search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murdered case"

    கடலூரில், அ.தி.மு.க. பிரமுகர் கொலை சம்பவத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால், தேவனாம்பட்டினம் மீனவ கிராமம் நேற்று 4-வது நாளாக வெறிச்சோடி கிடந்தது.
    கடலூர்:

    கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக கடலூர் முதுநகர் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும், தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் இடையே கடந்த 15-ந்தேதி மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த தேவனாம்பட்டினம் மீனவர்கள் அரிவாள், கத்தி, சுளுக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில், சோனாங்குப்பத்தைச்சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு மீனவ கிராமங்களிலும் பதற்றம் நீடித்து வருகிறது. அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை தொடர்பாக கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவனாம்பட்டினத்தைச்சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகிறார்கள்.

    அதேபோல் சம்பவத்தன்று சோனாங்குப்பத்துக்கு ஆயுதங்களுடன் சென்ற மீனவர்களை தடுக்க முயன்ற தேவனாம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்றதாக 5 பேரை தேவனாம்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் சோனாங்குப்பம் மற்றும் தேவனாம்பட்டினம் மீனவ கிராமங்களில் உள்ளூர் மட்டுமின்றி விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை போன்ற வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கடலிலும் 4 படகுகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    இந்த சம்பவங்களில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்காக 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினரும் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இது தவிர தேவனாம்பட்டினம், துறைமுகம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு கூடுதலாக 16 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே போலீசாருக்கு பயந்து தேவனாம்பட்டினம் மீனவர்கள் கடந்த 15-ந்தேதி இரவில் இருந்தே ஊரை விட்டு வெளியே சென்று தலைமறைவாக இருக்கின்றனர். ஆண்கள் வெளியூர்களில் தலைமறைவாக இருப்பதால் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மட்டுமே உள்ளனர்.

    அவர்களும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால், தேவனாம்பட்டினம் மீனவ கிராமம் நேற்று 4-வது நாளாக வெறிச்சோடி கிடந்தது. சோனாங்குப்பம் மீனவ கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இருந்தாலும், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கும் ஒரு வித இறுக்கமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி சோனாங்குப்பத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மீனவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக தேவனாம்பட்டினம் மீனவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 
    சசிகுமார் கொலை வழக்கில் கைதானவர்களுடன் தொடர்புடைய மேலும் 13 வாலிபர்களிடம் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் முபாரக்(35), சதாம்உசேன் (27), சுபைர்(33), அபுதாகீர் (32) ஆகிய 4 பேரை சி.பி.சி. ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கின் பின்னணியில் ஒரு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

    இவ்வழக்கில் கைதான முபாரக் உள்ளிட்ட 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த மார்ச்18-ந் தேதி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.

    இதைத்தொடர்ந்து நேற்று செல்வபுரத்தை சேர்ந்த என்ஜினீயர் பெபின் ரகுமான்(25), உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த அனீஷ்(32), குனியமுத்தூர் சுகுணாபுரத்தை சேர்ந்த ஹைதர் அலி(33), துடியலூர் சேரன் காலனியை சேர்ந்த சதாம் உசேன், வெள்ளக் கிணறு பகுதியை சேர்ந்த முகமது அலி ஆகியோரது வீடுகளில் சோதனை நடந்தது.

    இந்த சோதனையில் ஒரு லேப்டாப், டைரி, 3 சி.டி.க்கள், செல்போன்கள், 50-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரிடமும் விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அவர்களை ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு கூறி சென்றனர்.

    கைப்பற்றப்பட்ட செல்போன், சிம்கார்டுகள், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலக ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சசிகுமார் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட முபாரக் உள்பட 4 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் வீடுகளில் சோதனை நடத்தப்பட் டது. இதில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    என்.ஐ.ஏ. விசாரணையில் மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதன் பேரில் மேலும் 13 வாலிபர்களிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    இதற்கிடையே என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்ற பெபின் ரகுமான், ஹைதர் அலி, அனீஸ் ஆகியோர் குடும்பத்தினருடன் வந்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாலை நேரத்தில் எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதம் செய்துள்ளனர். வெளியில் இருந்து லேப்டாப்பை கொண்டு வந்து வைத்து ஏதோ காகிதங்களில் எழுதி மிரட்டி கையெழுத்து பெற்றனர். எனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

    ×