search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu temple"

    தமிழ்நாட்டில் 2 ஆயிரம் இந்து கோவில்கள் இருந்த இடம் தெரியவில்லை என பாரதீய ஜனதா பிரசார கூட்டத்தில் எச்.ராஜா பேசினார். #hindutemple #hraja #bjp
    வேப்பந்தட்டை 

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் பாரதீய ஜனதா கட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்க பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் தனபால் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசுகையில், இந்தியாவில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு கால ஆட்சியில் செய்யாத பல சாதனைகளை பா.ஜ.க. 4 ஆண்டுகளில் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கடைசி 10 ஆண்டு கால ஆட்சியில் மட்டும் 12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. 

    பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. 5 கோடி குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக 2 ஆயிரம் இந்து கோவில்கள் இருந்த இடத்தை உரு தெரியாமல் அழித்து, ஆக்கிரமிப்பு செய்து பலர் வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். இதையெல்லாம் மீட்பதற்காகத்தான் இந்து கோவில்கள் மீட்பு இயக்கம் தற்போது முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார். 

    அப்போது எச்.ராஜா முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 30 இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். திருச்சி கோட்ட பொறுப்பாளர் டாக்டர் சிவசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட பொது செயலாளர்கள் சாமிநாதன், இளங்கோவன் ஆகியோர் பேசினர். இதில் பா.ஜ.க. பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொது செயலாளர் சிவராமன் நன்றி கூறினார். #hindutemple #hraja #bjp
    திருக்கோவில்கள் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் திருத்தலங்கள். திருக்கோவில்களை எப்படி மதிக்க வேண்டும்? அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
    நம்மில் பெரும்பாலானோர் குறைகளை கொட்டுவதற்கும், தேவைகளை கேட்பதற்குமே திருக்கோயில்களை தேடிச் செல்கிறோம். மிகச் சிலரே நம்மை காத்து ரட்சிக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லவும், அமைதி தேடவும் கோயில்களுக்கு செல்கிறோம். திருக்கோயில்களை எப்படி மதிக்க வேண்டும்? அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் ஆகிய அடிப்படைகளை பலரும் மறந்து விட்டோம்.

    நம்முடைய திருக்கோயில்கள் பெரும் சக்திகளை உள்ளடக்கியது. யோகியரும் ஞானியரும் பல அற்புத சக்திகளை திருக்கோயில்களில் உணர்ந்து உள்ளனர், நமக்கும் உணர்த்தியுள்ளனர். பழம் பெருமையும் அளவிடமுடியாத சக்தியும் கொண்ட திருக்கோயில்களில் செல்போன் கேமிராவில் செல்பி எடுத்துக் கொள்வதும், அநாகரிக ஆடைகள் அணிந்து செல்வதும், கூச்சலிட்டு ஆரவாரம் செய்வதும், பக்தியில் கவனமின்றி செல்போனில் பேசித் திரிவதும் பாவத்தையே நம்மிடம் சேர்க்கும்.

    திருக்கோயில்கள் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் திருத்தலங்கள். இறைவனின் இல்லம் அது. எனவே கோயிலுக்கு செல்லும் முன் குளித்து, சுத்தமாக செல்ல வேண்டும். கோயிலுக்கு வெறுங்கையுடன் செல்லாமல் கடவுளுக்குப் படைக்க நம்மால் முடிந்த பூ, பழம் எதையாவது  வாங்கிச் செல்வது உத்தமம். குறிப்பாக அடுத்தவர் கவனத்தை சிதறச் செய்யும் ஆடைகளை அணியாமல், நேர்த்தியான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்.

    * சிவன் கோயிலுக்கு வில்வத்தையும், பெருமாள் கோவிலுக்கு  துளசியை வாங்கி சென்று அர்ச்சனைக்கு கொடுக்கலாம்.

    * கோயிலுக்குள் உள்ளே செல்லும் போது முதலில் கோயில் கோபுரத்தை வணங்கிவிட்டு  செல்ல வேண்டும்.

    * விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, மூன்று தோப்புக்கரணம் போட வேண்டும்.

    * விநாயகரை ஒரு தரமும், சூரியனை 2 தரமும், அம்பாளையும், விஷ்ணுவையும் 4 தரமும், ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    * மூலவருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் போது கோயில் பிரகாரத்தைச் சுற்றக்கூடாது. அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.

    * இறைவனுக்கு  நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.

    * வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும்.

    * திருக்கோயிலில் இருக்கும் நேரமாவது சிவ  நாமமும் நாரயண நாமமும் தவிர நமது புத்தியில் மனதில் வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது.

    * ஆலயத்திற்குள் எந்த தனி மனிதரையும் வணங்கக் கூடாது. அப்படி வணங்கினால்,  கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும்.

    * சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.

    * கோவிலிலிருந்து, பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.

    * சண்டிகேசுவரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடுவது, கைதட்டுவது போன்றவை செய்தல் கூடாது. சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேசுவரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

    * சிவன் கோவிலில் காலபைரவரையும், பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாரையும் வழிபட, நம்மை செய்வினை தோஷங்கள் அண்டாது.

    இந்த குறிப்புகளை நெஞ்சில் நிறுத்தி பக்தி சிரத்தையுடன், திருக்கோயில்கள் தெய்வ சன்னதி என்பதை உள்ளப்பூர்வமாக உணர்ந்து வணங்கிட நம் பாவங்கள் தீரும். நோய் நொடி அகலும். வீட்டில் மகாலட்சுமி அருள் நிலைக்கும்.
    கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.
    கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.

    தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.



    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

    ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

    இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
    ×