search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lived"

    • வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை தொப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர்.
    • நாளை அமாவாசை என்பதால் வாலைத்தார்களின் வரத்து குறைந்தால், விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம் வெங்கரை, கள்ளிப்பாளையம், பொத்தனூர் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் வாழைத்தார் பயிரிடப்பட்டுள்ளது.

    இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைத்தார்கள் கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் கரூர், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் வாழை தொப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர்.

    மேலும் இங்கு உற்பத்தி செய்யும் வாழைத்தார்களின் ஒரு பகுதியை விவசாயிகள் பரமத்திவேலூரில் நடைபெற்று வரும் தினசரி வாழைத்தார் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை அமாவாசை என்பதால் வாலைத்தார்களின் வரத்து குறைந்தால், விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது வழைத்தார்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து குறைந்துள்ளதால் தார்களின் விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    பரமத்திவேலூர் வாழைத்தார் மார்கெட்டில், பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.700 முதல் 1100 ரூபாய் வரையிலும், ரஸ்தாலி ரூ.600 முதல் 900 வரையிலும், கற்பூரவள்ளி ரூ. 550 முதல் 700 வரையிலும், ஏலரிசி வாழை ரு.250 முதல் 300 வரையிலும், பச்சை நாடன் ரு.400 முதல் 600 வரையிலும் மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ 10 வரையிலும் செவ்வாழைப்பழம் ஒன்று ரூ.12-க்கு விற்பனையானது. அமாவாசையை முன்னிட்டு கடந்த வாரத்தை விட தார் ஒன்றுக்கு ரூ.300 முதல் 500 வரை விலை ஏற்றத்தால் வாழை பயிரிட்ட விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூரில் வாழைத்தார் விலை மிகவும் உயர்ந்து காணப்பட்டது.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

    கடலூர்:

    கடலூர் அருகே ராமாபுரம், வழி சோதனை பாளையம், வெள்ளக்கரை , சாத்தான்குப்பம், கீரப்பாளையம், ஒதியடிகுப்பம், எஸ்.புதூர், சேடப்பாளையம் உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று சூறாவளி காற்று நள்ளிரவில் அடித்த காரணத்தினால் 700-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து பெருமளவில் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. மேலும் லட்சக்கணக்கான ரூபாய்கள் பயிரிடப்பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் திடீரென்று வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாழைத்தார்கள் சேதமாகி நாசமாயின.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு டன் கணக்கில் வாழைப்பழங்கள் மேற்கண்ட பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வாழை தார்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத்தொடர்ந்து கடலூர் சுற்றியுள்ள பகுதிகளில் வாழைத்தார்களை அறுவடை செய்யப்பட்டு ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அறுவடைக்கு முன்பு வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் தற்போது வாழைத்தார்கள் இல்லாமல் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


    இதன் காரணமாக கடலூர் உழவர் சந்தையில் செவ்வாழை 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 700 ரூபாய்க்கும், பூவன்பழம் 100 ரூபாய் முதல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழைத்தார் 500 ரூபாய்க்கும், ஏலக்கி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் 300 ரூபாய்க்கும், ரஸ்தாலி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை வாழைத்தார்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் விலை அனைத்தும் இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் வாழைப்பழம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இனி வருங்காலங்களில் அதிக அளவில் கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்நோக்கி உள்ள நிலையில் போதுமான அளவில் வாழைத்தார்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வரலாறு காணாத வகையில் வாழைத் தார்கள் மற்றும் வாழை பழங்கள் அதிக விலையில் விற்பனையாகும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×