search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home Tips"

    • சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.
    • காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

    * இறைச்சி வேகவைக்கும்போது கொஞ்சம் பாக்கு சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * வெந்தயத்தை வேகவைத்து, கடைந்து தேன் கலந்து உண்டு வர தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

    * காலிபிளவர் சமைக்கும்போது கொஞ்சம் பால் சேர்த்தால் பூ போன்ற வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும். பச்சை வாடையும் வராது.

    * பிரிட்ஜில் மாவை வைக்கும்போது உப்பு சேர்க்கக்கூடாது. உப்பு சேர்த்தால் புளித்துவிடும்.

    * அலுமினியப் பாத்திரங்களில் அடிப்பிடிப்பு கறையை நீக்க உப்புக்காகிதம் கொண்டு தேய்த்தால் பாத்திரம் புதுசு போல மின்னும்.

    * ஒரு கைப்பிடி கல் உப்பை துணியில் கட்டி அரிசி மூட்டைக்கு அருகில் வைத்தால் பூச்சிகள் எதுவும் வராது.

    * சமையல் அறையில் வசம்பு தூள் தூவி விட்டால் பூச்சிகள் வராது.

    * எறும்பு தொந்தரவு உள்ள இடங்களில் நான்கைந்து கிராம்பை போட்டு விட்டால் எறும்புகள் வராது.

    * சீடை செய்யும்போது அதனை ஊசியால் குத்தி பின்பு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

    * புளியை வெந்நீரில் ஊறவைத்து, பிறகு கரைத்தால் சீக்கிரமாக கரைந்துவிடும்.

    * சேப்பங்கிழங்கை வேகவைத்து தோலை அகற்றி வட்ட வடிவமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறு மொறுவென இருக்கும்.

    * அரிசியில் வண்டோ, புழுவோ வராமல் இருக்க வேப்பம் இலைகளைப் போட்டு வைக்கலாம்.

    * உலர்ந்த ஆரஞ்சு தோலை புகை போட்டால் வீட்டுக்குள் கொசு வராது. இது இயற்கையான கொசு விரட்டி.

    * பூஜை செய்யும்போது வீட்டில் புகை அதிகமாக இருந்தால் ஒரு ஈரத்துணியை தொங்கவிடுங்கள். புகை காணாமல் போய்விடும்.

    * சப்பாத்திக்கு மாவு பிசையும் முன்னால் கையில் கொஞ்சம் உப்பை தடவிக்கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

    * உருளைக்கிழங்கை வேகவைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் அவை ஜொலிக்கும்.

    * காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

    • சாப்பிட்ட பிறகு கற்கண்டை உண்டால் ஒவ்வாமை நீங்கும்.
    • கீரை சமைக்கும்போது சர்க்கரையை தூவினால் நிறம் மாறாமல் இருக்கும்.

    * மட்டன் பிரியாணி செய்யும்போது ஆட்டிறைச்சி துண்டுகளை சிறிது எலுமிச்சை சாறு கலந்து தயிரில் அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்பு பிரியாணி செய்தால் வாடை இருந்தாலும் நீங்கி விடும். மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * சாப்பிட்ட பின்பு வெள்ளை கற்கண்டை உட்கொண்டு வந்தால் ஒவ்வாமை நீங்கும். எளிதில் ஜீரணமாகும்.

    * உளுந்த வடைக்கு உளுந்தம் பருப்பு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் சிறிது பச்சரிசி மாவை தூவினால் போதும். கெட்டித்தன்மையாகிவிடும்.

    * கீரை சமைக்கும்போது அதனுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரையை தூவினால் நிறம் மாறாமல் சூடாக, சுவையாக மென்மையாக இருக்கும்.

    * மலச்சிக்கல் பிரச்சினையை அதிகம் சந்திப்பவர்கள் அடிக்கடி உணவில் பப்பாளிக்காய் கூட்டு அல்லது பப்பாளிப்பழம் சாப்பிட்டு வரலாம். விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

    * மோர்க்குழம்பு மீந்துவிட்டால் பருப்பு வடைகளை துண்டுகளாக வெட்டிப்போட்டு பரிமாறலாம்.

    * தேங்காய் சட்னி மீந்து போனால் வீணாக்க வேண்டாம். அதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு, கடலை மாவு சேர்த்து பிசைந்து சப்பாத்திசுடலாம். மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையில் அதிகமாக கரி படிவதை தடுக்க ஆங்காங்கே பேப்பர்களை தொங்க விடலாம்.

    * கை கழுவும் இடம் அல்லது பாத்திரங்களை தேய்க்கும் இடமான 'சிங்க்'கில் வாரம் ஒரு முறை உப்பு கலந்த வெந்நீரை ஊற்றி கழுவினால் துர்நாற்றம் நீங்கிவிடும்.

    * குழம்பு மீன், வறுத்த மீன் அதிகம் விரும்பி சாப்பிட்டால் அதனுடன் தயிர் சேர்த்துக்கொள்ளக்கூடாது. சீக்கிரம் செரிமானமாக நாட்டுச்சர்க்கரை அல்லது பழம் உட்கொள்ளலாம்.

    * கறிவேப்பிலை துவையல், புதினா ரசம் அல்லது துவையல், வல்லாரை கீரை துவையல் அல்லது ரசம் வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும். ரத்தம் சுத்தமாகும்.

    • பாக்கு சேர்த்து வேகவைத்தால் இறைச்சி சீக்கிரம் வெந்துவிடும்.
    • புளிக்குழம்பிற்கு மிளகு, சீரகப்பொடி சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை கடலை மாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்தால் வெஜிடபிள் போண்டா தயார். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு இது எளிய வழியாக இருக்கும்.

    * சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக்கொள்ள பழைய தாள்களை கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

    * காபி டிகாஷன் போடுவதற்கு முன்பு சுடுதண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்தால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

    * அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

    * வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் சேனைக்கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * புளிக்குழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.

    * இறைச்சியை வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.

    * எண்ணெய் பலகாரங்களை டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

    * சீடை செய்யும்போது அதை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

    * வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

    * கிழங்குகளை சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைக்க வேண்டும். அப்படி செய்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

    * தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் கொஞ்சம் புளியை வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

    • உருளைக்கிழங்கை மசித்து கலந்தால் வடை எண்ணெய் குடிக்காது.
    • தேங்காய் பால் ஊற்றிக் சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையாக இருக்கும்.

    1. ஏலக்காய் தூள் அரைக்கும்பொழுது ஏலக்காய் நமத்து போய்விட்டால் வெறும் வாணலியில் ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின்னர் அரைத்து பாருங்கள். நைசாக அரைபடும்.

    2. உளுந்து வடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.

    3. சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

    4. பாயசத்திற்கு திராட்சைக்குப் பதிலாக பேரிச்சம் பழத்தை பொடிதாக நறுக்கி, நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

    5. ரவா தோசை செய்யும்போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.

    6. கனமில்லாத மெலிதான தோசைக்கல்லை சப்பாதிக்கும், அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும் பயன் படுத்த வேண்டும்.

    7. புளித்த மோர் வீட்டில் இருந்தால் சிறிதளவு வெண்டைக்காயில் சேர்த்து பொறியல் செய்தால், வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

    8. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்த பின்பு அதிக நேரம் வதக்க கூடாது. அது பச்சையாக இருந்தால் தான் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

    9. புடலங்காய் கசப்பாக இருந்தால், அவை பாம்பு ஏறிய காய் என்பார்கள். ஆகவே சிறிது கிள்ளி சுவைத்து பார்த்து வாங்க வேண்டும்.

    10. அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அருகம்புல்லில் அதிகம்.

    • அவலை அரைத்துக் கலந்தால் கூழ் பதமாகி விடும்.
    • வடகம் கூழில் இஞ்சியை சேர்த்தால் மணமும் கூடும், காரமும் இருக்கும்.

    * வடகம் செய்பவர்கள் ஐந்து பங்கு பச்சரிசிக்கு ஒரு பங்கு ஜவ்வரிசி சேர்த்து மாவு அரைத்து வடகம் பிழிந்தால் வடகம் நல்ல மொறுமொறுப்பாகவும் வெள்ளையாகவும் இருக்கும்.

    * வடகம் கூழ் நீர்த்து விட்டால் ஊற வைத்த அவலை அரைத்துக் கலந்தால் கூழ் பதமாகி விடும்.

    * வடகம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டுப் பார்த்தால் உப்பு குறைவாகவே இருக்க வேண்டும். அப்போது தான் காய்ந்த பிறகு உப்பு சரியாக இருக்கும்.

    * சாதம் மிகுந்து விட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடகம் போல பிழிந்து காய வைக்கவும். இதை எண்ணெய்யில் பொரித்து சாப்பிட்டால் மொறுமொறுவென்று இருப்பதுடன் சுவையும் அசத்தும்.

    * ஜவ்வரிசி வடகம் உடைந்து தூளாகி இருந்தால் அவற்றை பஜ்ஜி மாவில் இரண்டு நிமிடங்கள் ஊறப்போட்டு பிறகு பஜ்ஜி சுட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.

    * வடகக்கூழில் பச்சை மிளகாயின் அளவைக் குறைத்து இஞ்சியை அரைத்துச் சேர்த்தால் மணமும் கூடும், காரமும் இருக்கும், உடம்புக்கும் நல்லது.

    * வடகம் மாவில் எலுமிச்சைச்சாறு அதிகமாக விடக்கூடாது. வடகம் பொரித்து எடுக்கும் போது சிவந்து விடும். அதுபோல் வடகம் மாவு கிளறும்போது சிறிது பாலை விட்டுக்கிளறினால் வடகம் வெண்மையாக இருக்கும்.

    * எந்தவித வடகக் கூழானாலும் அதில் சிறிது நெய் கலந்து விட்டால் பொரிக்கும்போது மணமாக இருக்கும்.

    * வடகம், வற்றல் வைக்கும் டப்பாக்களில் வெந்தயம் சிறிது போட்டு வைத்தால் அவை சீக்கிரமாக நமத்துப் போகாது.

    * வடகத்தில் பூச்சி வராமல் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க அதனுடன் மிளகாய் வற்றலையும் கொஞ்சம் போட்டு வைத்தால் போதும். மிளகாயின் காரத்தினால் பூச்சிகள் அண்டாது.

    * வடகம் பிழியும் அச்சின் உட்புறம் கொஞ்சம் எண்ணெய்யைத் தடவி வைத்தால், சிரமப்படாமல் வடகம் பிழியலாம்.

    * கொத்தமல்லி அதிகமாகவும், விலை மலிவாகவும் கிடைக்கும் நாட்களில் அதனுடன் உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து வடகமாகத்தட்டி வெயிலில் காயவைத்து குழம்பு, ரசத்துடன் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

    * குழம்பு வடகம் உருட்டி வைக்கும்போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து உருட்டி வைத்தால் ஒரு வருடத்துக்கு கெட்டுப்போகாது.

    * ஜவ்வரிசி வடகம் முத்து முத்தாக இருக்க வேண்டுமென்றால் ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

    • வாழைத்தண்டை சாப்பிடும் நாட்களில் தயிர், மோரை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
    • கிழங்கு வகைகளை ரோஸ்ட் செய்யும்போது மிதமான சூட்டில் வதக்கவும்.

    * கிழங்கு வகைகளை ரோஸ்ட் செய்யும்போது அரிசி மாவு அல்லது ரவையில் உப்பு, காரம், பெருங்காயம் அல்லது மசாலா தூளை கலந்து வைக்கவும். கிழங்கை வேகவைத்து ரவை அல்லது அரிசி மாவில் நன்றாக தோய்த்து சிறிது நேரம் கழித்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வதக்கவும். சுவையாக இருக்கும்.

    * மிக்சியில் இட்லி, தோசை மாவு அரைத்தால் அரிசி மாவையும், உளுந்து மாவையும் தனித்தனியாக அரைத்து பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். அதை சூடு ஆறும் வரை குளிர்ந்த நீரில் வைக்கவும். பின்பு இரண்டு மாவையும் ஒன்றாக பாத்திரத்தில் கொட்டி உப்பு கலந்து வைத்தால் மறுநாள் இட்லி மென்மையாக இருக்கும்.

    * வெங்காய பக்கோடா தயாரிக்க வெங்காயத்தை துருவியது போல் சிறிதாக நறுக்கி உப்பு தூள் கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்பு அதனுடன் கடலைமாவு, மசாலாப் பொடிகள் சேர்த்து பிசைந்து தண்ணீர் சேர்க்காமல் 2 ஸ்பூன் உருக்கிய நெய் மட்டும் விட்டு பிசைய வேண்டும். பின்பு எண்ணெய்யில் பொரித்தெடுத்தால் வெங்காய பக்கோடா ருசியாக இருக்கும்.

    * காய்ந்த பச்சை பட்டாணி அல்லது கொண்டைக்கட லையை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை மூடி வைக்கவும். அரை மணி நேரத்தில் பட்டாணி, கடலை நன்றாக ஊறிவிடும். அதை சமையலுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். சமையல் ருசியாக இருக்கும்.

    * வாழைத்தண்டை சமைத்து சாப்பிடும் நாட்களில் தயிரையும், மோரையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    • பேப்பர் விரித்து அப்பளம் வைத்தால் வெகு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
    • பூச்சி, புழுக்கள் வராமல் இருக்க வசம்பை போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

    * அப்பளம் வைக்கும் டப்பாவில் சிறிது அரிசி போட்டு அதன் மேல் பேப்பர் விரித்து அப்பளம் வைத்தால் வெகு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    * சிறிய வகை மீன்களுக்கு அதிக மசாலா சேர்க்காமல் உப்பும், மிளகாய்த்தூளும் கலந்தாலே சுவை அதிகமாக இருக்கும்.

    * தக்காளி சட்னி தயார் செய்யும் போது வெங்காயம், தக்காளியின் அளவு குறைவாக இருந்தால் இரண்டையும் வதக்கியவுடன் சிறிது வறுத்த வேர்க்கடலை சேர்க்க சட்னியின் அளவு கூடும்.

    * கறிவேப் பிலையை காம்புடன் பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அதன் பசுமை மாறாமல் இருக்கும்.

    * பூண்டுவை கேரட் துருவுவதில் துருவினால் அதன் தோல்கள் உரிந்து, உரிக்க சுலபமாக இருக்கும்.

    * இட்லி பாத்திரத்திற்கு அடியில் இரண்டு ரூபாய் நாணயத்தை போட்டு இட்லி வேக வைத்தால் தண்ணீரின் அளவை அதன் சத்தத்தை வைத்து கண்டு பிடிக்க எளிதாக இருக்கும்.

    * ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

    * வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

    * காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

    * காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

    * கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாக இருக்கும்.

    • சிக்கன், மட்டன் சமைக்கும் போது சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை கூடும்.
    • மோர்க் குழம்பில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்தால் வாசனையாக இருக்கும்

    * பாகற்காயை சிறு துண்டுகளாக வெட்டி, அரிசி கழுவிய தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்தால் அதன் கசப்புத் தன்மை நீங்கி விடும்.

    * சப்பாத்தி மிருதுவாக இருக்க சப்பாத்தி மாவை தேய்த்தவுடன் தோசைக்கல்லில் போட்டு எடுத்து விட வேண்டும்.

    * பொரியலுடன் வேர்க்கடலையை வறுத்துப் பொடியாக்கி இறுதியில் சேர்த்தால் அதன் சுவை கூடும்.

    * ஊறுகாயில் மஞ்சள் தூள் சேர்த்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். ஊறுகாய் மணமாகவும் இருக்கும்.

    * அல்வா செய்யும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் அதனுடன் சிறிது சோள மாவை சேர்த்தால் சரியான பதம் கிடைத்துவிடும். அல்வாவின் சுவையும் அதிகரித்து விடும்.

    * மோர்க் குழம்பு செய்யும்போது இறுதியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்தால் குழம்பு வாசனையாக இருக்கும்.

    * அரிசி வைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் வண்டுகள் புகாது.

    * சர்க்கரைப் பாகு செய்யும் போது அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்தால் குலாப் ஜாமூன் விரியாமல் இருக்கும்.

    * சிக்கன், மட்டன் சமைக்கும் போது அதில் சிறிதளவு தயிர் சேர்த்தால் சுவை கூடும்.

    • சட்னி செய்யும் போது எள்ளை வறுத்து பொடித்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.
    • எண்ணெய் கொட்டினால் கோலமாவை போட்டு துடைத்தால் நீங்கி விடும்.

    * வெங்காய சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவினால் ருசி அதிகமாக இருக்கும்.

    * துருபிடித்த தோசைக்கல், வாணலி உள்ளிட்ட துருபிடித்த பாத்திரத்தில் படிந்துள்ள கறைகளை நீக்க உருளைக்கிழங்கை பாதியாக வெட்டிக் கொள்ளவும். சிறிது உப்பு மற்றும் எண்ணெய்யை கலந்து அதில் உருளைக்கிழங்கை தோய்த்து, துருபிடித்த பாத்திரத்தை தேய்த்தால் பளிச்சென மாறிவிடும்.

    * சமையல் அறையில் கரப்பான் பூச்சி தொல்லையா? அந்த இடத்தில் கிராம்பை வைக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெய்யை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம். இதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி வராது. அடிக்கடி கிராம்பை மாற்ற வேண்டும்.

    * புதிதாக வாங்கிய மண் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சிறிது நேரம் வைத்து சூடேற்றிவிட்டு, பின் அதை கழுவினால் மண் வாசனை வராது. விரிசலும் ஏற்படாது

    * சாக்பீஸ்சை காடா துணியில் பொதிந்து வெள்ளிப்பொருள்கள் வைத்திருக்கும் இடத்தில் வைத்தால் அவை துரு பிடிக்காமலும், கருத்துப்போகாமலும் இருக்கும்.

    * அடைக்கு கடலைப்பருப்பை ஊறவைத்து அரிசி கலந்து அரைக்கும் போது வேகவைத்த உருளைக்கிழங்கு அல்லது மரவள்ளிக்கிழங்கை போட்டு அரைத்தால் அடை ருசியாக இருக்கும்.

    * சமையல் மேடையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மீது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.

    * மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்சில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

    * வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

    * பாகற்காயை வில்லைகளாக நறுக்கி, எலுமிச்சை சாறில் சிறிது நேரம் ஊற வைத்து பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.

    • எலிக்கு புதினா வாசனை பிடிக்காது.
    • பூண்டு பேஸ்ட் கலந்த தண்ணீரை தெளித்தால் கரப்பான் பூச்சிகள் வராது.

    * எலிக்கு புதினா வாசனை பிடிக்காது. எனவே புதினாவையோ அல்லது புதினா எண்ணெயையோ வைத்தால் அது வராது.

    * கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிள்குத்தூள், வெங்காய் பேஸ்ட் அல்லது பூண்டு பேஸ்ட் கலந்த தண்ணீரை தெளித்தால் கரப்பான் பூச்சிகள் வராது.

    * ஈக்களின் தொல்லைகள் நீங்க வீட்டை துடைக்கும் போது அதில் சிறிதளவு உப்பு சேர்த்து துடைத்தால் ஈக்களின் தொல்லை இருக்காது.

    * எறும்புகள் அதிகம் கிச்சனில் தொல்லை கொடுக்கிறதா? ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் உப்பு கலந்து எறும்பு உள்ள இடங்களில் தெளித்தால் எறும்புகள் வராது. அதேபோல் பெருங்காயத்தை தூவிவிட்டாலும் எறும்புத்தொல்லை இருக்காது.

    * சில சமயம் வெல்லத்தை துருவ வேண்டும் என்றால், காய்கறித் துருவலில் வைத்து துருவினால் சிரமம் இல்லாமல், சீக்கிரமே வெல்ல தூள் நமக்கு கிடைக்கும்.

    * வெயில் காலத்தில் தயிர் சீக்கிரம் புளித்து போய்விடும். அப்படி, தயிர் புளிக்காமல் இருக்க அதில் நசுக்கிய இஞ்சி, ஒரு துண்டு தேங்காய் பத்தை இரண்டையும் தயிரில் போட்டு வைத்தால் தயிர் சீக்கிரம் புளித்து போகாது.

    * அதேபோல், நெய் ரொம்ப நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்க, நெய்யில் ஒரு சிறிய துண்டு வெல்லக்கட்டியை போட்டு வைத்தால் போதும்.

    * அதுபோன்று, நீங்கள் வெங்காயம் நறுக்கும் போது, கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது.

    * சில சமயம் நாம் வைத்திருக்கும் தோசை மாவில் தோசை சரியாகவே வராது. அதேபோன்று, தோசை மாவு கொஞ்சம் தான் இருக்கிறது என்றால் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அந்த மாவில் தோசை வார்த்து பாருங்கள். கல்லில் தோசை ஒட்டாமலும் வரும். அதே சமயம் தோசையில், புளிப்பு தெரியாமலும் இருக்கும்.

    ×