search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.என்.எக்ஸ் வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள கார்த்தி சிதம்பரம் லண்டன் பயணம்
    X

    ஐ.என்.எக்ஸ் வழக்கில் கைதாகி ஜாமினில் உள்ள கார்த்தி சிதம்பரம் லண்டன் பயணம்

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் உள்ள கார்த்தி சிதம்பரம் கோர்ட் அனுமதியுடன் இன்று காலை லண்டனுக்கு புறப்பட்டுச்சென்றார். #KarthiChidambaram
    சென்னை:

    ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பணம் ஆதாயம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார்.

    இந்த நிலையில், அவர் சொந்த அலுவல் காரணமாக வெளிநாடு செல்ல அன மதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து நிபந்தனையுடன் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இன்று காலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு கார்த்தி சிதம்பரம் வந்தார். அவர் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
    Next Story
    ×