search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "industry"

    • பெண்கள் பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.
    • முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள்.

    கண் மை, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகுக்காகவும், மருத்துவ நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆரம்ப காலத்தில் பசுங்கற்பூரம், நெய், தாவர எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. தற்போது, வணிக ரீதியான லாபம் பெற இயற்கை பொருட்களுடன் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலவகை கண் மைகளில் 'ஈயம்' மூலக்கூறுகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இவை கண் தசைகளை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பார்வைத் திறனையும் பாதிக்கக்கூடும். எனவே, இயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் கண் மைகளைப் பயன்படுத்துவது நல்லது.

    ஆர்கானிக் கண் மைகளில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய இயற்கையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை கண்களின் ஈரப்பதத்தை பாதுகாத்து, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கண்களுக்கு பிரகாசத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். கண்களின் தசைகளை வலுப்படுத்தி பார்வைத் திறனை மேம்படுத்தும்.

    ஆர்கானிக் சாதனம் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இது பெண்கள் பெரிதும் விரும்பும் அழகு சாதனப் பொருள் என்பதால், இதனை தயாரித்து விற்பனையும் செய்யலாம். பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.

    எந்த ஒரு பொருளையுமே, விற்பனை செய்யும் முன்பு முதலில் அதனை நாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய தயாரிப்பைப் பற்றி நம்பிக்கையுடன் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்ல முடியும். முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள். பிறகு சந்தைப்படுத்த ஆரம்பிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய அளவு மண் அகல் - 1

    சந்தனத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    வெள்ளை நிற பருத்தி துணி - 1 சிறிய துண்டு

    பசுநெய் - 3 டேபிள் ஸ்பூன்

    பாதாம் பருப்பு - 1 சிறிய

    அகலமான கண்ணாடி குப்பி - 1

    டீஸ்பூன் - 1

    செய்முறை: சந்தனத்தூளில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, டீஸ்பூன் மூலம் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். அதில் பருத்தித் துணியை நன்றாக நனைத்து நிழலில் உலர்த்துங்கள். பிறகு, அதைத் திரி போல சுருட்டிக் கொண்டு, அகல் விளக்கில் வைத்து நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுங்கள். விளக்கின் இரண்டு பக்கமும் நீளமான டம்ளர்களை ஸ்டாண்ட் போல வைத்து, எவர்சில்வர் அல்லது மண் தட்டு ஒன்றை அவற்றின் மீது கவிழ்த்து வையுங்கள்.

    பாதாம் பருப்பை ஒரு இடுக்கியால் பிடித்துக் கொண்டு விளக்கில் காண்பிக்க வேண்டும். அது நன்றாக எரிந்ததும் ஆறவைக்கவும். பின்பு அதை ஒரு சிறிய உரலில் போட்டு இடித்து தூளாக்கிக்கொள்ளவும். அகலில் நெய் தீர்ந்ததும் அதை அணைத்து, அதன் மேலே கவிழ்த்திருக்கும் தட்டை சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு தட்டை எடுத்து பார்த்தால் அதன் மீது கரி படிந்திருக்கும்.

    அதனை டீஸ்பூனால் சுரண்டி சேகரித்து கண்ணாடி குப்பியில் கொட்டவும். அதனுடன் பொடித்து வைத்திருக்கும் பாதாம் கரியையும் கலந்து கொள்ள வேண்டும். கண்ணாடி குப்பியை காற்று புகாமல் மூடி வைக்கவும். இதை நெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாகக் குழைத்து பயன்படுத்தலாம்

    • பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும்.
    • நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் தொழில் தொடங்க நினைக்கும் இளம் தலைமுறையினருக்கு நமது அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்துத் தருகிறது. உதாரணமாக தமிழக அரசு அளிக்கும் 'ஸ்டார்ட் அப் டி.என்' என்ற திட்டம் மிகவும் உபயோகரமாக உள்ளது. அதனை, பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் இளம் தலைமுறையினர் தங்களது யோசனைகளை முன் வைத்தால் மட்டுமே போதுமானது. நல்ல யோசனைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்றவாறு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

    கடனாக அல்லாமல் உதவியாகவே வழங்குகின்றனர். அதுமட்டுமின்றி கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 'ஆன்ட்ரப்ரனர்ஷிப்' என்ற வகுப்பை உருவாக்கி தொழில் தொடங்கும் ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் கற்று தருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் படிப்பை முடித்ததும் வேலைக்கு செல்லாமல் நிறுவனம் தொடங்கலாம் என்ற மனநிலைக்கு மாறுகின்றனர். நானும் அத்தகைய வகுப்புகளை கல்லூரிகளில் நடத்தி வருகின்றேன். எனவே தொழில் தொடங்க விரும்புபவர்கள் நல்ல யோசனைகளை மட்டும் முன்வைத்து இத்தகைய திட்டங்களை பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது.

    முதலாவது, நிறுவனம் தொடங்க நினைப்பவர்கள், ஆரம்ப காலகட்டத்தில் பணிக்கு நிறைய ஆட்களை சேர்க்கக்கூடாது. உங்களால் எவ்வளவு சம்பளம் கொடுக்க முடியும் என்பதை பொறுத்து குறைவான ஆட்களை சேர்த்தால் போதுமானது. இரண்டாவது ஊழியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும். குறைவான சம்பளம் கொடுத்தால் அவர்கள் அனுபவத்தை பெற்றுக்கொண்டு, மற்றொரு நிறுவனத்திற்கு பணியாற்ற சென்று விடுவார்கள்.

    இதனால் நாம் மீண்டும் பணத்தை செலவழித்து ஆட்கள் சேர்க்கும் நிலை ஏற்படும். நிதியை நிர்வகிக்க, கணக்கு வழக்குகளை பார்க்க ஆட்களை பணியில் அமர்த்தியிருந்தாலும், ஒரு நிறுவனராக நாமும் அதனை கவனிக்க வேண்டும். இப்பொழுது ஆரம்பிக்கப்படும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியடைய இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும்.

    சமூகம் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசினாலும், ஒரு பெண் சுயமாக நிறுவனத்தை தொடங்கினாலும் சிலர் எதிர்மறையாக பேசத்தான் செய்வார்கள்.

    பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருப்பதுதான் பெண்களுக்கான பெருந்தடை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். ஏட்டுப் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ளாமல், பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும். உங்களிடம் திறமையும், நிதி மேலாண்மையும் இருந்தாலே போதும். நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பரமக்குடியில் தொழில் பழகுநர் தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
    • 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுபவர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம்,தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம்,தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரடியாக தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் ஐ.டி.ஐ-யில் என்.சி.வி.டி,எஸ்.சி.வி.டி பயிற்சி முடித்த வர்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை.
    • ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.

    பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

    சுயதொழில்

    படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு, அவர்களது உழைப்பை பொருளாதாரப் பலன்களாக மாற்றி, குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து பொருள் ஈட்டும் வகையில் செயல்படுகின்றனர். சமூகத்தின் தேவையோடு, மக்களின் அவசியத்தை உணர்ந்து உத்திகளை வகுத்து வருகின்றனர்.

    பெண்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி இப்படி அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ.

    அதிக லாபம்

    ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.அந்த வகையில் தையல் தொழில், கேக் செய்வது, ஊருகாய் தயாரிப்பது, ரெடிமேட் சப்பாத்தி, மாவு வியாபாரம்,விஜிடபிள்ஸ் பேக்கிங், மசாலா பொடி செய்யும் தொழில் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் நீங்கள் உங்களுக்கு நன்கு தெரிந்ததை தேர்வு செய்து கொள்ளலாம்.அதில லாபம் ஈட்டக்கூடிய குறிப்பிட்ட ஐந்து தொழில்களுக்கான சில டிப்ஸ்களை இங்கே காண்போம்.

    தையல் தொழிலை பொறுத்தவரை நன்கு சம்பாதிக்க கூடிய தொழில் என்று தான் கூற வேண்டும்.ஒரு நாளைக்கு ஒரு பிளவுஸ் தைத்தால் 60 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.அதிலேயே வி ஷேப், யூ ஷேப், நாட் மாடல், டிசைன்ஸ் வைத்து தைத்தால் 200 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.பெண்களுக்கான சுடி தைத்தால் 400 ரூபாய் வரை கிடைக்கும். தையல் தொழிலை பொறுத்தவரை டிசைன் சுடி, டிசைன் பிளவுஸ்,திருமணத்திற்கான ஆரி ஒர்க் பிளவுஸ் மூலம் நீங்கள் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

    மாவு வியாபாரம்

    இன்றைய பரபரப்பான உலகில், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது வீட்டில் காலையில் எழுந்து காய்கறிகள் வெட்டி சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.எனவே சிலர் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளை வாங்கி சட்டென்று சமைத்து விடுகின்றனர்.அந்த வகையில் பூண்டு, வெங்காயம், பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை சமைப்பதற்கு ஏற்றவாறு பாக்கெட்டில் பேக் செய்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

    மாவு வியாபாரம் தொழிலை பொறுத்தவரை ஒரு கிலோ இட்லி அரிசி 34 ரூபாயாகும்.அதனுடன் உளுந்து 200 கிராம் சேர்த்து அறைத்தால் 3 கிலோ மாவு கிடைக்கும்.ஒரு கிலோ மாவு ரூ.40 க்கு விற்றால் ரூ.120 ஒரு நாளைக்கு எளிதாக சம்பாதிக்க முடியும்.நீங்கள் வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் தெரிஞ்சவர்களிடம் கூறியும் விற்பனை செய்யலாம்.

    வீட்டில் இருக்கும் நிறைய பெண்கள் அவர்களின் பாட்டியிடம் ஆலோசனை கேட்டு விதவிதமான மசாலாக்களை தயாரித்து வருகின்றனர்.அந்த வகையில் இட்லி பொடி, சாம்பார் பொடி, மல்லி பொடி, கரமசாலா பொடி,பூண்டு பொடி, ரசப்பொடி, கறிவேப்பிலை பொடி இப்படி பொடி வகைகளை செய்து அருகில் இருக்கும் மளிகைக்கடை அல்லது அக்கம் பக்கத்தினரிடமும் கூறி விற்பனை செய்யலாம். இதற்கான விலையை உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.அதே சமயத்தில் வாங்குபவர்களுக்கும் ஏற்ற விலையில் கொடுத்தால் சில நாட்களிலேயே உங்கள் பிசினஸ் சூடு பிடித்துவிடும். பெண்களால் முடியாதது ஏதும் இல்லை. நம்மை நாமே நம்ப வேண்டும். விடா முயற்சியும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் எல்லோரும் சாதிக்கலாம்''.

    • தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும்.
    • பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம்.

    செய்யும் தொழிலே தெய்வம். அத்தகைய தொழிலை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே தொழிலில் வெற்றிபெற்றவர்கள், நல விரும்பிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனைகளை பெறுதல் என்பது மிக அவசியம். மேலும் நமது நிதி நிலைமை, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.

    தொழில் என்பது 2 பிரிவுகளை கொண்டு உள்ளது. உற்பத்தி அல்லது தயாரிப்பு அடிப்படையிலானது. விற்பனை அல்லது தேவை அடிப்படையிலானது. உதாரணமாக ஸ்டீல் தகடு உற்பத்தி செய்யப்பட்டு அவை பாத்திரங்கள், பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை வாங்கி ஒருவர் விற்பனை செய்கிறார். பாத்திரங்களின் பளபளப்பு குறைந்தால் அதனை ஒருவர் பாலீஷ் செய்து தருகிறார். இவைகளில் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, சேவை என 4 அடிப்படைகள் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சேவை என்பது கட்டணம் பெற்று செய்து கொடுக்கும் தொழில்களை குறிப்பிடுவது ஆகும்.

    தயாரிப்பு தொழிலை மேற்கொள்வோர் அதற்கு உரிய விற்பனை வாய்ப்பை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வியாபார போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும். அல்லது நாம் வசிக்கும் பகுதியில் மலிவாகவும், நிறைவாகவும் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருட்களின் விற்பனை வாய்ப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து இருக்க வேண்டும்.

    சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான தயாரிப்பு தொழில்கள் எதையும் மேற்கொள்ள இயலாது. எனவே, பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் ஏற்படும் சூழலை சந்திக்க சிறிது பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் உங்களது தயாரிப்பு பொருளை சந்தையில் விற்பதற்கும், மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் அவ்வப்போது விளம்பரங்கள் செய்ய வேண்டும். இவற்றுக்கான மூலதனங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே தயாரிப்பு தொழிலை செய்ய விரும்புபவர்கள் ஓரளவு பொருளாதாரம் உடையவராக இருக்க வேண்டும். கடன் தொல்லை இல்லாமல், சுய முதலீடு இல்லாதவர்கள் விற்பனை தொழிலை தேர்ந்து எடுக்கலாம். அதுதான் சிறந்தது.

    முக்கியமான விஷயம், தொழில் தொடங்க கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் முழு கடன் தொகையையும் வாங்க நினைக்கக்கூடாது. நம் தொழிலுக்கு தேவையான நிதி எவ்வளவோ அந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லையேல் கடன் நம்மை அமுக்கிவிடும். இதை தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.

    • படித்த பெண்கள் அரசு வேலைகளுக்காக காத்திருக்காமல் சுலபமாக தொழில் தொடங்கலாம்.
    • தொழிலை விரிவுபடுத்த அரசு மானியத்துடன் கடன் உதவிகளும் வழங்குகிறது.

    "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்" என்ற பாடல் வரிகளில் புதைந்துள்ள கருத்துகள் வளர்ந்து வரும் இளைஞர்களுக்காக கூறப்பட்டது. நமது நாடு தன்னிறைவு பெறும் காலம் வரை இந்த வரிகள் உயிருடன் இருக்கும். படித்த பெண்கள் அரசு வேலைகளுக்காக காத்திருக்காமல் சுலபமாக தொழில் தொடங்கலாம்.

    அதற்காக தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து நமக்கு என்ன தொழில் தொடங்க விருப்பமோ அந்த தொழிலில் பயிற்சிப்பெற்று தொடங்கலாம். இதற்காக தொழில் ஆலோசனை கூறும் அரசு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் ஆலோசனை பெறலாம். அவர்கள், எளிதான முறையில் தொழில் யோசனைகளையும் வழங்குகிறார்கள்.

    விவசாயத் தொழில்கள் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு, எலக்ட்ரானிக் போன்ற மின்னணு கருவிகள் தயாரிப்பு, பீங்கான் பொருட்கள் தயாரித்தல், பெயிண்டிங், வர்ணம் தீட்டுதல், மாடலிங் செய்தல், ரேடியோ, ரெப்ரிஜிரேட்டர், குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவற்றை பழுது பார்த்தல் போன்ற பல தொழில்களை தொடங்கலாம். மேலும் கம்ப்யூட்டர் வேலைகளுக்கு அது பற்றிய தொழில்நுட்பங்களை அறிந்து இதில் ஈடுபடலாம்.

    இதன் மூலம் நமக்கு தினசரி வருமானம் கிடைப்பதுடன் தொழிலை விரிவுபடுத்தி பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கலாம்.

    தொழிலை விரிவுபடுத்த அரசு மானியத்துடன் கடன் உதவிகளும் வழங்குகிறது. அதன்படி மானியத்துடன் கடன் உதவிகள் பெற்று தொழில் வல்லுனர்களை அழைத்து வந்து எளிதில் வேலைகளை முடிப்பதற்கான நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.

    பணிகளை விரைவில் முடிப்பதால் பல தொழில் ஆர்டர்களை பெறும் போது நமக்கு கூடுதலாக வருமானமும் கிட்டும். மேலும் தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கிறது.

    தொழில் முதலீட்டுக்கழகமும் கடன் உதவி வழங்குகிறது. சிறு தொழில் நிறுவனமும் கடன் தர தயாராக உள்ளன. இந்த நிறுவனங்களில் கடன் பெற்று தொடங்கிய தொழிலை அபிவிருத்தி செய்யவோ, புதிய தொழில் தொடங்கவோ கடன் பெறலாம். எந்தவொரு தொழிலையும் தள்ளி விடாது. அது பற்றி ஆராய்ந்து அறிந்து வாழ்க்கையில் முன்னேறலாம்.

    • இறால் வளர்ப்பு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
    • மாசு கட்டுப்பாட்டு வாரிய பட்டியலில் இருந்து இறால் தொழிலை நீக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட இறால் வளர்ப்பு சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறால் வளர்ப்பு சங்க கூட்டம் பைபாஸ் சாலையில் நடந்தது.

    சங்கத்தின் மாநில தலைவர் அலிஉசேன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாண்டி பாலா மாநில பொருளாளர் கிரி மாநில துணை தலைவர்கள் சேதுராமன், சங்கர் பிள்ளை, இரவிப்பாண்டியண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.

    மாநில செயற்குழு கூட்டத்தில் இறால் வளர்ப்பு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

    இறால் வளர்ப்பு தொழிலுக்கு உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக லைசன்ஸ் வழங்க வேண்டும் இறால் வளர்க்கும் உரிமையா ளர்களுக்கு அரசு தரமான இறால் குஞ்சுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைந்த விலையில் தரமான இறால் தீவனம் வழங்க வேண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பட்டியலில் இருந்து இறால் தொழிலை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நாராயணசாமி மயிலாடுதுறை மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் ஞானம் அரவிந்தன் சாய் பாஸ்கரன் கார்த்திகேயன் அக்பர் சேகர் திருவாரூர் மாவட்ட தலைவர் செல்லப்பா புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் முத்துராமன், கடலூர் வெங்கடகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் கலியபெரும்ள் உட்பட பல்வேறு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட துணைத் தலைவர் சாய் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    • எம்பிராய்டரி தொழிலை கற்பது எளிது.
    • இந்த தொழிலும் நல்ல லாபம் பார்க்கலாம்.

    பொறுமை நிறைந்த தொழில் என்றால் அது 'எம்பிராய்டரி' தொழில் என்றால் அது மிகையா காது. உடுத்தும் உடைகளில் இருந்து வீட்டை அலங்கரிக்கும் திரைச்சீலைகள், மேஜை விரிப்புகள் முதல் செல்போன் கவர்கள் வரை இன்று எம்பிராய்டரியில் வந்து விட்டன. அதிலும் எம்பிராய்டரி வேலையில் பல்வேறு பூக்களை வரைந்து காண்பித்து அழகுபடுத்தினால் அதற்கு வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து விடுகிறது.

    கற்பது எளிது

    எம்பிராய்டரி தொழிலை கற்பது எளிது. தற்போதைய காலக்கட்டத்தில் புத்தகங்கள் மூலமும், டி.வி. நிகழ்ச்சிகள் மூலமும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எம்பிராய்டரியை கற்றுத்தருகிறார்கள். எனவே இதை கற்றுக்கொள்வது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. அதனை எந்த வகையான வேலைபாடுகளில் எம்பிராய்டரி செய்தால் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்பதை சர்வே மூலம் அறிந்து கொள்வது நல்லது.

    நீங்கள் வெளியே செல்லும் போது உள்ள கடைகளில் விசாரித்தாலே தெரிந்து கொள்ள முடியும். முக்கியமாக பேன்சி விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கேட்டால் உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. கேரம் போர்டில் உள்ள 4 ஓட்டைகளிலும் விழும் காய்கள் கீழே விழாமல் இருக்க ஒரு வலை பின்னப்பட்டிருக்கும். அதுவும் எம்பிராய்டரிதான். அதன் தேவையை அறிந்து தயாரித்து கொடுத்தாலும் லாபம் பார்க்கலாம். அதற்கு ஒரு ஊசியும், குரோஷா நூலும் தான் தேவை. இவை மட்டும் உங்கள் மூலதனம் ஆகும்.

    வருமானம் பார்க்கலாம்

    எம்பிராய்டரி மற்றும் குரோஷா வலை பின்னத்தெரிந்தவர்களுக்கு இது மிகவும் சுலபம். ஒரு பண்டல் குரோஷா நூலில் சாதாரண கேரம் போர்டு வலையாக இருநதால் 8 வலைகள் பின்னலாம். இன்னும் கொஞ்சம் உங்கள் மூளையை பயன்படுத்தி சற்று வித்தியாசமாக வலை அமைப்பை மாற்றினால் நீங்கள் பின்னும் வலைக்கு ஏற்ப நூலின் எண்ணிக்கை மாறுபடும். வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு, இந்த வலை பின்னும் பணியை தொடர்ந்தால் ஒரு நாளைக்கு 5 டஜன் வலைகள் வரை பின்ன வாய்ப்புகள் உள்ளன.

    மேலும் சில நிறுவனங்கள் எம்பிராய்டரி பின்னி தருக்கூறி ஆர்டர்களும் கொடுக்கின்றன. அதனை பெற்று எம்பிராய்டரி வேலைபாடுகளை செய்து கொடுத்தால் நல்ல வருமானம் கிடைக் கும். தற்போதைய காலக்கட்டத்தில் செல் போன் இல்லாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அதில் குறிப்பாக பெண்கள் செல்போன் வைக்க பயன்படுத்தும் உறைகள் எம்பிராய்டரி வேலைபாடு இருந்தால், அவர்களை கவரலாம். மிக குறைந்த மூலத்தனத்தில் எம்பிராய்டரி வேலைகளை செய்யலாம். பெண்கள் சேலைகள், சுடிதார்கள் உள்பட ஆடைகளிலும் எம்பிராய்டரி வேலைகளை செய்து இந்த தொழிலும் நல்ல லாபம் பார்க்கலாம்.

    • அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது.
    • எல்லோரும் தமது வேலையை முடித்தபின் ‘மீட்டிங்’கை நடத்துங்கள்.

    விளையாட்டாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, குழுவாகச் சேர்ந்து செயல்படுவது என்பது அவசியம். அதிலும் அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது. அலுவலகத்தில் நீங்கள் ஒரு சிறந்த குழுவை அமைத்துச் செயல்படுவது எப்படி?

    இதோ 5 டிப்ஸ்கள்:

    * நன்றாகப் பணிபுரியக்கூடியவர்கள் என்று உங்களுக்கு தோன்றக்கூடியவர்களை உங்கள் குழுவில் சேர்ப்பது நல்லது. சாதாரணமாக பிறருடன் நீங்கள் கலந்து பழகி மற்றவர்களை அறிந்திராதவர் என்றால், யார் உங்கள் குழுவில் சேர்வதற்கு ஆர்வமும், விருப்பமுமாக இருக்கிறார்கள் என்று பார்த்துச் சேர்க்கலாம். சும்மா உட்கார்ந்தபடி அதுவாகவே குழு உருவாகட்டும் என்று இருக்காதீர்கள். குறிப்பிட்ட ஒரு குழுவின் அங்கத்தினராக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுங்கள்.

    * உங்கள் குழுவுக்கான பொறுப்புகள் அளிக்கப்பட்டபின், அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்கள். குழு அமைக்கப்பட்ட உடனே அவசர அவசரமாக அடுத்தடுத்து 'மீட்டிங்' போடாதீர்கள். குழு உறுப்பினர்கள் அவரவர் சொந்த வேகத்துக்கு ஏற்ப, தங்களால் ஒதுக்க முடிந்த நேரத்துக்கு ஏற்ப வேலை செய்யட்டும். வாய்மொழிப் பரிமாற்றங்கள் போதும். எல்லோரும் தமது வேலையை முடித்தபின் 'மீட்டிங்'கை நடத்துங்கள்.

    * வேலையை முடித்த அறிக்கையை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் போக வேண்டாம். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். பிற குழுக்கள் எப்படி வேலை அறிக்கை அளிக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வேலை அறிக்கையை வித்தியாசமாக அளிக்கலாம்.

    * குழுவில் பிரச்சினைகள் வரலாம். சிலரிடம் 'ஈகோ' தலைதூக்கலாம். சிலர் சோம்பேறித்தனமாக இருக்கலாம். எனவே உங்கள் குழுவில் வேலையில் பலவீனமாக இருப்பவரைக் கண்டு பிடித்து, அவருக்கு ஏற்ப எளிதான வேலையைக் கொடுங்கள். உங்கள் குழுவில் ஒழுங்கீனமாக ஒருவர் இருந்தால், அவரது வேலையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடிக்கப் பாருங்கள். வேலை அறிக்கை அளிப்பதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பே அதைத் தயார் செய்துவிடுங்கள்.

    * குழு உறுப்பினர்கள் பலர் சரியாக வேலை செய்யாமல், முக்கியப் பொறுப்பில் இருப்பவர் தலையில் எல்லா வேலையும் விழும்போது அவர் மனம் கசந்து வெறுத்துப் போவார். உங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டால், குறிப்பிட்ட 'பிராஜெக்ட்' முழுவதையும் கவனிக்கும் பொறுப்பை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

    உங்கள் குழு உறுப்பினர்கள் சரியில்லாவிட்டால், அது நீங்கள் கையில் எடுத்திருக்கும் பொறுப்பை ஏன் பாதிக்க வேண்டும்? அதில், எல்லாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், இறுதி முடிவையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். யாருமே வேலை செய்யாதபோது நீங்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்பது வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் குழுவில் ஒன்றுமே செய்யப்படாமல் இருப்பதை விட, ஏதோ உங்களால் அதிகபட்சமாக செய்யக்கூடியதை செய்வது சிறப்பானது. வேலையின் முழுக் கட்டுப்பாட்டையும் உங்களுக்குக் கீழே கொண்டுவந்து வெற்றி பெற்றுக் காட்டுங்கள்.

    • பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.
    • குடும்ப தலைவிகள் பங்கு சந்தை வர்த்தகம் மூலமாக பயனுள்ள வகையில் செலவிடலாம்.

    இயல்பான குடும்ப பெண்களை, பங்கு சந்தை முதலீட்டாளர்களாக மாற்றி வருகிறார், தர்மஸ்ரீ ராஜேஸ்வரன். சென்னையை சேர்ந்தவரான இவர், பங்குசந்தையில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் உள்ளவர். தனக்கு நன்கு பழக்கமான பங்கு சந்தையை, குடும்ப பெண்களுக்கும் கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டவர், அதை திறம்பட செய்து வருகிறார்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், ஆன்லைன்-ஆப்லைன் பயிலரங்கம் மூலமாகவும் பெண்களுக்கு பங்குசந்தை கலையை கற்றுக் கொடுப்பவரிடம் பேசினோம். இந்த பயணம் எப்படி தொடங்கியது என்பது முதல், பங்கு சந்தையில் களமிறங்க ஆசைப்படும் பெண்களுக்கு வழிகாட்டுதல் வரை எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அவை இதோ...

    * எப்படி தொடங்கியது இந்தப் பயணம்?

    எனக்கு பங்கு சந்தை, பங்கு வர்த்தகம் சார்ந்த அனுபவமும், படிப்பினையும் இருந்ததால், அதை மற்றவர்களுக்கு குறிப்பாக ஏழை எளிய குடும்ப பெண்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டேன். சிறு முயற்சியாகத்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். இன்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை பங்கு சந்தை முதலீட்டாளர்களாக, அந்த துறை சார்ந்த பணியாளர்களாக மாற்றி இருக்கிறேன்.

    * பங்கு சந்தை குடும்ப பெண்களுக்கு ஏற்றதா?

    மற்றவர்களைவிடவும், குடும்ப பெண்களுக்குத்தான் சிறப்பானது. காலை 9 மணிக்கு தொடங்கும் பங்கு சந்தை வர்த்தகம், மாலை 3.30 மணி வரை நடைபெறும். இந்த நேரம், ஒருசில குடும்ப தலைவிகளுக்கு பிசியான நேரமாக இருந்தாலும், ஒருசிலருக்கு ஓய்வு நேரமாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில், தையல் வேலை, ஆரி வேலைப்பாடுகள், யூ-டியூப் பொழுதுபோக்குகள் என நேரம் செலவாகும். இப்படி பொழுதுபோக்காக கழிக்கும் நேரத்தை, குடும்ப தலைவிகள் பங்கு சந்தை வர்த்தகம் மூலமாக பயனுள்ள வகையில் செலவிடலாம். கூடவே, குடும்ப பொருளாதாரத்தை முன்னேற்ற தங்களால் முடிந்த பங்களிப்பை பங்கு சந்தை வாயிலாக பெறலாம்.

    * குடும்ப பெண்கள், பங்கு சந்தையில் இணைவது எப்படி?

    ரொம்ப சுலபம். குடும்ப பெண்கள் மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொதுவானதுதான். டிமெட் கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். பிரபல வங்கிகளே இந்தவகை கணக்குகளை வழங்குகின்றன. 15 நிமிடங்களில் டிமெட் கணக்கை தொடங்கிவிட முடியும். அதேபோல பங்குகளை வாங்கி, விற்க, நிர்வகிக்க நிறைய 'புரோக்கிங்' இணையதளங்களும் இயங்குகின்றன. அதில் ஒன்றில், உங்களுக்கு விருப்பமான துறையில், விருப்பமான நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலமாக, பங்கு சந்தையில் நீங்கள் இணைந்துவிடுவீர்கள்.

    * சிக்கலான பங்குசந்தையை குடும்ப பெண்கள் சுலபமாக கற்றுக்கொள்ள முடியுமா?

    முடியும். பங்கு சந்தையின் செயல்பாடுகள் எளிமையானதுதான். அதன் அடிப்படையை புரிந்து கொண்டால், எளிமையாக வர்த்தகம் செய்யலாம். டி.வி. சேனல்கள், யூ-டியூப் சேனல்கள், பேஸ்புக் ரீல்ஸ், ஆன்லைன் படிப்புகள், வாட்ஸ் ஆப் குரூப்கள், கருத்தரங்குகள்... இப்படி நிறைய தளங்களில், பங்கு சந்தை பற்றிய விளக்கங்கள் கிடைக்கின்றன. நிறைய தனியார் அமைப்புகளும், நிறுவனங்களும் அதுபற்றிய படிப்பினையை வழங்குகின்றன. என்.ஐ.எஸ்.எம். (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் செக்யூரிட்டி மார்க்கெட்) கல்வி நிறுவனத்தில், ஷேர் மார்க்கெட் பற்றிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

    * பயிற்சி வகுப்புகள் அவசியமா?

    உங்களது சேமிப்பை முதலீடு செய்ய இருக்கிறீர்கள். அதனால் நிச்சயம் பயிற்சி வகுப்புகளும், வல்லுநர்களின் வழிகாட்டுதலும் அவசியம். இல்லையேல், உங்களது சேமிப்பு கரைந்துவிடும்.

    * பங்கு சந்தையில் இளம் பெண்களின் பங்களிப்பு இருக்கிறதா?

    நிறைய இளம் பெண்கள் பங்கு சந்தையில் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் இளம் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கிறது. சமீபகாலமாக தென்னிந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு பங்கு சந்தை மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இருப்பினும் வெளிப்படையாக தெரிவதில்லை. யூ-டியூப்பை திறந்து பார்த்தால், அதில் நிறைய தமிழ் பேசும் பெண்கள் பங்கு சந்தை பற்றிய தகவல்களை விளக்கிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

    * பங்கு சந்தை, கல்லூரி மாணவிகளுக்கு பயன்படுமா?

    வணிகம் சார்ந்து படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு பங்கு சந்தை சிறப்பான பயிற்சிக்களம். ஒரு பங்கு வாங்கினால், அந்த நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட் நமக்கு வருடந்தோறும் அனுப்பி வைக்கப்படும். அதன்மூலம், பிரபல நிறுவனங்கள் பேலன்ஸ் ஷீட் எப்படி தயாரிக்கின்றன, நிதி மேலாண்மையை எப்படி கையாள்கின்றன... போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

    * பங்குகளை வாங்குவது, விற்பது, நிர்வகிப்பது... இவையெல்லாம் குடும்ப பெண்களுக்கு சிக்கல் நிறைந்த வேலைகளா?

    இல்லவே இல்லை. பல இணையதளங்கள் இதுபோன்ற வேலைகளை மிக சுலபமாக்கி விட்டன. பெண்கள், குறிப்பிட்ட இணையதளத்தில் கணக்கு ஒன்று தொடங்கி, அதில் இருக்கும் 'வாங்க', 'விற்க' ஆகிய பட்டன்களை மட்டும் அழுத்தினாலே போதுமானது. மற்றபடி, சட்டரீதியான வேலைகளை, அந்தந்த இணையதளங்களே பார்த்துக் கொள்ளும்.

    * பங்கு சந்தைக்குள் யாரெல்லாம் நுழையலாம்?

    கல்லூரி மாணவிகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வயது மூத்த பெண்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற துறை இது. படிப்பை விட, அனுபவ அறிவு இருந்தால்போதும், பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.

    * பங்கு நிறுவனங்களை எப்படி தேர்வு செய்வது?

    என்.எஸ்.இ. எனப்படும் இணையதளத்தை திறந்து பார்த்தால், 'நிப்டி 50' என தலைசிறந்த 50 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அந்தந்த நிறுவனங்களின் கடந்த கால லாப-நஷ்ட கணக்குகளை அடிப்படையாக கொண்டே அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு பிடித்தமான துறை நிறுவனங்களை தேர்வு செய்து, முதலீடு செய்யலாம். அதுபோக, உலக நடப்புகள், உலக வர்த்தகம் போன்றவற்றையும் கவனித்து, அதற்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும்.

    * துறை சார்ந்த அறிவு தேவையா?

    நிச்சயமாக. நடப்பு 'டிரெண்ட்' பற்றி தெரிந்திருக்க வேண்டும். அடுத்ததாக, ஒவ்வொரு காலகட்டத்தில் எந்த மாதிரியான துறைக்கு அதிக வரவேற்பு இருக்கும், அடுத்த 10 ஆண்டுகளில் எந்த துறை அபார வளர்ச்சி பெறும், எது வீழ்ச்சி பெறும் என்பது போன்ற பொது சிந்தனைகளும், உங்களது பங்கு மதிப்பினை உயர்த்தி தரும்.

    * புதிதாக பங்கு சந்தைக்குள் நுழையும் பெண்கள் செய்யக்கூடாத ஒன்று எது?

    அவசரப்படக்கூடாது. ஒரு பங்கு வாங்குகிறோம் என்றால், அது சேமிப்பு என நினைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாள் கழித்து, அதன் மதிப்பு கூடியிருக்கும் வேளையில், அதை விற்று பணமாக்கிக் கொள்ள வேண்டும். இன்று முதலீடு செய்து, நாளை பல லட்சம் லாபம் பார்க்க வேண்டும் என்றால், அதே அளவிற்கு நஷ்டத்தை எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

    * பங்கு சந்தை முதலீடு அபாயம் தரக்கூடியதா?

    ஆம்..! கவனமாக செயல்படாத வரை அது, அபாயம் தரக்கூடியதுதான். ஆனால் தகுந்த படிப்பினையோடு கையாளும்போது, அது சிறப்பான முதலீட்டு தளமாக மாறிவிடும்.

    * பங்கு சந்தையில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் அரசு அமைப்புகள் உண்டா?

    இருக்கிறது. செக்யூரிட்டி அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆப் இந்தியா எனப்படும் 'செபி' பங்கு நிறுவனங்களுக்கும், பங்குகளை வாங்கும் மக்களுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அது இவ்விரு பிரிவினருக்கும் பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. கல்லூரி மாணவிகள் தொடங்கி, பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் வயது மூத்த பெண்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற துறை இது. படிப்பை விட, அனுபவ அறிவு இருந்தால்போதும், பங்கு சந்தையில் யாராக இருப்பினும் நுழையலாம், நிர்வகிக்கலாம், லாபம் பெறலாம்.

    • சிவகங்கையில் தொழில் வழிகாட்டும் கண்காட்சி-கருத்தரங்கை கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • சுய தொழில் தொடங்கி பயன்பெறலாம்.

    சிவகங்கை,

    சிவகங்கை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தொழில் நெறி கண்காட்சி அமைக்கப்பட்டு பல்வேறுத் துறைகளைச் சார்ந்த

    முதன்மை அலுவ லர்களைக் கொண்டு கருத்தரங்கமும் நடைபெற்று வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவ-மாணவிகள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் எதிர்காலத்தில் தங்களது வாழ்க்கை பயணத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கு அடித்தளமாகவும், உதவிகரமாகவும் அமையும்.

    அறிவாற்றலைப் பொ றுத்தே எதிர்காலத்தில் நீங்கள் நல்ல வேலைவாய்ப்பை பெறமுடியும். குறிப்பாக அறிவுத்திறனை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக பேச்சாற்றால் திறமையை வளர்ப்பது முக்கியமாகும். கல்வி த்தகுதியின் அடிப்படையில் எளிதாகப் பெறும் வேலைவாய்ப்புக்களை தேர்ந்தெடுத்து அதைப் பெறு வதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் துறைகள் குறித்து அதனைப் பற்றிய தெளிவான புரிதல் முதலில் இருக்க வேண்டும்.

    மேலும் அரசின் வேலைவாய்ப்புக்களை பெறுவதற்கு ஏதுவாக TNPSC, IBPS போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்க ளுக்கென அதற்கான பயிற்சி வகுப்புக்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்திலும், மாவட்ட மைய

    நூலகத்திலும், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அருகிலுள்ள சிவகங்கை படிப்பு வட்ட மையத்திலும் அதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையும் சிவகங்கையை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.

    இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பிலும் இளைய தலைமுறையினர்கள் தொழில் பயன்பெறு வதற்கு ஏதுவாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்துள்ளனர்.இதனைக் கருத்தில் கொண்டும், ஆர்வத்தின் அடிப்படையிலும் சுய தொழில் தொடங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எறும்பு போல் சுறுசுறுப்புடன் உழைக்க தயாராகுங்கள்.
    • இன்முகத்துடன் பேசுங்கள்.

    தொழில்துறையில் வெற்றி பெற சில வழிமுறைகளை இங்கே அறிந்து கொள்ளலாம்.

    உழைக்க தயாராகுங்கள்

    வேலை கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள். உழைப்பை எறும்பிடம் கற்றுக்கொள்ளலாம். அது தன் எடையை விட மிக அதிக எடையை தூக்கி கொண்டு சுறுசுறுப்புடன் செயல்படுவதே உழைப்புக்கு உதாரணம். நாளைய தேவைக்கு இன்றே அது களத்தில் இறங்கி விட்டது. நீ மட்டும் உழைக்க தயங்குவது ஏன்? சோம்பலை உதறி தள்ளு. எறும்பு போல் சுறுசுறுப்புடன் உழைக்க தயாராகுங்கள். அந்த உழைப்பு நிச்சயம் உங்களை சமூகத்தில் ஒரு அடையாளம் காட்டும்.

    இன்முகத்துடன் பேசுங்கள்

    தொழிலை நடத்துபவர்கள் தன்னிடம் பணிபுரியும் வேலைக்காரர்களிடமும், நுகர்வோர்களிடமும் இன்முகத்துடன் பேச கற்று கொள்ள வேண்டும். இப்படி பேசுவதால் கடினமான வேலை என்றாலும் அதை துச்சமாக மதித்து வேலைக்காரர்கள் கூடுதல் நேரமும் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். சிடுமூஞ்சியுடன் பேசினால் எதிர்பார்த்த வேலை நிறைவேறாமல் போக வாய்ப்பு உள்ளது.

    நுகர்வோரும் நம்முடைய இன்முக பேச்சில் மகிழ்ந்து கூடுதல் பொருட்களை வாங்கி செல்ல வாய்ப்பு உண்டு. இன்முகத்துடன் பேசுங்கள். அது உங்கள் மதிப்பை தானாக மற்றவர்களிடம் இருந்து உயர்த்தி காட்டும்.

    நேரம் தவறாமை

    தொழில் செய்பவர்கள் நேரம் தவறாமல் செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய விரும்பும் பொருட்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்தால் தான் மீண்டும் ஆர்டர் கிடைக்கும். அது போல் நேரம் தவறாமல் பணிக்கு செல்ல கற்று கொள்ள வேண்டும். சூரியன் ஒருநாள் நேரம் தவறி உதித்தால் நிலைமை என்னவாகும். சிந்தித்து செயல்படுங்கள். நேரத்துடன் உழையுங்கள்.

    முயற்சியை கைவிடாதீர்கள்

    முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கேற்ப முயற்சி செய்தால் தான் எந்த துறையிலும் சாதிக்க முடியும். ஆதலால் உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள். தோல்வி கிடைக்கிறதே என்று செய்ய முயன்ற தொழிலில் பின்வாங்கினால் நிச்சயம் சாதிக்க முடியாது.

    அந்த தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள். பின்னர் தோல்வி தவிர்ப்பது எப்படி என்று உழையுங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும். கரையை தொடமுடியவில்லை என்று எப்போதும் அலைகள் தன் முயற்சியை கைவிடுவதில்லை. என்றாவது ஒருநாள் சுனாமி, பேரலைகளுடன் அது கரையை எட்டும்.

    திட்டமிடுதல் அவசியம்

    ஒருவர் தொழில்முனைவராக வர வேண்டும் என்றால் அதற்கு திட்டமிடுதல் அவசியமாகும். நாம் மேற்கொள்ள இருக்கும் தொழிலில் வெற்றி பெற முடியுமா? அந்த தொழிலை செய்தால் நல்ல லாபம் பெறலாமா? என்று ஆராய்ந்து திட்டமிட்டு தொழிலை தேர்வு செய்ய வேண்டும். திட்டமிடாமல் செய்த காரியம் தோல்வியில் தான் முடியும். எனவே நீங்கள் எந்த தொழிலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அது நமக்கு சரிப்பட்டு வருமா என்று ஆராய்ந்து, அந்த தொழிலை மேற்கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்று திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அந்த தொழிலில் வெற்றியை பெற முடியும்.

    விளம்பர யுக்தி

    இன்றைய போட்டி உலகில் தொழில் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் உங்கள் நிறுவனத்தை அவசியம் பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த வேண்டும். ஏனெனில் விளம்பரத்தில் வரக்கூடிய பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். விளம்பரம் இல்லையெனில் உங்கள் பொருட்களின் தன்மை பொதுமக்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

    பெரிய, பெரிய நிறுவனங்கள் மக்களிடம் மிகவும் பரிட்சம் ஆன பிறகும் தொடர்ந்து தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி வருவதே அது தங்கள் நிறுவனம் மக்கள் மனதை விட்டு அகன்று விடக்கூடாது என்பதற்காக தான். ஆதலால் நீங்கள் எந்த தொழிலை ஆரம்பித்தாலும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எளிதில் மக்கள் மனதில் புரியும்படி விளம்பரம் செய்யுங்கள். அதன் மூலம் உற்பத்தி பொருட்கள் அதிகரித்து அதிக லாபம் கொட்டும்.

    இதுபோல் இன்னும் பல வழிமுறைகள் உள்ளன.

    ×