search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ishtalinga"

    மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும்.

    மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும். யார், யார் எந்த லிங்கங்களை வழிபட்டனர் என்று பார்க்கலாம்.

    இந்திரன் - மரகத லிங்கம்
    குபேரன் - சொர்ண லிங்கம்
    எமன் - கோமேதக லிங்கம்
    வருணன் - நீல லிங்கம்
    விஷ்ணு - இந்திர நீல லிங்கம்
    பிரம்மன் - சொர்ண லிங்கம் அஷ்ட வசுக்கள்,
    வசுதேவர்கள் - வெள்ளி லிங்கம்
    வாயு - பித்தளை லிங்கம்
    அசுவினி தேவர்கள் - மண் லிங்கம்
    மகாலட்சுமி - ஸ்படிக லிங்கம்
    சோம ராஜன் - முத்து லிங்கம்
    சாதுர்யர்கள் - வஜ்ஜிர லிங்கம்
    வேதிகர்கள் - மண் லிங்கம்
    மயன் - சந்தன லிங்கம்
    நாகர்கள் - பவள லிங்கம்
    அரசுர்கள் - பசுஞ்சாண லிங்கம்
    பார்வதி - வெண்ணெய் லிங்கம்
    நிருதி - தேவதாரு மர லிங்கம்
    யோகிகள் - விபூதி லிங்கம்
    சாயா தேவி - மாவு லிங்கம்
    சரஸ்வதி - ரத்தின லிங்கம்
    யட்சர்கள் - தயிர் லிங்கம்
    ‘ஓம் நம சிவாய’ என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது, நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.
    ‘ஓம் நம சிவாய’ என்று நாம் நெக்குருகி பிரார்த்திக்கும்போது, நம் கண் முன்னால் நிற்பது ஈசனின் லிங்க ரூபம்தான். ஏன் இப்படி சிவன் லிங்க ரூபமாக வழிபடப்படுகிறார்? என்பதற்கு, லிங்க புராணம் ஒரு கதை சொல்கிறது.

    ஒரு முறை பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது மிகப்பெரிய அக்னி கோளமாக அவர்கள் நடுவே தோன்றினார் சிவபெருமான். அதுவே முதன் முதலாக இறைவன் எடுத்த லிங்க வடிவம். அன்று முதல் லிங்கோத்பவம் உதயமாயிற்று. ‘லிங்கோத்பவம்’ என்றால் ‘லிங்கம் தோன்றுதல்’ என்று பொருள். அன்று முதல் இன்று வரை சிவபெருமான் லிங்க உருவத்திலேயே தான் வழிபடப்பட்டு வருகிறார்.

    சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் ஷணிக லிங்கம், இஷ்ட லிங்கம், ஆத்ம லிங்கம் என 3 வகைப்படும்.

    ஷணிக லிங்கம்

    நாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பின்பு, கைவிடப்படும் லிங்கம் ‘ஷணிக லிங்கம்’ எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

    புற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்
    ஆற்று மண் லிங்கம் - பூமி லாபம் தரும்
    பச்சரிசி லிங்கம் - பொன், பொருள் தரும்
    அன்ன லிங்கம் -அன்ன விருத்தி தரும்
    பசுவின் சாண லிங்கம் - நோய்கள் தீரும்
    வெண்ணெய் லிங்கம் - மன மகிழ்ச்சி தரும்
    ருத்ராட்ச லிங்கம் - அகண்ட அறிவைத்தரும்
    விபூதி லிங்கம் - அனைத்துசெல்வமும் தரும்
    சந்தன லிங்கம் - அனைத்துஇன்பமும் தரும்
    மலர் லிங்கம் - ஆயுளை அதிகமாக்கும்
    தர்ப்பைப்புல் லிங்கம் - பிறவியிலாநிலை தரும்
    சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பம் தரும்
    மாவு லிங்கம் - உடல் வன்மை தரும்
    பழ லிங்கம் - சுகத்தைத் தரும்
    தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்
    தண்ணீர் லிங்கம் - எல்லா மேன்மைகளும் தரும்

    இஷ்ட லிங்கம்

    மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும்.



    மரகதம், படிகம், கருங்கல் இவற்றினால் செய்யப்பட்ட லிங்கத்தை, குருவிடமிருந்து முறையாக பெற்று தன் ஆயுள் உள்ள வரைக்கும் தன்னிடமே வைத்துக்கொண்டு வழிபடுவது ‘இஷ்ட லிங்கம்’ எனப்படும். யார், யார் எந்த லிங்கங்களை வழிபட்டனர் என்று பார்க்கலாம்.

    இந்திரன் - மரகத லிங்கம்
    குபேரன் - சொர்ண லிங்கம்
    எமன் - கோமேதக லிங்கம்
    வருணன் - நீல லிங்கம்
    விஷ்ணு - இந்திர நீல லிங்கம்
    பிரம்மன் - சொர்ண லிங்கம் அஷ்ட வசுக்கள்,
    வசுதேவர்கள் - வெள்ளி லிங்கம்
    வாயு - பித்தளை லிங்கம்
    அசுவினி தேவர்கள் - மண் லிங்கம்
    மகாலட்சுமி - ஸ்படிக லிங்கம்
    சோம ராஜன் - முத்து லிங்கம்
    சாதுர்யர்கள் - வஜ்ஜிர லிங்கம்
    வேதிகர்கள் - மண் லிங்கம்
    மயன் - சந்தன லிங்கம்
    நாகர்கள் - பவள லிங்கம்
    அரசுர்கள் - பசுஞ்சாண லிங்கம்
    பார்வதி - வெண்ணெய் லிங்கம்
    நிருதி - தேவதாரு மர லிங்கம்
    யோகிகள் - விபூதி லிங்கம்
    சாயா தேவி - மாவு லிங்கம்
    சரஸ்வதி - ரத்தின லிங்கம்
    யட்சர்கள் - தயிர் லிங்கம்

    ஆத்ம லிங்கம்

    இது தூய மனதுடன், இறைவனை மனதுக்குள் நிறுத்தி செய்யும் வழிபாடு. வெளிபுற வழிபாடு தேவையில்லை. மனப்பூர்வமாக செய்யப்படும் சிவ லிங்க வழிபாடு ‘ஆத்ம லிங்க வழிபாடு’ எனப்படும்.

    காஞ்சீபுரம் - ஏகாம்பர லிங்கம்
    திருவானைக்கா - ஜம்பு லிங்கம்
    திருவண்ணாமலை - அருணாசல லிங்கம்
    திருகாளத்தி - திருமூல லிங்கம்
    சிதம்பரம் - நடராச லிங்கம்

    ×