search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plus two result"

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் குமரி மாவட்ட மாணவ, மாணவிகள் 95.08 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    நாகர்கோவில்:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் குமரி மாவட்ட மாணவ, மாணவிகள் 95.08 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இது மாநிலத்தில் 11-வது இடமாகும். கடந்த ஆண்டு 95.75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 11-வது இடம் பெற்றிருந்தனர். குமரி மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் 240-ஐ சேர்ந்த 11 ஆயிரத்து 128 மாணவர்களும், 13 ஆயிரத்து 270 மாணவிகளும் மொத்தம் 24 ஆயிரத்து 398 பேர் தேர்வு எழுதினார்கள்.

    இவர்களில் மாணவர்கள் 10,197 பேரும், மாணவிகள் 13,001 பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மொத்தம் 23 ஆயிரத்து 198 பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.63 ஆகும். மாணவிகள் 97.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 54 அரசு பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 547 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 213 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.98 சதவீத தேர்ச்சி ஆகும். அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் குமரி மாவட்டம் மாநிலத்திலேயே 2-வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. மாற்றுதிறனாளிகள் 139 பேர் தேர்வு எழுதியதில் 75 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவி அதிகபட்சமாக 1180 மார்க் எடுத்து உள்ளார். 1151-க்கு மேல் 16 மாணவர்களும், 40 மாணவிகளும் 1126 முதல் 1150 வரை 42 மாணவர்களும், 112 மாணவிகளும் மார்க் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    ×