search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் பகுதிகளில் அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை
    X

    கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.

    பரமத்திவேலூர் பகுதிகளில் அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை

    • பரமத்திவேலூர் பகுதிகளில் அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு விஜயகிரிபழனி ஆண்டவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விஜயகிரி பழனி ஆண்டவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விஜயகிரி பழனி ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயிஅம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை இதில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், மகா மாரியம்மன் கோவில், திருவேலீஸ்வரர் கோவில், ராஜா கோவில், பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில் ,செல்லாண்டி அம்மன் கோவில், பாண்டமங்கலம் பகவதி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சேளூர்மாரியம்மன் கோவில், கொந்தளம் மாரியம்மன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோவில் வடகரையாத்தூர் மாரியம்மன் கோவில், பொன்னாச்சிஅம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவில்களில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×