search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother's memorial day"

    • தாயாரின் நினைவு நாளில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

    திசையன்விளை:

    திசையன்விளை இசக்கி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி(வயது 42). இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

    இதனால் செந்தூர்பாண்டி மன வேதனையில் இருந்து வந்தார். கடந்த ஆண்டு அவரது தாயார் ராஜபூபதி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அவருக்கு நேற்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் காரணமாகவும் செந்தூர்பாண்டி யாருடன் பேசாமல் சோகமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

    ×