என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Muthupettai"
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சாமியப்பாநகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
செந்தில்குமார் நாகை மாவட்டம் வாய்மேட்டில் நகை அடகு கடை நடத்தி வந்தார். அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ரூ.60 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
அவரால் அசல் மற்றும் வட்டியை கட்ட முடியவில்லை. அவரை கடன் கொடுத்தவர்கள் தொல்லைபடுத்தி வந்ததால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்து நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளிடம் கூறினார். அதனை கேட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர்.
இதனால் மனம் மாறிய செந்தில்குமார் குடும்பத்துடன் எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு காரில் சென்றார்.
இதைத்தொடர்ந்து முத்துப்பேட்டையை அடுத்த பாண்டிசத்திரம் என்ற இடத்திற்கு சென்ற செந்தில்குமார் அங்கு காரை நிறுத்தினார். பின்னர் காருக்குள் இருந்துகொண்டு தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் காருடன் எரிந்து அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் எடையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் தீக்குளித்து உடல் கருகிய நிலையில் கிடந்த செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்