search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூர்"

    • கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசையை முன்னிட்டு பேரூருக்கு திரண்டு வருவர்.
    • நொய்யல் ஆற்றுக்கு சித்திரைச்சாவடி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பேரூர்,

    கோவை மாவட்டம் பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பண மண்டபம் உள்ளது. இது காசிக்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்பெற்றது.

    பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் கொடுத்து விட்டு, நீராடியபிறகு பட்டீஸ்வரரை வழிபட்டால் முன்னோரின் ஆன்மா சாந்தி அடையும் என்று ஐதீகம்.

    எனவே தமிழகம் மட்டு மின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் பேரூர் வந்து தர்ப்பணம் கொடுத்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வருகிறது. நாளையும் (17-ந் தேதி), ஆகஸ்டு 16-ந் தேதியும் வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தர்ப்பண மண்டபத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பேரூர் நொய்யல் ஆற்றில் தற்போது நீர்வரத்து இல்லை. எனவே ஆற்றங்கரைகள் வறண்டு காட்சி அளிக்கின்றன.

    ஆடி அமாவாசை நாளில் முன்னோருக்கு திதி கொடுக்கும் பக்தர்கள், நீராடியபிறகு பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

    இதனை கருத்தில் கொண்டு பேரூர் தர்ப்பண மண்டபம் அருகிலுள்ள ஆற்றங்கரையோரத்தில், பக்தர்களின் வசதிக்காக பைப்லைன் அமைத்து பிரத்யேக ஷவர் வசதி ஏற்படுத்தி தருவது என்று பேரூர் பேரூராட்சி நிர்வாகம் முடிவுசெய்து உள்ளது.

    இதற்காக அங்கு பைப்லைன்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதன்மூலம் பேரூருக்கு தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்கள், நொய்யல் ஆற்றங்கரையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள ஷவரில் ஆனந்தமாக நீராடிவிட்டு பட்டீஸ்வரரை வழிபட்டு திரும்ப இயலும்.

    பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களின் வசதிக்காக பிரத்ேயக ஷவர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டு இருப்பது, பக்தர்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் ஆடி அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசையை முன்னிட்டு பேரூருக்கு திரண்டு வருவர். எனவே பக்தர்களின் வசதிக்காக காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.

    நொய்யல் ஆற்றுக்கு சித்திரைச்சாவடி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு அங்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். அப்படி செய்தால் ஆடி 18 அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் நொய்யல் ஆற்றில் நீராடி இறைவனை மகிழ்ச்சியாக வழிபட இயலும்.

    எனவே மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை நிர்வாகமும் ஒருங்கிணைந்து நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, தீத்திபாளையம் ஊராட்சி பகுதிகள் உள்ளது.
    • பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    பேரூர்

    சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டி பேரூர் பேரூராட்சி, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, தீத்திபாளையம் ஊராட்சி பகுதிகள் உள்ளது.

    இந்த பகுதிகளில் சிறுவாணி மெயின் ரோடு பகுதிகளில், ஏராளமான குதிரைகள் குட்டிகளுடன் காலை, இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றி தெரிகிறது.

    இதனால் காலை, மாலை வேலைக்கு சென்று திரும்பும் வாகன ஓட்டிகளும், பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

    மேலும், ஆறுமுகக் கவு ண்டனூர், பச்சாபாளையம், செட்டி பாளையம், காளம்பா–ளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஊருக்குள் புகுந்துவிடும் குதிரை கூட்டங்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பின் தெருக்களிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து, அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ஒன்றுக்கொன்று கோபத்துடன் சண்டை போட்டுக் கொண்டு ஆவேசமாக ரோடுகளில் ஓட்டம் பிடிப்பதால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக, பேரூரிலிருந்து சிறுவாணி மெயின் ரோட்டில் தெற்கே மாதம்பட்டி வரை, ஆங்காங்கே குதிரைகள் கூட்டம் கூட்டமாக ரோடுகளில் உலா வருகிறது.

    இதனால் பைக், கார், லாரி, பஸ்களில் செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால், காலையில் அலுவலகம் மற்றும் வேலைக்கு அவசரமாக செல்வோர் சிரமப்படுவதோடு, ரோடுகளில் குதிரைகள் கூட்டம், கூட்டமாக குறுக்கிலும், மறுக்கிலும் வேகமாக ஓடுவதால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.

    மேலும், சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டியுள்ள ஊருக்குள் புகுந்து விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு தெருக்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக ஆவேசமாக கணைத்தபடி ஓட்டம் பிடித்து ரோட்டில், குறுக்கும், மறுக்கிலும் ஓடி வருகிறது.

    யாரோ தனியார் மூலம், இந்த குதிரைகள் பொதுவெளியில் விடப்பட்டு வருகிறது. பேரூர் போலீசாரிடமும், இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும், யாரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நிற்காமல் சென்று விடுவதாக புகார் கூறி வருகின்றனர்.
    • பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்ல முடியாமல் இப்பகுதி குடியிருப்பு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

    பேரூர்:

    பேரூர் அருகே தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிறுவாணி மெயின்ரோட்டில், மரக்கடை பஸ் ஸ்டாப் பகுதி உள்ளது. இந்த பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நிற்பதில்லை என தெரிகிறது.

    குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நிற்காமல் சென்று விடுவதாக புகார் கூறி வருகின்றனர்.

    இதனால், குறித்த நேரத்துக்கு பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்ல முடியாமல் இப்பகுதி குடியிருப்பு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

    இப்பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரி, ஏற்கனவே, பேரூர் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பங்கள் மூலமாக பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    கடந்த பல மாதங்களுக்கு முன்பே, கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எவ்வித நடவ–டிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள், இன்று காலை மரக்கடை பஸ் ஸ்டாப் பிரிவு-சிறுவாணி மெயின் ரோட்டில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறுவாணி மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் வந்த 10 அரசு பஸ்களை சிறைபிடித்து போ–ராட்டத்தில் ஈடுபட்ட–னர்.

    இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் மறியலில் ஈடுபட்டோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் இறுதியில், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் மறியலை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், சிறுவாணி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×