search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollidam river"

    15 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியை கைவிடக்கோரி கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று முன்தினம் இரவு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர் சவுரிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் புனிதன் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    புதிய வீராணம் திட்டத்திற்காக இதே திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் ஜெயலலிதாவால் கைவிடப்பட்டது. இதனை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும். கொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்க தீவிரம் காட்டும் அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    மக்களின் பிரச்சினையை அரசுக்கு எடுத்துச் செல்லும் வகையில் போராடுபவர்கள் மீது அரசு பல வழக்குகளை போட்டு வருகிறது. 15 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முற்பட்டால் இங்கு ஒரு தூத்துக்குடி உருவாகும். மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் அனைத்து போராட்டத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பங்கேற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இதில் மாநில குழு உறுப்பினர் சின்னத்துரை, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவை சேர்ந்த ராஜேந்திரன், தனபால், தங்கையன், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வடிவேல்முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மே 17 இயக்கத்தை சேர்ந்த பாலாஜி, பா.ம.க. மாவட்ட தலைவர் ரவிசங்கர், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், த.மா.கா. கைலாசம் மற்றும் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசரணை நடத்தி வருகிறார்கள்.

    மண்ணச்சநல்லூர்,

    மே 23-

    கொள்ளிடம் ஆற்றில் அடை யாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.மண்ணச்சநல்லூர் வட்டம் மான்பிடிமங்கலம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரி அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று நேற்று கிடந்தது. ஐந்தரை அடி உயரத்தில் மாநிறமான அந்த நபர் கருப்பு, சிவப்பு கட்டம் போட்ட சாரம் (லுங்கி) மட்டும் அணிந்திருந்தார். அவர் யார்? எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை.இது குறித்து மாதவ பெருமாள் கோயில் கிராம நிர்வாக அலுவலர் கணேசன் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சார்பு ஆய்வாளர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யாரென்றும், அவர் எதனால் இறந்தார் என்றும் விசாரணை நடத்தி வருகிறார். போ லீசார் முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×