search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Job placement camp"

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம் தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறும்.
    • இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதம் தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெறும்.

    இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த முகாம் முற்றிலும் இலவசமானது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. தகுதியும் விருப்பமும் உள்ளோர் அன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
    • கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், இணைய தள முகவரியிலும் ஏராளமா னோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகராட்சி சார்பில் வரும் 11ம் தேதி, திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று தங்கள் நிறுவனத்தில் உள்ள பணியிட ங்களுக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இதில் கலந்து கொண்டு தங்கள் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பைப் பெறுவதற்காக 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதற்காக வெளியிடப்பட்டுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும், இணைய தள முகவரியிலும் ஏராளமா னோர் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

    பள்ளி மற்றும் கல்லுாரி களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், வேலை தேடுவோர் மற்றும் தங்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தேடுவோர் பதிவு செய்து, பங்கேற்று பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் குறித்து பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக வலை தளங்களில் இந்த முகாம் குறித்து மேயர், கலெக்டர், கமிஷனர் ஆகியோர் வேண்டுகோள் விடுக்கும் பதிவுகள் வைரலாகி வருகிறது.

    முகாமுக்கான அரங்குகள் அமைக்கும் பணியை மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார். சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    • 3-ந்தேதி நடக்கிறது
    • காலை 10 மணிக்கு தொடங்குகிறது

    வேலூர்:

    விஐடியில் வேலைவாய்ப்பு துறையும் இயந்திரவியல் துறையும் இணைந்து வரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வி.ஐ.டி. அண்ணா அரங்கத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வளாக நேர்முக தேர்வு நடத்துகிறது.

    இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் டிப்ளமோ, பட்டய படிப்பை முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த வளாக நேர்முகத் தேர்வுக்கு இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமான ஃபாஸ்ட் சோலார் ,டி.வி.எஸ் வேலியோ, பிரேக்ஸ் இந்தியா , இன்டோ கூல், டெக்னிப் எனர்ஜிஸ், மெக்டர் மார்ட் மேலும் பத்திற்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    இதற்கான நுழைவு சீட்டினை தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளவும்.டிப்ளமோ படித்து முடித்தவர்கள் விஐடியில் உள்ள சில்வர் ஜூப்ளி டவர் 7-வது மாடி, அறை எண் 717 ல் பிப்ரவரி மாதம் 1-ம் தேதிக்குள் அனைத்து வேலை நாட்களில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நேர்முகத் தேர்விற்கு வருவோர்கள் பயோடேட்டா கல்வி சான்றிதழ்கள், ஆதார், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வரவேண்டும்.

    இதில் வேலூர் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை, டிப்ளமோ படித்தவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு விஐடி வேந்தர் டாக்டர் .கோ விசுவநாதன் கூறினார்.

    • மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
    • வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பல்லடம்,பொங்கலூர் வட்டார அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 242 இளைஞர்கள் கலந்து கொண்டனர் .அதில் 74 நபர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். திறன் பயிற்சிக்கு 31 நபர்கள் தேர்வாகினர். 15 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டது. மேலும் 23 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.6 கோடி தர மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் முத்து, ஜோசப் ரத்னராஜ், விஜயகுமார், மாவட்ட வள பயிற்றுநர் முனிராஜ், பல்லடம் வட்டார தொழில் மைய அலுவலர் ஹரிகரன், மற்றும் பல்லடம், பொங்கலூர், வட்டார மேலாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப்டெக்னாலஜி, சென்னை ராம்கோ சிமெ ண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி சிவகுமார், நிறுவனத்தில் வேலை செய்வதற்கான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டியூட் ஆப்டெக்னாலஜி, சென்னை ராம்கோ சிமெ ண்ட்ஸ் நிறுவனம் சார்பில் பொது வளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செய லாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார். ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி சிவகுமார், நிறுவனத்தில் வேலை செய்வதற்கான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் பற்றிய விவரங்களை கூறினார்.

    ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய சுற்றுகளாக வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் புதுவை பல்கலைக்கழகம், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மற்றும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெ க்னாலஜி கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார், கல்லூரி மேலாண்மை துறை தலைவர் பாஸ்கரன், பேராசிரியர் வைத்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி), சென்னை ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
    • இந்த வேலை வாய்ப்பு முகாமில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 400-க்கு மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (எம்.ஐ.டி), சென்னை ரெனால்ட் நிசான் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.

    முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனிதவள துறை மேலாளர் முகமத் நசீம் மற்றும் குழுவினர், நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினார்.

    இந்த வேலை வாய்ப்பு முகாமில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 400-க்கு மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.தனசேகரன், துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்த முகாமை கல்லூரி முதல்வர் எஸ்.மலர்க்கண் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த எம்.ஐ.டி. கல்லூரி, மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி, மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி, புதுவை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் நகரை சுற்றியுள்ள பல தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அனைத்து துறை இறுதி ஆண்டு மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் அந்நிறுவனத்தின் பணி நியமன ஆணை பெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை அதிகாரி எம்.ஜெயக்குமார் மற்றும் வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் செய்து இருந்தனர்.

    • தகுதி மிக்க வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அறை எண் 439, 4 வது தளம் மற்றும் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகிய இரண்டு இடங்களில் நாளை 22-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் வேலைத் தேடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    இந்த முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரிசெய்து புதுப்பித்துக்கொள்ளலாம். தகுதி மிக்க வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • சாரதா கங்காதரன் கல்லூரியின் வேலைவாய்ப்பு குழு சார்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • புதுவை சமுதாய கல்லூரி, போப் ஜான்பால் கல்லூரி, சாரதா கங்காதரன் கல்லூரியை சேர்ந்த 33 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியின் வேலைவாய்ப்பு குழு சார்பில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    கல்லூரியின் துணைத்தலைவர் டாக்டர் பழனிராஜா தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். அஸ்கான் டெக்னாலஜி சி.இ.ஒ. கண்ணன் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் உதயசூரியன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் பெங்களூரு, சென்னை, கோவை மற்றும் புதுவையை சேர்ந்த (சாப்ட்வேர், மார்க்கெட்டிங், இன்சூரன்ஸ், பி.பி.ஓ.) 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

    முகாமில் 2020-21-ல் தேர்வு பெற்ற மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலை அறிவியல், பொறியியல், வணிகவியல், வணிக மேலாண்மை பயின்ற மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் புதுவை சமுதாய கல்லூரி, போப் ஜான்பால் கல்லூரி, சாரதா கங்காதரன் கல்லூரியை சேர்ந்த 33 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

    மேலும் சாரதா கங்காதரன் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல்வே று கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவ-மாணவிகள் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர்.

    விழாவில் அஸ்கான் டெ க்னாலஜி, சென்க்ஸ் அகாடமி, வெள்ளி வெஞ்சர்ஸ், அகஸ்தியா அகாடமி ஆகிய 4 நிறுவனங்களுடன் சாரதா கங்காதரன் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

    முகாமிற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆன், துணை ஒருங்கிணைப்பாளர் கமலக்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×