search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kitchen"

    பெண்களே இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…
    பெண்கள் படிப்பு, வேலை என்று இறங்கிவிட்டதால் சமையல் அறை அவர்களுக்கு கொஞ்சம் தூரமாகிவிட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் சமைக்கப் பழகுவதும், திருமணத்திற்குப் பிறகு சமைக்கப் படிப்பவர்களும் ஏராளம். பல பெண்கள் சமையல் கற்றுக் கொள்வதற்காக பயிற்சி வகுப்புகளுக்கு கூட செல்கிறார்கள்.

    பெண்கள் இப்படி மாறிவிட்டதால், ஆண்களுக்கும் சமைத்துப் பழகிக் கொண்டால்தான் நல்லது என்ற நிலை வந்துவிட்டது. குடும்பத்தினரை விட்டு தூரமாக இருந்து பணி செய்பவர்களும் தன் கையால் சமைத்து சாப்பிட வேண்டிய சூழலும் பெருகி இருக்கிறது.

    எது எப்படியோ… நீங்கள் இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…

    * என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முதலில் முடிவு செய்து விடுங்கள். அதற்கு தேவையான பொருட்களையும் பட்டியலிடுங்கள். பிறகு தோலை உறிக்க வேண்டியது, வெட்டி துண்டுகளாக்க வேண்டியது, அரைத்து பக்குவப் படுத்த வேண்டியது போன்ற வேலைகளை செய்து விடுங்கள். அதன்பிறகு பிறகு அடுப்பை பற்ற வையுங்கள்.

    * உதவிக்கு ஏற்கனவே சமையல் அனுபவம் உள்ளவர்களையோ அல்லது சமையல் புத்தகங்களையோ பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உதவிக்கு புத்தகமோ, ஆட்களோ இல்லாவிட்டால் கூட உங்கள் மீது நம்பிக்கை வைத்து களத்தில் இறங்கி விடுங்கள்.

    * நம்பிக்கையுடன் சமைத்து விட்டு வாயில் வைத்துப் பார்க்கும்போதுதான் உப்பு, உறைப்பு கூடியிருப்பது தெரியவரும். கவலையே படாதீர்கள். நேரமும், அனுபவமும் சிறந்த ஆசிரியர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து சமைத்துப் பாருங்கள். தவறுகளை மெள்ள மெள்ள திருத்திக் கொள்ளலாம்.

    * சமையலுக்கு முக்கியமானது பொருட்களின் அளவு தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எது எது தேவை என்பதைப்போலவே அவற்றை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. அதற்காக கரண்டி, கப் மற்றும் பாத்திரங்களின் அளவுகளை ஞாபகத்தில் வைத்திருப்பதன் மூலம் ஒவ்வொன்றின் அளவையும் மாற்றிவிடாமல் பயன்படுத்த முடியும்.

    * முதன் முதலாக சமைக்கும்போது எளிதாக சமைக்க முடிந்ததும், குறுகிய நேரங்களில் சமைக்கக் கூடியதுமான குழம்புகளை வைத்துப் பழகுங்கள்.

    அப்புறமென்ன! சீக்கிரமே நீங்களும் நளபாகனாக-நளபாகியாக மாறிவிடுவீர்கள்.
    மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.
    தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் மின் விசிறி சுற்றும், மின் விளக்கு எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. மின்சாரத்தை மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாக கேட்கிறோம். ஆனால் மின் ஆற்றலை சேமிப்பது நமக்கு மட்டுமல்ல, நமது நாட்டுக்கே நல்லது.

    மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் காற்று மாசை குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரண கார்கள் வெளியேற்றும் கார்பன்-டை ஆக்சைடை விட, ஒரு வீட்டின் மின்சார பயன்பாட்டால் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறும். பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் பிரிட்ஜ், ஏ.சி., மின்விளக்குகளுக்கு அதிகம் செலவாகிறது.

    ஏ.சி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடி வைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும். ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், அவற்றை நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும். எனவே இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

    வீட்டின் மின் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 20 சதவீதம் ஏ.சி.க்கு செலவாவதால் ஏ.சி. எந்திரத்தின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. ஏ.சி.யின் ‘அவுட்டோர் யூனிட்’டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலை சேமிக்க அது உதவும். வீட்டை கிழக்கு, மேற்காக அமைப்பதன் மூலமும், வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலை சேமிக்கலாம்.

    அதே போன்று பிரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான குளிர் நிலவும்படி பிரீசர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமான வரையில் பிரிட்ஜை அடிக்கடி மூடி திறப்பதைக் குறைத்து கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை பிரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.

    பிரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் பிரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. பிரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.

    வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம் பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும். எனவே வீடுதோறும் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுவை தடுப்போம்.
    பெண்களே அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டிய மிக்ஸியை புதிய அம்சங்களை பார்த்து எப்படி தேர்வு செய்வது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
    இன்று மிக்ஸி இல்லாத வீடுகளை பார்ப்பதே அரிது. எனவே, எல்லோருக்குமே மிக்ஸியின் பயன்பாடு மற்றும் அதன் அம்சங்கள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் அவ்வப்போது மாற்றிக்கொள்ள வேண்டிய மிக்ஸியை புதிய அம்சங்களை பார்த்து எப்படி தேர்வு செய்வது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

    மிக்ஸி வாங்கும்போது மேலோட்டமாக கவனிக்க வேண்டியது அதன் வாட்ஸ் (மின் உபயோகம்), ஆர்பிஎம், ஜார்களின் எண்ணிக்கை, உத்திரவாதம் மற்றும் விலை. தில் வாட்ஸ் எனும்போது 500 முதல் 750 வாட்ஸ் மின்சாரத்திறன் கொண்ட மிக்ஸியை தேர்ந்தெடுப்பது நல்லது. 1800-2000 ஆர்பிஎம் கொண்ட மிக்ஸியை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாண்டுகள் உத்திரவாதம் உள்ளதாலும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆன பிளேட் கொண்டதும் ஆன மிக்ஸியை தேர்ந்தெடுப்பதும் நல்லது. பொதுவாக பெரிய ஜார்கள் இரண்டும், ஜீசர் ஜார் ஒன்றும், சிறிய ஜார் ஒன்றும் போதுமானது. ஜீசர் ஜார் உள்ள மிக்சியை வாங்கிவிட்டால் ஜீசர் தனியாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

    பாதுகாப்பு அம்சங்கள்

    மிக்ஸி மின்சாரத்தில் இயங்குவது, மேலும் மிக கூர்மையான பிளேடுகள் கொண்டது என்பதால் பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது அவசியம். சேப்டி லாக் உள்ள மிக்ஸியை தேர்ந்தெடுப்பது நல்லது. ஜாரின் மூடி லேசாக திறந்து கொண்டாலும் மிக்ஸி ஓடாமல் நின்று விடும் அம்சம் உள்ளது மிகவும் உபயோகமாக இருக்கும். கரண்டியையோ, கையையோ விட்டு ஜாரின் ஓரத்தை கிளறும்போது தவறுதலாக மிக்ஸி ஓட ஆரம்பித்தால் கைவிரல் வெட்டப்படும் அபாயம் இந்த அம்சத்தால் தவிர்க்கப்படுகிறது.

    ஓவர் லோட் பாதுகாப்பு

    மிக்ஸியில் இருக்கும் திறனைவிட அதிகமாக மிக்ஸி ஓடினால் மோட்டார் கெட்டுவிடும் அபாயத்தை இந்த பாதுகாப்பு அம்சம் தவிர்க்கிறது. அதிக நேரமோ, அதிக சிரமத்துடன் மிக்ஸி ஓடுவது தெரிந்தால் மிக்ஸி உடனடியாக தானாகவே நின்றுவிடும். மோட்டார் நன்கு ஆறியபின் மிக்ஸியின் கீழ்புறம் உள்ள பட்டனை அமுக்கினால் மட்டுமே மீண்டும் ஓட ஆரம்பிக்கும். இந்த அம்சம் மிகவும் அவசியமானது.

    மிக்ஸி ஓடும்போது அதிரும். அந்த அதிர்வினால் மிக்ஸி கீழே விழுந்து விடும் அபாயம் இருப்பதால், அதன் கால் பகுதியில் வாக்யூம் லாக் இருக்கும். இந்த லாக் மிக்ஸியை திரையுடன் சேர்த்து ஒட்டிவிடும். இந்த அம்சமும் மிக முக்கியமானதாகும். 
    ரெப்ரிஜிரேட்டர் சரிவர பராமரித்தால்தான் அதன் குளுமை திறன் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தடுக்க முடியும். அந்த வகையில் ரெப்ரிஜிரேட்டர் பராமரிக்க தேவையான வழிமுறைகளை பார்க்கலாம்.
    அனைவரின் வீட்டிலும் தற்போது ரெப்ரிஜிரேட்டர் பயன்பாடு உள்ளது. சிறியது, பெரியது என்ற அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற அளவுகளில் ரெப்ரிஜிரேட்டர்கள் உள்ளன. அதிக விலை கொடுத்து வாங்கும் ரெப்ரிஜிரேட்டர்களை சரியாக பராமரிப்பது மூலமே சரிவர இயங்குவதற்கும், அதன் ஆயுட்காலம் நீட்டிப்பதற்கும் வழிவகை செய்யமுடியும். அதுபோல் ரெப்ரிஜிரேட்டர் சரிவர பராமரித்தால்தான் அதன் குளுமை திறன் மற்றும் உணவு பொருட்கள் வீணாவது தடுக்க முடியும். அந்த வகையில் ரெப்ரிஜிரேட்டர் பராமரிக்க தேவையான வழிமுறைகள் இதோ:-

    கண்டென்ஸர் காயில்களை சுத்தப்படுத்தவும்

    ரெப்ரிஜிரேட்டரின் சரியான இயக்கத்திற்கும், மின் செலவிற்கும் உதவுவது கண்டென்ஸர் காயில்கள்தான். இதில் அதிக தூசு மற்றும் அழுக்கு படிந்து விட்டால் இதன் இயக்கம் சரிவர நடைபெறாது. அதன் மூலம் அதிக மின் செலவு ஏற்படும். எனவே மூன்று மாதத்திற்கு ஒருமுறை தூசு விரட்டி (அ) வாக்யூப் கிளினர் வாயிலாக கண்டென்ஸர் காயிலை சுத்தம் செய்திட வேண்டும். கண்டென்ஸர் காயில் என்பது பிரிட்ஜின் பின்புறம் (அ) கீழ் பகுதியில் இருக் கும்.

    டிரையின் ஹோல் சுத்தம் செய்தல்

    புதிய மாடல் ரெப்ரிஜிரேட்டரில் சில வகையில் டிரையின் ஹோல் இருக்காது. ஆனால் சில மாடல்களில் தண்ணீர் வெளியேற வழிப்பாதையிருக்கும். அதனை அவ்வப்போது சுத்தம் செய்திட வேண்டும். அதுபோல் டிரிப் பேன்-யை வெளியில் எடுத்து கழுவி பொருத்த வேண்டும். நாம் உணவு பொருட்களின் துகள்கள் டிரையின் ஹோல்களில் அடைத்துக்கொண்டு துர்நாற்றம் ஏற்படவும், தண்ணீர் வழிந்து பிரிட்ஜ் உட்புறம் பரவும் வழி ஏற்படும். எனவே, அவ்வப்போது டிரையின் ஹோலை சுத்தம் செய்திடவேண்டும்.



    கேஸ்கட்டை சுத்தம் செய்திட வேண்டும்

    கேஸ்கட் என்பது ரெப்ரிஜிரேட்டர் கதவு மற்றும் பிரிசர் கதவுகளில் உள்ளது. இதுவே ரெப்ரிஜிரேட்டரின் உட்பகுதி குளுமை வெளியேறாமல் பாதுகாக்கும். இந்த கேஸ்கட் வெடிப்புகள் மற்றும் பிளவு ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அவ்வப்போது சோதித்திட வேண்டும். மேலும் இந்த கேஸ்கட்டை சுலபமாக வெளியே கழட்டி விடமுடியும். அவ்வாறு கழட்டி அதனை சோப்பு பவுடர் கொண்டு சுத்தம் செய்திட்டு பின் மாட்டி விடலாம். இதன் மூலம் கேஸ்கட் சுத்தமாவதுடன் அதில் வெடிப்பு, பிளவு ஏற்படாது.

    உட்புற டெம்பரேச்சர் அளவை கண்காணித்தல்

    அவ்வப்போது பிரிட்ஜின் உட்புற டெம்பரேச்சர் அளவை பரிசோதித்து சரி செய்திடல் வேண்டும். அதிக பொருட்கள் உள்ளபோது 37 முதல் 40 டிகிரி வரை பாரன்ஹிட் அளவு உள்ளவாறு பராமரித்தல் வேண்டும். பிரிஸரின் டெம்பரேச்சர் என்பது 0-5 பாரன்ஹீட் அளவு இருந்திட வேண்டும். டெம்பரேச்சர் சரியாக பராமரித்தல் மூலம் மின் செலவு குறையும்.

    வாட்டர் பில்டரை மாற்றவும்

    தற்போது வரும் ரெப்ரிஜிரேட்டர்களில் ஐஸ் மேக்சன் மற்றும் ராட்டர் டிஸ்பென்சர்கள் உள்ளன. அதில் வாட்டர் பில்டர்கள் உள்ளன. அவற்றை சரியான கால இடைவெளியில் மாற்றிட வேண்டும். பெரும்பாலும் 6 மாதத்திற்கு ஒருமுறை வாட்டர் பில்டர்களை மாற்றுவது அவசியம். அப்படியெனில் பிரிட்ஜ் நிறுவனம் வழங்கிய மேனுவலில் உள்ள அறிவுரைப்படி மாற்றுதல் வேண்டும்.

    பிரிட்ஜ் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்


    அதிக சூட்டுடன் உணவு பொருட்களை பிரிட்ஜ் உட்புறம் வைத்தல் கூடாது. அவ்வப்போது பிரிட்ஜ் கதவுகளை திறந்து மூடவோ, அதிக நேரம் கதவை திறந்து வைத்து இருப்பதோ கூடாது. இதன் மூலம் அதிக மின் செலவு மற்றும் பிரிட்ஜ் அதிக இயக்கத்திறனை கட்டுப்படுத்திட முடியும். பிரிட்ஜ் உட்புறத்தையும் அவ்வப்போது தூய்மை செய்திடவேண்டும். ரெப்ரிஜிரேட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் அளித்துள்ள பராமரிப்பு குறிப்புகளை படித்து பார்த்து அதன்படி அவ்வப்போது தூய்மை மற்றும் மாற்றவேண்டிய உபகரணங்களை மாற்றிடுதல் வேண்டும்.

    வினிகர் கொண்டு கேஸ்கட் மற்றும் உட்புற பகுதிகளை தூய்மை செய்வது மிக சிறப்பானதாக இருக்கும். 
    ×