search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "liquor bottle"

    சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2,880 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டிரைவரை கைது செய்துள்ளனர்.
    சீர்காழி:

    காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், சிவக்குமார், ஸ்டாலின் மற்றும் போலீசார் சீர்காழி அருகே சூரக்காடு முக்கூட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 60 அட்டை பெட்டிகளில் 2,880 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார், கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர், காரைக்கால் மாவட்டம் ராயல்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரெங்கசாமி மகன் சந்தோஷ் (வயது 28) என்பதும், காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை சீர்காழி அருகே உள்ள புத்தூருக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சந்தோசை கைது செய்தனர். மேலும் போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    புதுவையில் இருந்து காஞ்சீபுரத்துக்கு காரில் கடத்தப்பட்ட 700 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மதுபானங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதுபோல் மாவட்ட எல்லை முழுவதும் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மதுபானம் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அனிச்சம் குப்பம் என்ற இடத்தில் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதிகாலை 5 மணிக்கு புதுவையிலிருந்து அதி வேகமாக வந்து கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 700-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் புதுவை மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மதுபானம் கடத்தியது தெரியவந்தது. மேலும் கார் டிரைவர் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யார் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் (வயது 32) கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் கார் கோட்டகுப்பம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே தொண்டமான்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. திருவெறும்பூர், காட்டூர் பகுதிகளில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகள் கோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய விற்பனையாளர்கள் சிலர் இந்த கடைக்கு மாற்றப்பட்டனர். அதன்படி தொண்டமான்பட்டி கடையில் 5 பேர் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

    வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு கடையின் ஷட்டரை பூட்டி விட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று காலை டாஸ்மாக் கடை வழியாக சென்ற கிராம மக்கள் சிலர் அதன் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் போலீசார் சம்பவம் நடந்த டாஸ்மாக் கடைக்கு சென்று கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை வரவழைத்து உள்ளே சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட மதுபாட்டில்களில் சிலவற்றை அங்குள்ள வயல்வெளியில் வைத்து குடித்து விட்டு காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்றிருப்பதும், மீதி பாட்டில்களை தூக்கி சென்றதும் தெரிய வந்தது. சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையில் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில், திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×