search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INX Media case"

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்ய இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. #INXMediaCase #ChidambaramGetsProtection
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி  சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.



    இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு மே 31-ம் தேதி (இன்று) ஆஜராகும்படி ப.சிதம்பரத்திற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருந்தது. எனவே, தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் நேற்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

    சி.பி.ஐ. விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டிய சூழ்நிலையில், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மனுவை பரிசீலித்த ஐகோர்ட், ஜூலை 3-ம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. ப.சிதம்பரம் மனுவிற்கு பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தது.

    இதேபோல் ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜூன் 5-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #INXMediaCase #ChidambaramGetsProtection
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து இடைக்கால நிவாரணம் பெற்ற ப.சிதம்பரம் தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். #INXMediaCase #ChidambaramAnticipatoryBail
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி  சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்தியது. ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்கள் ஆதாயம் பெற்றதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது.



    இந்நிலையில், ப.சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது. அதன்படி மே 31-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. எனவே, தன்னை கைது செய்யாமல் இருக்க, டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் இன்று முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜூன் 5-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், இரண்டாவது வழக்கில் முன்ஜாமீன் கேட்டுள்ளார். #INXMediaCase #ChidambaramAnticipatoryBail
    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் உள்ள கார்த்தி சிதம்பரம் கோர்ட் அனுமதியுடன் இன்று காலை லண்டனுக்கு புறப்பட்டுச்சென்றார். #KarthiChidambaram
    சென்னை:

    ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பணம் ஆதாயம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார்.

    இந்த நிலையில், அவர் சொந்த அலுவல் காரணமாக வெளிநாடு செல்ல அன மதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து நிபந்தனையுடன் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இன்று காலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு கார்த்தி சிதம்பரம் வந்தார். அவர் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
    ×