search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mini bus collapsed"

    காரிமங்கலம் அகரம் பிரிவு சாலையில் மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காரிமங்கலம்:

    கரூரில் உள்ள திருமண நிகழ்ச்சிக்குசென்று விட்டு உறவினர்கள் பலருடன் காவேரிப்பட்டணத்தை நோக்கி மினிபஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த மினி பஸ்சை  கரூர் வெண்ணாம் பட்டியை சேர்ந்த பெரியசாமி (25) என்பவர் ஓட்டி வந்தார்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பைபாஸ் ரோட்டில் கார் மற்றும் இந்த மினிபஸ் போட்டி போட்டுக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் அகரம் பிரிவு சாலை அருகே சென்றபோது காரும் வெகுவேகமாக மினிபஸ்சை முந்திசெல்ல முயன்றுள்ளது.

    அப்போது கார் மீது மினிபஸ் மோதாமல் இருக்க மினிபஸ்சை வலது புறமாக டிரைவர் பெரியசாமி திருப்பியபோது, வண்டி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மனிபஸ் சாலையில் உருண்டு கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கரூர் பகுதியை சேர்ந்த திருப்பதிராஜா, சாந்தி, ரவி, செல்வம் ஆனந்தி என்பவர் உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

    விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கு கார் ஓட்டுநர் முக்கிய காரணமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கார் ஓட்டுநரிடம் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    நடுரோட்டில் மினிபஸ் கவிழ்ந்ததால் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்பு ஏற்பட்டது.
    மினி பஸ் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த விபத்தில் 19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மகுடஞ்சாவடி:

    திருவண்ணாமலையில் இருந்து பக்தர்கள் 27 பேர் நேற்று இரவு ஒரு மினி பஸ்சில் புறப்பட்டு பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணியளவில் சேலம் அருகே உள்ள மகுடஞ்சாவடி சந்தை அருகே மெயின் ரோட்டில் பஸ் வந்தபோது திடீரென சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி, கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 46), சீனிவாசன் (35) மற்றும் இவரது மனைவி புஷ்பம்(28), விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த அங்கமுத்து (55) உள்பட 19 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

    பொதுமக்கள், பஸ்சுக்குள் சிக்கிய அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 19 பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் நடத்திய விசாரணையில், டிரைவர் தூக்க கலக்கத்தில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மினி பஸ்சை மோதியிருப்பது தெரியவந்தது.

    ×