என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக....
- அவலை அரைத்துக் கலந்தால் கூழ் பதமாகி விடும்.
- வடகம் கூழில் இஞ்சியை சேர்த்தால் மணமும் கூடும், காரமும் இருக்கும்.
* வடகம் செய்பவர்கள் ஐந்து பங்கு பச்சரிசிக்கு ஒரு பங்கு ஜவ்வரிசி சேர்த்து மாவு அரைத்து வடகம் பிழிந்தால் வடகம் நல்ல மொறுமொறுப்பாகவும் வெள்ளையாகவும் இருக்கும்.
* வடகம் கூழ் நீர்த்து விட்டால் ஊற வைத்த அவலை அரைத்துக் கலந்தால் கூழ் பதமாகி விடும்.
* வடகம் மாவுகள் தயாரித்தவுடன் சாப்பிட்டுப் பார்த்தால் உப்பு குறைவாகவே இருக்க வேண்டும். அப்போது தான் காய்ந்த பிறகு உப்பு சரியாக இருக்கும்.
* சாதம் மிகுந்து விட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடகம் போல பிழிந்து காய வைக்கவும். இதை எண்ணெய்யில் பொரித்து சாப்பிட்டால் மொறுமொறுவென்று இருப்பதுடன் சுவையும் அசத்தும்.
* ஜவ்வரிசி வடகம் உடைந்து தூளாகி இருந்தால் அவற்றை பஜ்ஜி மாவில் இரண்டு நிமிடங்கள் ஊறப்போட்டு பிறகு பஜ்ஜி சுட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
* வடகக்கூழில் பச்சை மிளகாயின் அளவைக் குறைத்து இஞ்சியை அரைத்துச் சேர்த்தால் மணமும் கூடும், காரமும் இருக்கும், உடம்புக்கும் நல்லது.
* வடகம் மாவில் எலுமிச்சைச்சாறு அதிகமாக விடக்கூடாது. வடகம் பொரித்து எடுக்கும் போது சிவந்து விடும். அதுபோல் வடகம் மாவு கிளறும்போது சிறிது பாலை விட்டுக்கிளறினால் வடகம் வெண்மையாக இருக்கும்.
* எந்தவித வடகக் கூழானாலும் அதில் சிறிது நெய் கலந்து விட்டால் பொரிக்கும்போது மணமாக இருக்கும்.
* வடகம், வற்றல் வைக்கும் டப்பாக்களில் வெந்தயம் சிறிது போட்டு வைத்தால் அவை சீக்கிரமாக நமத்துப் போகாது.
* வடகத்தில் பூச்சி வராமல் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க அதனுடன் மிளகாய் வற்றலையும் கொஞ்சம் போட்டு வைத்தால் போதும். மிளகாயின் காரத்தினால் பூச்சிகள் அண்டாது.
* வடகம் பிழியும் அச்சின் உட்புறம் கொஞ்சம் எண்ணெய்யைத் தடவி வைத்தால், சிரமப்படாமல் வடகம் பிழியலாம்.
* கொத்தமல்லி அதிகமாகவும், விலை மலிவாகவும் கிடைக்கும் நாட்களில் அதனுடன் உப்பு, மிளகாய் சேர்த்து அரைத்து வடகமாகத்தட்டி வெயிலில் காயவைத்து குழம்பு, ரசத்துடன் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.
* குழம்பு வடகம் உருட்டி வைக்கும்போது ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து உருட்டி வைத்தால் ஒரு வருடத்துக்கு கெட்டுப்போகாது.
* ஜவ்வரிசி வடகம் முத்து முத்தாக இருக்க வேண்டுமென்றால் ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்