search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power consumers"

    • இணைப்பு பெறுவதில் தாமதம் உள்ளிட்ட குறைகளை புகார்களாக தெரிவித்தனர்.
    • முகாமில் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார், மற்றும் அதிகாரிகள், மின் நுகர்வோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் : 

    பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் - உடுமலைரோட்டில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு மின் இணைப்புகளில் விநியோக குறைபாடு, இணைப்பு பெறுவதில் தாமதம் உள்ளிட்ட குறைகளை புகார்களாக தெரிவித்தனர்.இந்த முகாமில் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார், மற்றும் அதிகாரிகள், மின் நுகர்வோர் கலந்து கொண்டனர்.

    • காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது.
    • மின்சார விநியோகம் குறித்து குறைகள்,புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் - உடுமலை ரோட்டில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறுகிறது .இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள்,புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

    • பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்தில் மானூர்பாளையம் பிரிவு அலுவலகதிற்குட்பட்ட காசிலிங்கபாளையம்,நிறையூர் மேற்கு சடையபாளையம் ஆகிய மின் பகிர்மான அலுவலகத்திற்குட்ட பகுதி மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை. ஆகையால் கடந்த ஆகஸ்டு மாதம் கணக்கீட்டு பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோரிக்கைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
    • மின்சார வாரிய அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாளை 14-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்குஅவினாசி மின்சார வாரிய அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். எனவே இந்த கூட்டத்தில் அவினாசி சுற்றுவட்டார பகுதி மின்நுகர்வோர் கலந்துகொண்டு தங்களது குறைகளை,கோரிக்கைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×