search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perur accident"

    பேரூர் அருகே நள்ளிரவு தடுப்பு சுவரில் சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் 4 பயணிகள் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் கோவைக்கு சுற்றுலா வந்தனர். பஸ்சை ஆந்திர மாநிலம் குண்டுரை சேர்ந்த கல்யான் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் நள்ளிரவு 1.30 மணியளவில் கோவை- சிறுவானி ரோடு பேரூர் அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது.

    இதில் பஸ் இருந்த சுற்றுலா பயணிகள் நெல்லூரை சேர்ந்த பிரசாத் என்பவரது மனைவி ரத்தினம் (59), எட்டி பிரசாத் (65), மைக்கேல் (53), பென்னை (22) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×