search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ujjayi Pranayama"

    ஷித்தாலி பிராணாயாமம் நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
    செய்முறை :

    யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும்.

    இப்போது மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும். அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும். வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும். பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.

    பலன்கள்

    இந்த பிராணாயாமம் மூச்சினை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், உடலினுள் வெப்பத்தையும் உருவாக்குகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது. உடல், மனம் இரண்டும் புத்துணர்வு அடைகிறது.

    நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. உள்ளே சேர்ந்திருக்கும் சளி இதனால் வெளியேறி விடும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
    இந்த பிராணாயாமம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயாளிகளுக்கு பயனுள்ளது. மூச்சின் வேகமும், இருதயத்தின் வேகமும் குறைந்து சீராக இயங்கும். நுரையீரலும், இருதயமும் நல்ல ஆரோக்கியத்தை அடையும்.
    பெயர் விளக்கம்:  உஜ் என்றால் உத்தமமான, மேலான என்றும் ஜய என்றால் வெற்றி என்றும் பொருள்படுகிறது. மனதை அமைதிப்படுத்துவதற்கு, உத்தமமான வெற்றியை இப்பிராணாயாமம் அளிப்பதால் இப்பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை: அனுகூலமான ஏதாவது ஒரு தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும். நிதானமாகவும், ஆழமாகவும், மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும்போது தொண்டை பாகத்தில் க்ளாட்டிஸ் என்ற பகுதியில் லேசான அழுத்தம் கொடுத்து சிறிதளவு அடைத்து தொண்டையிலிருந்து ஸ்.....ஸ் என்ற ஒலியை உண்டு பண்ணவும்.

    பிறகு மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் தொடர்ந்து வெளியே விடவும். மூச்சுக் காற்றை வெளியே விடும்போது தொண்டையிலிருந்து உஷ்....உஷ்... என்ற ஒலியை உண்டு பண்ணவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும். ஆரம்பத்தில் 10 முதல் 15 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்து பயிற்சியில் 20 முதல் 40 சுற்று வரை பயிற்சி செய்யலாம். மூச்சை உள்ளே இழுக்கும்போது மார்பையும், வயிற்றையும் நன்கு விரிக்கவும். மூச்சை வெளியே விடும்போது மார்பை சம நிலைக்கும், அடிவயிறை ஓரளவு உள்ளுக்கும் சுருக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: உள்மூச்சின் போதும், வெளிமூச்சின் போதும் உண்டு பண்ணப்படும் ஒலியின்மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: இந்த பிராணாயாமத்தை முதுகை நேராக வைத்துக் கொண்டு நின்ற, உட்கார்ந்த, படுத்த, நடக்கும் நிலையிலும் பயிற்சி செய்யலாம்.

    பயன்கள்: மனம் அமைதி பெறும். நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் வலுபெறும். உறக்கமின்மை நீங்கும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயாளிகளுக்கு பயனுள்ளது. மூச்சின் வேகமும், இருதயத்தின் வேகமும் குறைந்து சீராக இயங்கும். நுரையீரலும், இருதயமும் நல்ல ஆரோக்கியத்தை அடையும்.

    இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம். இந்த ஆசனம் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.
    ஒருவருக்கு ஹீமோகுளோபின் அளவு குறையும்போது தலைசுற்றல், தலைவலி, சோர்வு மற்றும் அசதி ஏற்படும். இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிலவகை மூச்சுப்பயிற்சிகளையும், யோகாசனங்களையும் தொடர்ச்சியாக செய்து வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.

    உஜ்ஜயி பிராணாயாமம்

    யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும்.

    இப்போது மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும். அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும். வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும். பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.

    பலன்கள்

    இந்த பிராணாயாமம் மூச்சினை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், உடலினுள் வெப்பத்தையும் உருவாக்குகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது. உடல், மனம் இரண்டும் புத்துணர்வு அடைகிறது.

    நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. உள்ளே சேர்ந்திருக்கும் சளி இதனால் வெளியேறி விடும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.
    ×