search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JioPhone"

    ரிலையன்ஸ் ஜியோபோனில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நோக்கியாவும் தனது ஃபீச்சர்போனில் வாட்ஸ்அப் வசதியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.



    ரிலையன்ஸ் நிறுவன ஜியோபோனில் வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் சேவைகள் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நோக்கியா மொபைல்களை விற்பனை செய்யும் ஹெச்.எம்.டி. குளோபல் தனது நோக்கியா 8810 4ஜி போனில் வாட்ஸ்அப் வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 8810 4ஜி போன் பனானா போன் என அழைக்கப்படுகிறது. கைஓஎஸ் (KaiOS) சார்ந்த ஸ்மார்ட் ஃபீச்சர் ஓ.எஸ் கொண்டிருக்கும் நோக்கியா 8810 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் சர்ச் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம், மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் நோக்கியா 8810 மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் இதுவரை வாட்ஸ்அப் வசதி வழங்கப்படாமல் உள்ளது. ஹெச்.எம்.டி. குளோபல் தலைமை அலுவலர் ஜூஹோ சர்விகாஸ் ட்விட்டரில், "Oh look, WhatsApp on KaiOS! Looking forward to going [banana]s!" என குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் ஜியோபோன் போன்றே விரைவில் நோக்கியா 8810 மாடலிலும் வாட்ஸ்அப் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.



    ஃபீச்சர்போன்களில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்படாமல் இருப்பதாலேயே பலர் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் 2.5 கோடி பேர் ஜியோபோன் பயன்படுத்தும் நிலையில், நோக்கியா 8810 மாடலில் வாட்ஸ்அப் வழங்கப்படும் பட்சத்தில் ஜியோபோனுக்கு நேரடியாக போட்டியாக நோக்கியா பனானா போன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    ஜியோபோன் மற்றும் நோக்கியா 8810 மாடல்களில் வாட்ஸ்அப்-ஐ தொடர்ந்து பிரபல செயலிகள் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இவை பல்வேறு இதர விலை குறைந்த ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும். ஆன்ட்ராய்டில் இருப்பதை போன்றே கைஓஎஸ் வெர்ஷனிலும் வாட்ஸ்அப் இருக்குமா அல்லது சில அம்சங்கள் வேறுபடுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    நோக்கியாவின் பிரபல 8810 மாடலை புதுப்பித்து 4ஜி வோல்ட்இ கனெக்டிவிட்டியுடன் நோக்கியா 8810 4ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 8810 4ஜி போனில் 2.45 இன்ச் QVGA 240x320 பிக்சல், 1.12 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 சிப்செட், 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    4ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிரு்கும் நோக்கியா 8810 4ஜி மாடலில் 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைபை, ப்ளூடூத், மைக்ரோ-யுஎஸ்பி, எஃப்.எம். ரேடியோ, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் 1500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகையை அறிவித்திருக்கிறார். இதில் பயனர்கள் ஜியோபோனினை ரூ.501 விலையில் பெற முடியும்.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வழங்கினார். ஜியோபோன் 2, ஜியோ ஜிகாஃபைபர் அறிவிப்புகளுடன் ஜியோபோன் சார்ந்த தகவல்களையும் அவர் வெளியிட்டார்.

    கடந்த ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் வாங்குவோருக்கு மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் ரூ.501 மட்டும் செலுத்தி ஜியோபோன் பெற முடியும். பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் ஃபீச்சர்போனினை வழங்கி, புதிய ஜியோபோனுக்கு ரூ.501 மட்டும் செலுத்தி வாங்கிட முடியும். இந்த சலுகை ஜூலை 21, 2018 முதல் வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் ரூ.1,500 செலுத்தி புதிய ஜியோபோன் வாங்கி மூன்று ஆண்டுகளில் அதனை திரும்ப வழங்கி முன்பணத்தை திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இன்று (ஜுலை 5) நடைபெற்ற ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோபோனில் விரைவில் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட இருப்பகாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோபோனில் 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே, டூயல்-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    ஜியோபோனில் 512 எம்பி ரேம், 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ நெட்வொர்க், ஜியோ செயலிகள் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் 24 இந்திய மொழிகளில் ஜியோபோன் பயன்படுத்தும் வசதி மற்றும் வாய்ஸ் கமான்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
    சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது.
    புதுடெல்லி:

    சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் சுமார் 15% பங்குகளை பெற்றிருக்கிறது. 

    ரிலையன்ஸ் ஜியோபோனை தொடர்ந்து நோக்கியா, சாம்சங் மற்றும் டெக்னோ உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோபோன் அமோக விற்பனையை சந்தித்து வரும் நிலையில், நோக்கியாவின் ரீ-என்ட்ரி உள்ளிட்டவை சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையின் 38% வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

    சமீபத்திய தகவல்கள் கவுன்ட்டர்பாயின்ட் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 2018 முதல் காலாண்டு நிலவரப்படி நோக்கியா ஹெச்எம்டி நிறுவனம் 14% பங்குகளையும், ஐடெல் நிறுவனம் 13% பங்குகளையும் சாம்சங், டெக்னோ நிறுவனங்கள் 6% பங்குகளையும் பெற்றிருக்கின்றன.



    ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 50 கோடி ஃபீச்சர்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொருத்து சர்வதேச அளவில் ஃபீச்சர்போன்களுக்கான வரவேற்பு இன்றும் அதிகமாகவே இருக்கிறது. என கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சர்வதேச ஃபீச்சர்போன் விற்பனையில் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஃபீச்சர்போன் விற்பனை மட்டும் 43% பங்குகளை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    சில ஃபீச்சர்போன் பயனர்கள் டிஜிட்டல், பொருளாதாரம் மற்றும் போதுமான கல்வியறிவு இல்லாதது போன்ற காரணங்களால் விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத சூழல் நிலவுவதாக ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×