கத்தில் முதுகின் வழியாக புருவ நடுவுக்கு நேராக உள்ள தலையின் பின் பகுதி வரை கவனம் செலுத்தவும்.

    இப்பயிற்சியின் போது பிராணாயாம பயிற்சி போல மூச்சுக் காற்றை ஆழமாக உள்ளுக்கு இழுக்கவோ வெளியே விடவோ கூடாது. மூச்சின் இயக்கம் இயற்கையாக இருக்க வேண்டும்.

    உங்கள் மூச்சுடன் உங்கள் உணர்வும் இணைந்து ஸோ-ஹம் என்ற நாதத்தை உண்டு பண்ண வேண்டும். அதே சமயம் சக்கரங்களை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நினைக்க வேண்டும். வேகமில்லாமல் அமைதியாக எந்த அளவிற்கு மூச்சுடன் லோ-ஹம் என்ற ஆசையை முழு விழிப்புணர்வோடு உண்டு பண்ணுகிறீர்களோ, அந்த அளவிற்கு விரைவில் புலன் வழி செல்லும் புற உலக உணர்வு குறையும். நீண்ட நேரம் தியானம் செய்தாலும் சில நிமிடமே கழிந்தது போல இருக்கும்.

    செய்முறை-2 :- அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். முழங்கால் முட்டிகளின் மேல் கைவிரல்களால் சின்முத்திரை செய்யவும். கண்களால் அல்லது அகோசரி முத்திரை செய்யவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். சுவாச இயக்கத்தில் முச்சுக்காற்று உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் அமைதியாக ஒரு நிமிடம் கவனிக்கவும்.

    இப்போது மூலாதார சக்கரத்திலிருந்து அக்ஞா சக்கரம் வரை உடலின் முன் பக்கதத்திலிருந்து கவனம் செலுத்திக் கொண்டு வந்து ஆக்ஞாவிலிருந்து தலையின் பின் பகுதி வழியாக முதுகெலும்பின் கீழ் உள்ள மூலாதார சக்கரம் வரை கவனம் செலுத்த வேண்டும். மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா வரை கவனம் செலுத்தும் போது மூலா என்ற ஒன்று மேல் நோக்கி செல்வதாகவும், ஆக்ஞாவிலிருந்து மூலாதாரம் வரை கவனம் செலுத்தும் போது ஹம் என்ற ஓசை கீழ் நேக்கி செல்வதாக மனதால் நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் போது  மூலாதாரத்தில் இருந்து ஆக்ஞா, ஆக்ஞாவிலிருந்து மூலாதாரம் வரை மீண்டும் மீண்டும் உங்கள் உணர்வு சக்கரங்கள் உள்ள உடல் பகுதியின் மீது மட்டுமே இருக்க வேண்டும். சுவாச இயக்கத்தின் மீது கவனம் செலுத்தக் கூடாது.

    செய்முறை 1ல் மூச்சுக் காற்றோடு இலோ-ஹம் என்ற ஒலியை உண்டாக்கிச் செய்யும் லோவும் தியானமுறை கூறப்பட்டது. செய்முறை 2-ல் மூச்சுக் காற்றோடு இணைந்து லோ-ஹம் மந்திரத்தை தியானிக்காமல் சக்கரங்களை மட்டும் நினைத்து லோ-ஹம் தியானத்தை செய்யும்படி கூறப்பட்டுள்ளது.

    பயிற்சி குறிப்பு : இந்த பயிற்சியை தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்ய முடியாதவர்கள் செய்முறை பயிற்சி-1ஐ யோ அல்லது செய்முறை பயிற்சி 2ஐ யோ ஒரு நாளில் ஒருவேளை பயிற்சி செய்யலாம். இரண்டு தியான முறைகளையும் செய்ய முடியாதவர்கள் தொடர்ந்து ஒரு தியான முறையை கடைப்பிடிக்கலாம்.

    இந்த பயிற்சியை வெறும் வயிற்றோடு இருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். உணவு உட்கொண்ட பிறகு 4 மணி நேரம் கழித்து இந்த தியான பயிற்சியை செய்யலாம். காலை சூரிய உதயத்திற்கு முன்பும், மாலை சூரிய அஸ்தமனத்தின் போதும் இந்த தியான பயிற்சியை செய்வது சிறந்தது.

    பலன்கள் : சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும். மன வலிமை கூடும். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். மன அழுத்தம் நீங்குவதற்காக செய்யும் பவன முக்தாசனம், பிராணாயாமம், தியானம் ஆகிய முன்னேற்றம் ஒன்றன்பின் ஒன்றாக செய்ய முடியாதவர்கள் பிராணாயாமம் அல்லது தியான பயிற்சியை மட்டும் கூட செய்யலாம். பவன முக்தாசனம், பிராணாயாமம், லோ-ஹம் தியானம் ஆகிய மூன்றில் எதை பயிற்சி செய்தாலும் பயிற்சியின் முடிவில் சுவாசத்தில் ஓய்வாக 5 நிமிடம் இருக்க வேண்டும்.
    ×