search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pathan"

    • 'பதான்' படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
    • இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.

     

    இந்த பாடலில் தீபிகா நீச்சலுடையில், கவர்ச்சியாக நடித்து உள்ளார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீது எதிர்மறையான கருத்துகளும் வருகின்றன. பலர் இந்த பாடல் ஆபாசமாக உள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர். இதனுடன் பதான் புறக்கணிப்பும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    இந்த படத்திற்காக தீபிகா 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கவர்ச்சி உடையில் நடனமாடுவதற்காக தீபிகா படுகோனே சம்பளத்தை உயர்த்தியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 29 பந்துகளை சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆன ரிஷாப் பந்த், இர்பான் பதான், ரெய்னாவுடன் இணைந்துள்ளார். #ENGvIND #RishabhPant

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 76.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

    இதையடுத்து, இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. புஜாராவின் சிறப்பாக சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இங்கிலாந்தை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 5 விக்கெட்டும், பிராடு 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. நேற்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவின் முதல் இன்னிங்சில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷாப் பாந்த் 5-வது விக்கெட் ஆக களமிறங்கினார். ரன் எடுப்பதை விட விக்கெட்டை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்ததால், அவர் மெதுவாகவே பந்துகளை சந்தித்தார். ரன்கள் எடுக்க முயற்சிக்கவில்லை.

    29 பந்துகள் சந்தித்த பாந்த் மொயின் அலி பந்தில் அவுட் ஆனார். 29 பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆன பாந்த் இர்பான் பதான், ரெய்னா உடன் இணைந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் பதான் 29 பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆனார். 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ரெய்னா 29 பந்துகள் சந்தித்து டக் அவுட் ஆனார். மேற்கண்ட இரு போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

    மேலும், ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் பதான், ரெய்னா, பாந்த் ஆகிய மூவருமே இடக்கை பேட்ஸ்மேன்கள். மூவருமே சுழற்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×