search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In temples"

    • பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் அபிஷேக நடந்தது.
    • அதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    ஆனி மாத வளர்பிறை சஷ்டியினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன், பரமத்தி வேலூர் தேரடி வீதியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு பால் ,தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் ,தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். இதில் சுற்றுவ ட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கோப்பணம் பாளையத்தில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், திரு வேலீஸ்வரர் கோவில் உள்ள முருகன், அணிச்சம் பாளையத்தில் வேல்வடியில் உள்ள முருகன், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் ,அய்யம்பாளையம் முருகன் கோவில்,ஆனங்கூர் மாரியம்மன் கோவில் உள்ள முருகன், பொத்த னூர் பச்சைமலை முருகன்,

    கபிலர்மலை பாலசுப்பிர மணியசுவாமி கோவில், பாலப்பட்டி முருகன் கோவில், மோகனூர் பாலசு ப்பிரமணிய சுவாமி கோவில், சுள்ளிப்பாளையம் அருகே அருணகிரி மலையில் உள்ள அருணகிரிநாதர் மற்றும் பரமத்தி வேலூர்

    சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்க ளில் ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் பகுதிகளில் அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு விஜயகிரிபழனி ஆண்டவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விஜயகிரி பழனி ஆண்டவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விஜயகிரி பழனி ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயிஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை இதில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், மகா மாரியம்மன் கோவில், திருவேலீஸ்வரர் கோவில், ராஜா கோவில், பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில் ,செல்லாண்டி அம்மன் கோவில், பாண்டமங்கலம் பகவதி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சேளூர்மாரியம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில் வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பொன்னாச்சிஅம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பரமத்திவேலூர் பகுதிகளில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பரமத்திவேலூர் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தில் பரமேஸ்வரர் ஆலயத்திலுள்ள நந்தி பெருமானுக்கு ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர்,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள்,திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்,எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக,ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×