என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "NZvSL"
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 373 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் 102 ரன்னும், மேட் ஹென்றி 72 ரன்னும், டாம் லாதம் 67 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
18 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் 20 ரன்னுடனும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
- தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அரை சதம் கடந்து அசத்தினார்.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் அரை சதமடித்தார். அவர் 67 ரன்னில் அவுட்டானார். டேவன் கான்வே 30 ரன்னில் வீழ்ந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 165 ர்ன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 40 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை சார்பில் லஹிரு குமாரா, அசிதா பெர்னாண்டோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களை குவித்தது.
- நியூசிலாந்து சார்பில் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குசால் மெண்டிஸ் 87 ரன்னும், கேப்டன் திமுத் கருணரத்னே 50 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் மேத்யூஸ் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் 7000 ரன்களை எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் சாதனையை ஏஞ்சலோ மேத்யூஸ் முறியடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் இடம் பெற்றிருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்நிலையில் இலங்கை அணியின் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யாவின் சாதனையை மேத்யூஸ் முறியடித்துள்ளார்.
ஜெயசூர்யா 110 டெஸ்டில் 6973 ரன்கள் எடுத்த நிலையில், மேத்யூஸ் 101 டெஸ்டில் 7000 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் 13 சதம், 38 அரைசதங்களை அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் குமார் சங்ககரா (12,400) முதலிடத்திலும், ஜெயவர்த்தனே (11,814) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இந்நிலையில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதல் நான்கு பேட்ஸ்மேன்களான மார்ட்டின் கப்தில் (1), கொலின் முன்றோ (16), டிம் செய்பெர்ட் (2), ஹென்ரி நிக்கோல்ஸ் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து 27 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
அதன்பின் வந்த ராஸ் டெய்லர் (33), மிட்செல் சான்ட்னெர் (13), டக் பிரேஸ்வெல் (44) ரன்களும், ஸ்காட் குகெலெஜின் ஆட்டமிழக்காமல் 15 பந்தில் 35 ரன்களும், டிம் சவுத்தி 8 பந்தில் 13 ரன்களும் சேர்க்க நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் சமரவிக்ரமாக (0), டிக்வெல்லா (18) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
அதன்பின் வந்த குசால் பெரேரா 23 ரன்களும், குசால் மெண்டிஸ் 17 ரன்களும், திசாரா பெரேரா 43 ரன்களும் சேர்த்தனர். திசாரா பேரேரா ஆட்டமிழக்கும்போது இலங்கை 12.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்திருந்தது. 45 பந்தில் 52 ரன்கள்தான் தேவைப்பட்டது. அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 16.5 ஓவரில் 144 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதனால் நியூசிலாந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி சார்பில் பெர்குசன், இஷ் சோதி தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இந்த தோல்வியின் மூலம் ஒரு வெற்றி கூட பெற முடியாமல் இலங்கை வெறுங்கையோடு திரும்பியது.
ராஸ் டெய்லர்
பின்னர் 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் நிரோஷன் டிக்வெல்லா (46), தனஞ்ஜயா டி சில்வா 36 ரன்களும், குசால் பேரேரா 43 ரன்களும் சேர்த்தனர். இதனால் இலங்கை அணி 15.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்தது.
சதம் அடித்த நிக்கோல்ஸ்
ஆனால் குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், தசுன் ஷனகா 2 ரன்னிலும் ஆட்டமிழக்க இலங்கை தடுமாற ஆரம்பித்தது. திசாரா பேரேரா 63 பந்தில் 80 ரன்களும், தனுஷ்கா குணதிலகா 31 ரன்களும் எடுக்க இலங்கை 41.4 ஓவரில் 249 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
திசாரா பெரேரா
இதனால் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது. ராஸ் டெய்லர் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.
இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுத்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டிம் சவுத்தி (துணைக்கேப்டன்), 2. பெர்குசன், 3. மார்ட்டின் கப்தில், 4. ஸ்காட் குகேலெஜின், 5. கொலின் முன்றோ, 6. ஜிம்மி நீசம், 7. ஹென்ரி நிக்கோல்ஸ், 8. கிளென் பிலிப்ஸ், 9. சேத் ரேன்ஸ், 10. மிட்செல் சான்ட்னெர், 11. டிம் செய்பெர்ட், 12. இஷ் சோதி, 13. ராஸ் டெய்லர்.
பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. குசால் பெரேரா (102), டிக்வெல்லா (76), குணதிலகா (43) ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதிலும் இலங்கை 326 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி பேட்டிங் செய்யும்போது இலங்கை பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து இலங்கை வீரர்களுக்கு தலா 10 சதவிகிதமும், கேப்டன் மலிங்காவிற்கு 20 சதவிகிதமும் அபராதம் விதித்தது ஐசிசி.
49-வது ஓவரை திசாரா பேரேரா வீசினார். இந்த ஓவரில் நீசம் முதல் நான்கு பந்துகளையும் இமாலய சிக்சருக்கு தூக்கினார். ஐந்தாவது பந்து நோ-பால். இதில் இரண்டு ரன்கள் அடித்தார். நோ-பால் என்பதால் அதற்குப் பதிலாக வீசிய பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஐந்து பந்தில் தொடர்ச்சியாக ஐந்து சிக்சர்கள் விளாசிய நீசம் கடைசி பந்தையும் சிக்சருக்கு தூக்கி சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். இந்த ஓவரில் திசாரா பெரேரா 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளார் திசாரா பெரேரா. இதற்கு முன் கடந்த 2013-ல் தென்ஆப்பிரிக்கா வீரர் ராபின் பீட்டர்சன் திசாரா பெரேரா ஓவரில் 35 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிம்மி நீசம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப்பின் இன்றுதான் சர்வதேச போட்டியில் களம் இறங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் களம் இறங்கிய முதல் ஆட்டத்திலேயே ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். 13 பந்தில் 6 சிக்சருடன் 47 ரன்கள் குவித்த நீசம், அதிவேக அரைசதம் என்ற சாதனையை தவறவிட்டார்.
நியூசிலாந்து - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
கொலின் முன்றோ 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து கப்தில் உடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரனமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேன் வில்லியம்சன் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மார்ட்டின் கப்தில் 139 பந்தில் 138 ரன்கள் விளாசி வெளியேறினார்.
நீசம்
அதன்பின் வந்த ராஸ் டெய்டர் 54 ரன்களும், நீசம் ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் அடிக்க நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.
பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா (76), குணதிலகா (43) ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். அதன்பின் குசால் பெரேரா அற்புதமாக விளையாடினார்.
குணதிலகா
ஆனால் குசால் மெண்டிஸ் (18), சண்டிமல் (10), குணரத்னே (11), திசாரா பேரேரா (4) சொற்ப ரன்களில் வெளியேற இலங்கை அணியின் தோல்வி உறுதியானது. குசால் பெரேரா 86 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இலங்கை 49 ஓவரில் 326 சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 45 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டம் நாளை மவுண்ட் மவுங்கானுயில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடி போராடும். டெஸ்ட் தொடரை போல் ஒரு நாள் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் நியூசிலாந்து உள்ளது.
74 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்து இருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது. நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதம், நிக்கோல்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.
தொடக்க வீரரான லாதம் 370 பந்துகளில் 17 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 176 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 5-வது வீரராக களம் இறங்கிய நிக்கோல்ஸ் 225 பந்துகளில் 162 ரன்கள் (அவுட் இல்லை) குவித்தார். இதில் 16 பவுண்டரிகள் அடங்கும்.
நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கை அணிக்கு 660 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
660 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி இன்றைய 3-வதுநாள் ஆட்ட முடிவில் 24 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ளது. இலங்கை அணியின் வெற்றிக்கு 636 ரன்கள் தேவை. கைவசம் இரண்டு விக்கெட்டுக்கள் உள்ளன. இரண்டு நாட்களில் 636 ரன்கள் என்பது எளிதான காரியம் அல்ல. இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்