என் மலர்
நீங்கள் தேடியது "சமையல் டிப்ஸ்"
- வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.
- காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.
* வாழைக்காயை வறுவல் செய்யும் பொழுது சிறிது பிரட் தூள் சேர்த்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* சாம்பார் தயாரிக்கும்பொழுது கடைசியில் சிறிது புளி கரைசல் ஊற்றினால் சுவை மிகுதியாக இருக்கும்.
* புதினா சட்னி செய்யும் பொழுது சிறிது வேர்க்கடலை வறுத்து போட்டு செய்தால் ருசி அபாரமாக இருக்கும்.
* கசகசா, முந்திரி சிறிது நேரம் ஊறவைத்து அரைத்து குருமாவில் சேர்த்தால் எந்த குருமாவாக இருந்தாலும் ருசியாக இருக்கும்.
* புளி சாதம், எலுமிச்சை சாதம் முதலியவை செய்யும் பொழுது நல்லெண்ணெய் ஊற்றி கிளறினால் வாசனை தூக்கும்.
* வெறும் வாணலியில் அவலை வறுத்து அரைத்து, அதை தோசை மாவில் கலந்து தோசை சுட்டால் தோசை மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
* மோருடன் சிறிது இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து பருகினால் வாயு தொல்லை நீங்கும்.
* ஆப்பம் சுடும் பொழுது அந்த மாவில் சிறிது கோதுமை மாவு சேர்த்துக் கொண்டால் ஆப்பம் சீக்கிரம் உலர்ந்து போகாமல் இருக்கும்.
* பிரியாணிக்கு சாதம் வடிக்கும்போது கொதிக்கும் தண்ணீரில் ஏலக்காயை போட்டு கொதிக்க விட்டு வடித்தால் சாதம் வாசனையாக இருக்கும்.
* வெண்டைக்காய் வறுவல் செய்யும் பொழுது சிறிது புளித்த மோர் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென இருக்கும்.
* காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. அது பாத்திரத்தை கருமையாக்கி விடும்.
* கத்திரிக்காய் எண்ணெய் குழம்பு சமைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் கெட்டி தயிரை கலந்தால் கத்திரிக்காய் கறுப்பாகாமல் இருப்பதுடன் சுவையும் கூடும்.
* பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது கடைசியில் பொட்டு கடலை மாவு தூவி இறக்கினால் சுவை அதிகரிக்கும்.
* உளுந்து வடைக்கு மிக்சியில் அரைக்கும் பொழுது மிக்சி ஜாரில் சிறிது நல்லெண்ணெய் தடவி பிறகு அரைத்தால் மிக்சியை எளிதில் கழுவி விடலாம்.
* பச்சை மிளகாயை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து பயன்படுத்தினால் அதன் காரம் குறையும்.
* முறுக்கு, தட்டை, சீடை போன்ற பலகாரங்கள் செய்யும் பொழுது அரிசி மாவை முதலில் வெறும் வாணலியில் லேசாக வறுத்து பின்பு பலகாரம் செய்தால் மொறுமொறுப்பு கூடுவதுடன் ருசியும் அபாரமாக கிடைக்கும்.
* இட்லி பொடி செய்யும்போது கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு அதனுடன் கொள்ளு பருப்பையும் சிறிது சேர்த்தால் பொடி சுவையாக இருப்பதுடன் கெட்ட கொழுப்பும் குறையும்.
* பாயசம் செய்யும் பொழுது ஜவ்வரிசியை லேசாக வறுத்து விட்டு பின்பு பாயசம் செய்தால் ஜவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.
- வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், மிருதுவாகும்.
- பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.
* நெல்லிக்காய் ஊறுகாயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், எளிதில் கெடாது.
* இட்லிக்கு உளுந்து அரைக்கும்போது ஐஸ் வாட்டர் விடவும். மாவு சூடாகாமல் இட்லி பூப்போன்று வரும்.
* சர்க்கரைப் பாகில் எலுமிச்சை சாறு சேர்த்தால், சீக்கிரம் கெட்டியாகாது.
* கண்ணாடி பாட்டிலில் துர்நாற்றம் வீசுகிறதா? அதில் சிறிது கடுகு போட்டு, வெந்நீர் ஊற்றவும். சிறிது நேரம் கழித்துக் கழுவினால், துர்நாற்றம் போய்விடும்.
* பயறு வகைகளை ஊறப்போட 'மறந்துவிட்டால் பயறை 'ஹாட் பேக்'கில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மூடவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து, வழக்கம் போல குக்கரில் வேகவைத்துப் பயன்படுத்திக்கொள்ளவும்.
* கேக் செய்யும்போது முந்திரிப் பருப்பு, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பாலில் ஊறப்போட்டு பிறகு சேர்த்தால், கேக் உதிர்ந்து விழாமல் இருக்கும்.
* வாழைப்பூவை ஆய்ந்ததும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால், மிருதுவாகும்.
* புதிதாக அரைத்த மிளகாய்த் தூளில், சிறிது சமையல் எண்ணெய் விட்டு கிளறி வைத்தால், கார நெடி இல்லாமல் சுவை கூடும்.
* வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது சிறிது சீரகத்துடன் தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து, பொடியாக்கிப் போட்டால், பொரியல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
* பேக்கிங் அவனில் கேக் கலவைகளை வைத்த பிறகு கேக் வெந்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள அவசரப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்கு முன், வெளியே எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால், கேக்கின், வடிவமும், சுவையும் மாறிவிடும்.
* பாகற்காயில் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால் கசப்பு இருக்காது.
* மணத் தக்காளி வற்றல் குழம்பு செய்கிறீர்களா? இரண்டு உளுந்து அப்பளங்களையும் தாளிக்கும் எண்ணெயில் அப்பளம், போட்டு பிறகு புளியைக் கரைத்து ஊற்றி வற்றல் குழம்பு செய்யவும். புது சுவையோடு குழம்பு மணக்கும்.
* உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, முதலில் மிக்ஸியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு தடவிக்கொண்டு பிறகு உளுந்தைப் போட்டு அரைக்கவும். ஒட்டாமல் வரும்.
* பீன்ஸ், பட்டாணி போன்றவைகளில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து வேக வைத்தால் அதன் நிறம் மாறாது.
* வடைக்கு மாவு தயாரிக்கும்போது அதில் சிறிதளவு நெய் சேர்க்க மொறு மொறுப்பாக இருக்கும். எண்ணெய்த் தேவை குறைவாகும்.
* கீரை சமைக்கும் போது அதனுடன் இளந்தண்டையும் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
- புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
- எந்த வகை புலாவ் செய்தாலும் அரிசியை பத்து முதல்பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்கூடாது.
காய், கூட்டு எல்லாம் மிஞ்சிப் போனால், இவற்றை ஒன்றாகக்கலந்து, கெட்டியாக புளி கரைத்துச் சேர்த்து, சிறிது காரத்தூள், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து ஒருகொதி வந்ததும் இறக்கி விடவும். ருசி மிகுந்த பொரித்த குழம்பு ரெடி.
இடியாப்பம் மீந்து விட்டால் அதை வெயிலில் காய வைத்து எடுத்தால் புதுவகை வடகம் தயார்.
புளிச்சாற்றில் உப்பு, பெருங்காயம் சேர்ந்து, பச்சை மிளகாய்களை கீறி ஊற வைத்து, வெயிலில் காய வைத்து எடுத்தால் சுவையான புளி மிளகாய் தயார்.
முறுக்குமாவு, தேன்குழல் மாவு பிசையும்போது தண்ணீர் அதிகமாகி விட்டால் டிஷ்யூ பேப்பரில் மாவை வைத்து, சற்று புரட்டி எடுத்தால் ஈரம் உறிஞ்சப்பட்டு மாவு பக்குவம் ஆகி விடும்.
சாம்பார் பொடி அரைக்கும்போது அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு அரைத்தால் வண்டு, சிறு பூச்சிகள் வராது. சாம்பார் செய்யும் போது மறக்காமல் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
துவையல் அரைக்கும்போது, சின்னக் கிண்ணத்தில் புளியை தண்ணீர் தெளித்து சூடாக இருக்கும் குக்கர் மீது வைத்து 5 நிமிடங்கள் கழித்து அரைக்க உபயோகித்தால் துவையல் நன்றாக மசியும்.
புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். அதுபோல் எந்த வகை புலாவ் செய்தாலும் அரிசியை பத்து முதல்பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக்கூடாது. அப்போது தான் புலாவ் குழையாமல் இருக்கும்.
குருமா, கிரேவி, நூடுல்ஸ் போன்றவற்றுக்கு தக்காளி சேர்ப்பதற்கு பதில் தக்காளி கெச்சப் சேர்த்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் சூப்பராக இருக்கும்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது அதில் சிறிது சோம்பைத் தூளாக்கித் தூவினால் உருளைக்கிழங்கு வறுவல் கமகம வாசனையுடன் இருக்கும்.
- வாழைப்பூ வடை செய்யும்போது சிறிது பச்சரிசி மாவு சேர்த்தால் வடை உடையாமல் வரும்.
- புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் சுவை கூடும்.
தோசை மாவு அரைக்கும் போது, வேக வைத்த சாதத்தையும் சேர்த்து அரைத்தால் தோசை மென்மையாக இருக்கும்.
தோல் சீவிய இஞ்சை இடித்து தயிரில் சேர்த்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்.
வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது புளித்த மோர் சேர்த்தால் பொரியல் மொறுமொறுவென்று இருக்கும்.
கேரட், பீட்ரூட் அல்வா செய்யும்போது சிறிது பால் பவுடர் சேர்த்து கிளறினால் அல்வாவின் ருசி கூடுதலாகும்.
வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும் போது வெந்தயத்தை சேர்த்தால் நெய் வாசனை கமகமவென்று இருக்கும்.
வாழைப்பூ வடை செய்யும்போது சிறிது பச்சரிசி மாவு சேர்த்தால் வடை உடையாமல் வரும்.
புலாவ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் பால் அல்லது தேங்காய் பால் சேர்த்தால் சுவை கூடும்.
ரசம் தாளிக்க எண்ணெய்க்கு பதில் நெய் ஊற்றி தாளித்தால் ரசம் வாசனையாக இருக்கும்.
கீரையை சமைத்து இறக்கிய பின்னர் உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் சில ரசாயன மாற்றங்களை தடுக்கலாம்.
சாம்பாரில் புளிப்பு அதிகமாகி விட்டால் ஒரு துண்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கலாம்.
பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் பூரி சீக்கிரம் நமத்து போகாமல் இருக்கும்.
சாலட் தயாரிக்க தக்காளி நறுக்கும் போது சாறு வெளியேவராமல் இருக்க, தக்காளியின் அடிப்பகுதியில் பிளஸ் போன்று கீறி பின்னர் வட்டமாக நறுக்கலாம்.
ரசம் வைக்கும்போது கறிவேப்பிலை இல்லை என்றால் சிறிதளவு முருங்கையிலை சேர்த்து இறக்கினால் தனி சுவை தரும்.
சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும்போது ஒரு டீஸ்பூன் கொள்ளுப்பருப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் உடம்பில் கொழுப்பு சேராமல் இருக்கும்.
- சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
- தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது சூப், குழம்பு தயார் செய்ய தக்காளி சாஸ் பயன்படுத்தலாம்.
ரவா தோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்யவும். தோசை சிவந்து மொறுமொறுவென்று இருக்கும்.
தேங்காய் பர்பி கிளறும்போது பழுத்த மாம்பழம் ஒன்றை தோல் சீவி துருவி கலந்து விட்டால் சுவையான கலர்புல் பர்பியாக இருக்கும்.
தேயிலையை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் சர்க்கரை, தேங்காய் துருவல் போட்டு பருகினால் சுவையாக இருக்கும்.
இட்லி மாவு கொஞ்சமாக இருந்தால் ரவையை வறுத்து மாவுடன் கலந்து சிறிது நேரம் ஊற வைத்த பிறகு தோசை வார்த்தால் மொறுமொறுவென்று இருக்கும்.
பால் பாயாசம் செய்யும் போது இரண்டு பச்சை வாழைப் பழத்தை நன்கு பிசைந்து போடவும். சுவை கூடும். மணமாகவும் இருக்கும்.
ரவையை டால்டா விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைத்து பிறகு சர்க்கரைப்பாகு வைத்து கேசரி கிளறினால் ருசி அதிகரிப்பதுடன் டால்டாவும் குறைவாக செலவாகும்.
வடை தட்டும்போது உள்ளே ஒரு பன்னீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுத்தால் வித்தியாசமான, ருசியான வடை தயார்.
சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
பீட்ரூட்டின் தோலை நகத்தினால் கீறிப் பார்த்தால் உள்ளே நல்ல ரோஸ் நிறத்தில் இருந்தால் அது இனிப்பான காயாகும்.
வற்றல் செய்யும் கூழில் சிறிதளவு வடிகஞ்சியையும் சேர்த்து கொள்ளுங்கள். இப்படி செய்தால் வற்றல் மாவாக கரையும்.
பஜ்ஜியில் அதிக காரம் வேண்டாம் என்று விருப்பப்பட்டால் உப்பையும், ஓமத்தையும் சேர்த்து அரைத்து பஜ்ஜி செய்யலாம். சுவையாக இருக்கும்.
தேங்காய் பர்பி செய்கிறீர்களா? வேர்க்கடலையின் சிவப்புத் தோலை நீக்கி, இரண்டாக உடைத்து நெய்யில் பொரித்து போட்டு செய்யுங்கள். கூடுதல் சுவை கிடைக்கும்.
தக்காளி விலை அதிகமாக இருக்கும்போது சூப், குழம்பு தயார் செய்ய தக்காளி சாஸ் பயன்படுத்தலாம். ருசியாக இருக்கும்.
குழம்பில் மஞ்சள் பொடி அதிகமாகி விட்டால் வருந்த வேண்டாம். சுத்தமான ஒரு வெள்ளைத் துணியை குழம்பில் போடுங்கள். அதிகமான மஞ்சள் பொடி உறிஞ்சப்படும்.
முறுக்கு, தட்டை, தேன்குழல் நமத்து போகாமல் இருக்க வேண்டுமானால், மாவு பிசையும்போது வெந்நீர் ஊற்றி பிசைய வேண்டும்.
காய்ந்த மிளகாயை நீளவாக்கில் வெட்டி, அதனுடைய விதைகள் சிவக்கும் அளவுக்கு எண்ணெய்யில் வறுத்த பின்னர் துவையலோ, பொடியோ செய்தால் மணமும் ருசியும் தூக்கலாக இருக்கும்.
- எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.
- பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
• தயிர் பச்சடியில் பாலாடையை போட்டால் எளிதில் புளித்து விடாமல் இருக்கும்.
• டீயில் சிறிதளவு சுக்குத்தூள், மிளகுத்தூள், ஏலக்காய் தூள் கலந்தால் அதிக ருசி கிடைக்கும். அஜீரணக் கோளாறும் சீராகும்.
• முட்டையை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
• வெந்தயக் கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரையை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.
• சமையலுக்கு பட்டாணி பயன்படுத்தும்போது அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.
• நறுக்கிய வெங்காயத்துடன் சிறிது வெண்ணெய் சேர்த்து வைத்தால் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும்.
• எண்ணெயில் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.
• பூரிக்கு மாவு பிசையும்போது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
• கோதுமை மாவு தோசைக்கு காலையிலேயே மாவை கரைத்து வைத்தால் மாலையில் சுடும் போது ஒட்டாமல் வரும்.
• சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, பெருங்காயம், வெந்தயம், சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையோடு மட்டுமின்றி நீண்ட நேரம் கெடாமலும் இருக்கும்.
• சுண்டல், வெள்ளை சுண்டல், ராஜ்மா, காராமணி போன்ற பருப்பு வகைகளை கிரேவியாக சமைக்கும் பொழுது, வெந்த பருப்பில் இருந்து சிறிதளவு எடுத்து அரைத்து கரைத்து விட்டால் கிரேவி கெட்டியாக இருப்பதுடன் ருசியும் கூடும்.
• காய்ந்த ரொட்டியை துண்டுகளாக நறுக்கி நன்றாக காய வைத்து எடுத்து வைத்தால் அவற்றை புலாவ், பிரியாணி ஆகியவற்றில் வறுத்துப் போட சுவையாக இருக்கும்.
• கத்திரிக்காய் காம்புகளை கழுவிக்கொண்டு ரசம் அல்லது சாம்பார் கொதிக்கும்போது போட்டால் சுவையாக இருக்கும்.
• முருங்கைக்கீரை உருவிய காம்புகளை சுத்தம் செய்து ரசத்தில் போட்டு குடித்தால் மூட்டுகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.
• கத்திரிக்காயை நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் கறுத்துப் போகாமல் இருக்கும்.
• வாழைப்பூ, வாழைக்காய் போன்ற காய்கறிகளை நறுக்கும் பொழுது ஏற்படும் கறையைப் போக்க, கைகளை வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் தேய்த்து விட்டு சோப்பு போட்டு கழுவினால் கை பளிச்சென்று ஆகிவிடும்.
• கசக்கும் காய்களை அரிசி கழுவிய நீரில் சில நிமிடம் போட்டு சமைத்தால் கசப்பு குறையும்.
• சில முள்ளங்கிகள் அதிக வாடை வீசும். அவற்றை அரை மணி நேரம் முன்பாக தண்ணீரில் ஊறவைத்து பிறகு சமைத்தால் வாசனை வராது.
• குளிர் காலத்தில் லேசான சுடு பாலில் உறை ஊற்றி வைத்தால் சீக்கிரம் கெட்டித்தயிர் கிடைக்கும்.
• பன்னீரை, வினிகர் தெளித்த பாலீத்தின் பையில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
• சேமியா உப்புமா செய்யும் போது பாதி அளவு நீரும், பாதி தேங்காய் பாலும் கலந்து செய்தால் உப்புமா ருசிக்கும்.
• வெண்ணெய் காய்ச்சிய வாணலியில் உருளைக்கிழங்கு அல்லது அவரைக்காயை வதக்கி வறுவல் செய்தால் சுவையும், மணமும் கூடுதலாக இருக்கும்.
• பச்சடி, சூப் செய்ய சிவப்பு நிற வெங்காயத்தை பயன்படுத்துவது நல்லது. இது ருசியைக் கூட்டும்.
- முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.
- பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.
* வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு போன்றவற்றில் காரம் அதிகமாகி விட்டால், சிறிது தேங்காய் பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதோடு சுவையாகவும் இருக்கும்.
* சாம்பாருக்கு போடும் துவரம் பருப்பை லேசாக வறுத்து வேக வைத்தால் சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாது.
* கேரட்டை நீரில் போட்டு வேக வைப்பதை விட இட்லி போல் ஆவியில் வேக வைத்தால் கேரட்டில் உள்ள சத்துக்கள் அழியாமல் இருக்கும்.
* அவல் கேசரி செய்யும்போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு வாசனை வரும் வரை லேசாக வறுத்து, பின்பு மிக்சியில் லேசாக அரைத்து கேசரி செய்தால் ரவா கேசரி போல் இருக்கும்.
* அடைக்கு ஊற வைக்கும்போது அரிசி, பருப்பு வகைகளுடன், ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயமும் ஊற வைத்து அரைத்தால் அடை மிருதுவாகவும், வாசனையாகவும் இருக்கும்.
* ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்து பாருங்கள். தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென நன்றாக இருக்கும்.
* சர்க்கரை பொங்கல் செய்யும் போது பாலுக்கு பதில் பால் பவுடர் சேர்த்து செய்தால் பொங்கலின் சுவை கூடும்.
* எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்து பருப்பு ரசம் செய்யலாம். சுவையாக இருக்கும்.
* காய்கறிகள், கீரை போன்றவற்றை வேக வைத்த நீரைக் கீழே கொட்டாமல் ரசத்தில் சேர்த்தால் சத்து மிகுந்த ரசம் தயார்.
* சூப் செய்ய நல்ல கிரேவி பதம் வருவதற்கு சோள மாவு கிடைக்காத பட்சத்தில் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து சேர்த்தால் அடர்த்தியாக இருக்கும். சத்தும் அதிகம்.
* பீட்ரூட்டைத்துருவி ஆவியில் வேக வைத்து, கெட்டியான தயிரில் போடவும். மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து பீட்ரூட் கலவையில் கலந்தால் சுவை மிகுந்த பீட்ரூட் பச்சடி தயார்.
* நீர் மோரில் சிறிது ரசப்பொடி சேர்த்து பருகினால் சுவையாக இருக்கும்.
* நீள மிளகாயை கிள்ளி, பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துக்கொண்டால், தாளிக்கும் போதும், மற்ற உபயோகத்துக்கும் சுலபமாக இருக்கும்.
* இஞ்சியை துருவி, வெயிலில் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டால், டீ, குருமா, பொங்கல் போன்றவற்றில் சேர்க்க மணத்துக்கு மணம், உடலுக்கும் நல்லது.
* சப்பாத்தியின் மேல் சிறிது எண்ணெய்யைத் தடவி ஒரு டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.
* ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த்துருவல் மற்றும் வாழைப்பழத்தைச் சேர்த்து அரைத்து வைத்து ஆப்பம் வார்த்தால் ஆப்பம் சுவை மிகுந்து இருக்கும்.
* மாங்காய்த்தொக்கு, இஞ்சித் தொக்கு என்று எதை செய்தாலும் அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தால் அந்த தொக்குகள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
* முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.
* பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.
* இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஊற வைத்த அரிசியையும், உளுந்தையும் முப்பது நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்திருந்து அரைத்தால் மிக்சி சூடாவதை தவிர்க்கலாம்.
- பழத்துண்டுகளின் மீதும், ஐஸ்கிரீம்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.
- எந்த வகை கேசரி செய்தாலும், மூன்று டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால், அதன் சுவையே அலாதிதான்.
சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
* குருமா, சட்னி போன்றவற்றிற்கு அவசரமாக அரைக்கும் நேரத்தில் ஜார் சூடாகி விடும். இதைத் தவிர்க்க ஐஸ் வாட்டர் சேர்த்து அரைக்கலாம்.
* ஜாம், ஊறுகாய் பாட்டில்களின் மூடியைத் திறக்க கஷ்டமாக இருந்தால், கையில் கிளவுஸ் அணிந்து கொண்டால் எளிதாக திறந்து விடலாம்.
* பழத்துண்டுகளின் மீதும், ஐஸ்கிரீம்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும்.
* தேங்காய்க்கு பதில், வெங்காயத்துடன் பீர்க்கங்காயையும் வதக்கி அரைத்து சேர்த்தால் குழம்பு கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும். இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்தும் கிடைக்கும்.
* சாம்பார், ரசம், கூட்டு போன்றவற்றைத் தயாரித்து முடித்து தாளிக்கும்போது கடுகு வெடித்துச் சிதறும். இதைத் தவிர்க்க வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சிறிது மஞ்சள் தூள் போட்டு பிறகு கடுகு தாளித்தால் வெடித்துச் சிதறாது.
* ஊறுகாய்களை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை தயார் செய்து பிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் குறைந்த அளவு உப்பு சேர்த்தாலே போதும்.

* எலுமிச்சைப் பழங்கள் அதிகமாக இருந்தால், ஒவ்வொரு பழத்தையும் தனித்தனியாக டிஷ்யூ பேப்பரால் சுற்றி, எல்லாவற்றையும் சேர்த்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
* கரைத்த பஜ்ஜிமாவை மிக்ஸியில் அடித்து பஜ்ஜி போட்டால் பஜ்ஜியின் சுவையே அலாதி தான்.
* பருப்பு சாம்பாரை சீரகம் தாளித்து இறக்கும் முன்பு, சிறிதளவு புதினாவைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து இறக்கினால் சாம்பாரின் சுவை கூடும்.
* கடலைப்பருப்பு போளி செய்யும்போது, பொடித்த சர்க்கரையைச்சேர்த்தால் போளி நிறமாகவும், சுவையாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.
* இன்ஸ்டன்ட் மாவில் குலோப் ஜாமூன் செய்யப்போறீங்களா? மாவைக் கலக்கும்போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் ஜாமூன் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
* எந்த வகை கேசரி செய்தாலும், மூன்று டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்தால், அதன் சுவையே அலாதிதான். ரவையை மாவாகத் திரித்து, அதில் வெல்லப்பாகு விட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்துப் பிசைந்து பிடித்து வேகவைத்தால் வித்தியாசமான, சுவையான கொழுக்கட்டை ரெடி.
* ரவா லட்டு செய்யும்போது அத்துடன் மிக்சியில் அவலையும் ரவைபோல் பொடித்து, நெய்யில் வறுத்துச் சேர்த்து, மூன்று டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து சுவையான ரவா லட்டு பிடிக்கலாம்.
* அரிசியையும், பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்து, சர்க்கரைப் பொங்கல் செய்தால், பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும். வாசனையாகவும் இருக்கும்.
* இனிப்பு பணியாரம் மிருதுவாக இருக்க, அரிசி மாவை ஒரு துணியில் கட்டி, இட்லிப்பாத்திரத்தில் வைத்து ஆவியில் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்து, நன்றாக அவித்த பிறகு பணியாரம் செய்தால் பஞ்சுபோல இருக்கும்.
* ஜவ்வரிசி பாயசம் செய்யும்போது இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவைப் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால், பாயசம் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.
* பாயசம் செய்யும்போது, ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துப் பின் நெய் சேர்த்து வறுத்தால் ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
* தோல் சீவிய கேரட்டுகளை குக்கரில் வேக விட்டு கூழாக மசிக்கவும். பிறகு கடாயில் நெய் விட்டு சர்க்கரை மசித்த கலவையை சேர்த்து, கிளறினால் சுவையான அல்வா தயார்.
* எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்தும் ரசம் வைக்கலாம். வாய்க்கசப்பும் நீங்கி விடும்.
- சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டு போட்டு ஆரோக்கியமான பாயாசம் செய்யலாம்!
- பால், நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கும்.
நம்ம ஊர் திருவிழாக்களிலும், விருந்துகளிலும், விசேஷ நாட்களிலும் தவறாமல் இடம் பிடிக்கும் ஓர் இனிப்பு பலகாரம் என்றால் அது பாயாசம் தான். அதிலும், பால் பாயாசத்தின் தனித்துவமான சுவையும், கிரீமிப் பதமும் யாருக்குத்தான் பிடிக்காது? சமைப்பதற்கு எளிதான அதேவேளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் இந்த பால் பாயாசத்தை, பாரம்பரிய முறையிலும் ஆரோக்கியமான மாற்றுகளுடனும் தயாரிக்கும் செய்முறையை சமையல் கலைஞர் வனிதா நமக்காக செய்து காட்டியுள்ளார். பொதுவாக, பாயாசம் என்றால் அதில் சர்க்கரையின் பங்கு அதிகம் இருக்கும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், இங்கு நாம் பார்க்கப் போகும் செய்முறையில், வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்த்து, ஆரோக்கியம் நிறைந்த பனங்கற்கண்டு சேர்த்து, கூடுதல் நன்மையுடன் சுவையான பால் பாயாசம் எப்படித் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

கிரீமி பால் பாயாசம் செய்முறை
* அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 4 கப் கொழுப்புடன் கூடிய பாலைச் சேர்க்கவும்.
* பால் ஊற்றியவுடன் லேசாக ஒருமுறை மட்டும் கிண்டி விடவும். இது அடி பிடிக்காமல் இருக்க உதவும். அதேவேளை பாலில் ஒரு துளிகூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. இதுவே பாயாசத்துக்குக் கெட்டியான, கிரீமி சுவையைக் கொடுக்கும்.
* பால் கொதித்து நுரைத்து பொங்கும் தருவாயில், சுவையைச் சமநிலைப்படுத்த ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்கவும்.
* பால் கொதித்துக் கொண்டு இருக்கும்போது, 4 ஸ்பூன் பால் பவுடருடன் கொஞ்சம் பாலைக் கலந்து, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
* பிறகு வறுத்து வைத்திருக்கும் 4 ஸ்பூன் சேமியாவைக் கொதிக்கும் பாலில் சேர்க்கவும். சேமியா சேர்த்த உடனேயே, 1 ஸ்பூன் நெய்யைச் சேர்க்கவும். இது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல், கட்டி முட்டியாகாமல் இருக்க உதவும்.
* இந்த நேரம் கரைத்து வைத்த பால் பவுடர் கலவையையும், 1 ஸ்பூன் கண்டென்ஸ்டு மில்க்கையும் (மில்க் மேட்) பாலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
* இப்போது பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட நட்ஸ் வகைகளைச் சேர்க்கவும். இந்த பாயாசத்திற்கு நட்ஸ்களை வறுக்கத் தேவையில்லை.
* கலவை கொதி வந்த பிறகு, அடுப்பைச் சிம்மில் வைத்து, குறைந்தது 10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். அப்போதுதான் சேமியா முழுமையாக வெந்து பால் பவுடர், கண்டென்ஸ் மில்க் ஆகியவை நன்கு கிரீமியாக மாறும்.
* சேமியா நன்றாக வெந்து, பால் திக்கான பிறகு, பொடித்து சலித்து வைத்த 4 ஸ்பூன் பனங்கற்கண்டு தூளைச் சேர்க்கவும். (சேமியா வேகும் முன் சர்க்கரை சேர்த்தால், சேமியா வேகாமல் போக வாய்ப்புள்ளது)
* பனங்கற்கண்டு சேர்த்த பிறகு, ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும். பின் இனிப்பு நன்கு கரைந்து, பாயாசம் இன்னும் 10 நிமிடங்கள் கொதித்து கிரீமியாக, திக்கான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
இப்போது கிரீமியான, சுவையான பால் பாயாசம் தயார்!

பரிமாற தயார் நிலையில் கிரீமி பால் பாயாசம்
பால் பாயாசத்தின் நன்மைகள்
* இந்தப் பால் பாயாசத்தில் ஆரோக்கியமான பனங்கற்கண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இது வெள்ளை சர்க்கரையை விட சிறந்த ஆரோக்கிய மாற்று. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், இது உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
* பால் மற்றும் நட்ஸ்கள் சேர்க்கப்படுவதால், புரதம், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைக்கின்றன.
* இது ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகும். விசேஷ நாட்களில் உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
* இனிப்புச் சுவை இயற்கையாகவே மனதிற்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தரக்கூடியது.
இந்த கிரமி பால் பாயாசம், சுவைக்காக மட்டும் அல்லாமல், ஆரோக்கியமான நன்மைகளையும் கொண்டுள்ளதால், இந்த இனிய உணவைத் தயாரித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மட்டும் அல்ல விருந்தினர்களையும் அசத்துங்கள்!
- கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும்.
- வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும்.
* கிழங்குகளை உப்புப்போட்டு வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் சீக்கிரம் வேகாது.
* சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சம்பழச் சாறு பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
* உருளைக்கிழங்கை சீவியதும் சிறிது பயத்தம் பருப்பு மாவைத் தூவி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* பால் பாயசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
* ரவாதோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை நன்கு சிவந்தும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
* சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.
* கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும்.
* பச்சை மிளகாயைக் காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பெருங்காயம் கட்டியாகாமல் மிருதுவாக இருக்கும்.
* வத்தல் குழம்பு தயார் செய்யும் போது அவரை, கத்திரி, கொத்தவரங்காய் வத்தல்களை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்து விடும்.
* எலுமிச்சை, தக்காளி, புளி, தேங்காய் சாத வகைகள் செய்யும் முன்பு சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும்.
* வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும். எண்ணெய்யும் அதிகம் குடிக்காது.
- பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.
- தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* வெந்தயக் குழம்பு தயார் செய்யும்போது ஒரு டீ ஸ்பூன் எள்ளுப் பொடியை தூவினால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
* மீந்து போன வாழை சிப்ஸ், உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்சியால் கரகரப்பாக பொடித்து பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும், மணமும் கிடைக்கும்.
* பாயசம் நீர்த்து போயிருந்தால் அதில் வாழைப் பழத்தைப் பிசைந்துப் போட்டு கொஞ்சம் தேனும் கலந்தால் போதும். சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.
* வித்தியாசமான முறையில் ரவா கேசரி செய்ய வேண்டுமானால், ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைத்து பிறகு சர்க்கரைப்பாகு செய்து கேசரி கிளறினால் மாறுபட்ட சுவையில் ருசிக்கலாம்.
* பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.
* தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* பாகற்காய் வறுவல் செய்யும் போது முதலில் பாகற்காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால் மொறுமொறுப்பு குறையாமலிருக்கும்.
* சூடான எண்ணெய்யில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு எதை பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.
- பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்கும்.
- முழுத் தேங்காயை பிரிட்ஜில் வைத்து தேவையானபோது உடைத்துக் கொள்ளலாம்.
* பெண்கள் நிறைய நேரங்களை சமையல் அறையில் செலவிடுவதால் அந்த அறை நல்ல காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருத்தல் அவசியம்.
* சமையலறை எந்த அளவில் இருந்தாலும் சரி, நுழைவாயிலில் கட்டாயம் ஒரு மிதியடி போட வேண்டும். மேலும் அதில் தலைமுடி, நூல் போன்ற குப்பைகளைச் சேர விடாமல் அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
* சமையல் அறையில் உள்ள மேடையில் எண்ணெய் கொட்டி இருந்தால் கடலை மாவைக் கெட்டியாகத் தண்ணீரில் கரைத்துப் பூசி சிறிது நேரம் ஊறவைத்து தேய்த்துக் கழுவ, மேடை பளிச்சென்று இருக்கும்.
* அரிவாள் மனை, தேங்காய் துருவி, காய்கறி நறுக்கப் பயன்படும் கத்தி போன்றவற்றில் உள்ள துருவைப் போக்க அவற்றின் மீது ஒரு வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் துரு இருந்த இடம் தெரியாமல் நீங்கிவிடும்.
* எண்ணெய்ப் பிசுக்கான பாத்திரங்களைக் கழுவுவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் கடுகுத்தூளைப் போட்டு கழுவினால் பாத்திரங்கள் சுத்தமாக எந்தவித வாடையும் இல்லாமல் இருக்கும்.
* கிழங்குகளை மூடி வைக்கக் கூடாது. காற்றோட்டமாக பரப்பி வைக்க வேண்டும். தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால் தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கும்.
* வாழைத் தண்டு, சுரைக்காய், நூல்கோல் முதலிய காய்கறிகள் மீது நகம் வைத்தால் உள்ளே போவது போல் இருக்க வேண்டும். அது தான் பிஞ்சு.
*பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்கும்.
*பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும்.
*முழுத் தேங்காயை பிரிட்ஜில் வைத்து தேவையானபோது உடைத்துக் கொள்ளலாம். தேங்காய் கெடாமல் இருக்கும்.






