search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lokesh rahul"

    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் புஜாராவிற்கு இடமில்லை. #ENGvIND
    இங்கிலாந்து -  இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    அலைஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மலன், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் குர்ரான், அடில் ரஸித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    முரளி விஜய், தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரகானே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, அஸ்வின்.
    நானாக இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளிவிஜய், ராகுல் ஆகியோரைத் தான் தொடக்க வீரர்களாக களம் இறக்குவேன் என்று கங்குலி கூறியுள்ளார். #Ganguly #MuraliVijay #lokeshrahul

    புதுடெல்லி:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர்களாக யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தவானின் மோசமான ஆட்டம் காரணமாக இந்த கேள்வி எழுகிறது.

    எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தவான் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இரண்டு இன்னிங்சிலும் அவர் ‘டக்’ அவுட் ஆனார். பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளத்தில் அவர் சிறப்பாக ஆட முடியாததால் ஏமாற்றமே.

    இந்த பயிற்சி ஆட்டத்தில் முரளிவிஜய், வீராட்கோலி தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதம் அடித்து இருந்தனர்.

    தவானின் மோசமான ‘பார்ம்’ காரணமாக அவர் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவாரா? என்ற கேள்வி இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளி விஜய்யையும், லோகேஷ் ராகுலையும் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனை யாளருமான கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வெளிநாடுகளில் தவான் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியது இல்லை. அவர் ரன்களை குவித்ததில்லை என்று சாதனைகள் சொல்கிறது.

    தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா எதுவாக இருந்தாலும் அவர் சரியாக ஆடவில்லை. தவானை பொறுத்தவரை ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர்.

    டெஸ்ட் போட்டியில் அவர் உள்நாட்டில் மட்டுமே தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இந்திய மண்ணில் சதம் அடித்ததை வைத்து அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்குவது சுவாரசியமே.


    நானாக இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளிவிஜய், ராகுல் ஆகியோரைத் தான் தொடக்க வீரர்களாக களம் இறக்குவேன்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    இதேபோல 3-வது வரிசையில் ஆடும் புஜாராவும் திணறி வருகிறார். 11 பேர் கொண்ட அணிக்கு அவர் தகுதியானவர் என்று இங்கிலாந்து முன்னாள் தொடக்க வீரர் டாரன்காக் தெரிவித்துள்ளார். #Ganguly #MuraliVijay #lokeshrahul

    பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் இந்த சீசனில் முதல் வீரராக 600 ரன்களை கடந்து ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். #KingsXIPunjab #KLRahul #VIVOIPL #IPL2018

    மும்பை:

    மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை செய்தன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

    இப்போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 94 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 652 ரன்கள் குவித்துள்ளதோடு, ஆரஞ்சு தொப்பியையும் தட்டிச்சென்றார். இந்த சீசனில் 600 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஒரு ஐபிஎல் சீசனில் ராகுல் 600 ரன்கள் எடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.



    மேலும் ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 600 ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ராகுல் தட்டிச்சென்றார். இந்த சீசனில் இதுவரை ராகுல் ஆறு முறை அரைசதம் அடித்துள்ளார். ராகுல் கடந்த சீசன்களில் விளையாடிய 38 போட்டிகளில் 725 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இந்த முறை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 652 ரன்கள் குவித்துள்ளார். 

    இந்த சீசனில் பேட்டிங்கில் அசத்திவரும் ராகுல் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் 32 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ராகுல் 65 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். #KingsXIPunjab #KLRahul #VIVOIPL #IPL2018
    ×