search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "groom"

    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் மின்னலை பார்த்து மணமகன் பயந்ததால் மணமேடையிலேயே மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பொதுவாக, வடமாநிலங்களில் சில திருமணங்கள் வினோத காரணங்களுக்காக மேடையிலேயே நின்றுபோகும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா இல்லை என்பதற்காக நிறுத்தப்பட்ட கல்யாணம், ஐஸ் கிரீம் வைக்காததால் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைப்பு என திருமணம் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் நீள்கின்றன.

    இந்த வரிசையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மாப்பிள்ளை மின்னலை பார்த்து பயந்து, வினோதமாக நடந்து கொண்டார். இதனைக் கண்ட மணப்பெண்ணோ மேடையிலேயே மாப்பிள்ளை வேண்டாம் எனக்கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    இதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் சிலர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சில வினாடிகள் தோன்றி மறைந்த மின்னல் மணமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியா நினைவாக மாறிவிட்டது. 
    அரச்சலூர் அருகே மணமகன் வராததால் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கோப்பம் பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் பொன்மணிகண்டனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று அரச்சலூரில் உள்ள கோவிலில் நடப்பதாகவும், பின்னர் விருந்து வைபவங்கள்அரச்சலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடப்பதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    திருமணத்துக்காக நேற்று இரவே மணமகன் திருமண மண்டபத்துக்கு வந்து விடுவார் என மணமகன் வீட்டார் தெரிவித்து இருந்தனர். அதன்படி மணமகன் வீட்டை சேர்ந்த பலரும் திருமண மண்டபத்துக்கு வந்து விட்டனர்.

    ஆனால் மணமகன் வர வில்லை எனவே மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். திருமண மண்டபத்துக்கு வந்திருந்த மணமகன் வீட்டாரிடம் இதுபற்றி கேட்டனர். ஆனால் அவர்களிடம் சரியான பதில் கிடைக்கவில்லை.

    மணமகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். போன் ரிங் ஆனது. ஆனால் போனை மணமகன் எடுக்கவில்லை. மணமகன் திடீரென மாயமானதால் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் செய்வதறியாது விழித்தனர்.

    நேற்று இரவு நடக்க வேண்டிய திருமண நிகழ்ச்சிகள் ஏதும் நடக்க வில்லை. இதனால் திருமண கனவில் இருந்த மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.

    மணமகன் வரவில்லை என்ற தகவல் அறிந்த அவர் திருமண மண்டப அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணமகளை மீட்டனர்.

    இதற்கிடையே இன்று காலை திருமணம் நடக்க இருப்பதால் மணமகன் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் காலையிலும் மணமகன் திருமண மண்டபத்துக்கு வரவில்லை. இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றது.

    திருமண நிகழ்ச்சிக்காக நேற்று இரவு சாப்பாடு தயார் செய்யப்பட்டிருந்தது. மணமகன் மாயமானதால் விருந்து நிகழ்ச்சி நடைபெற வில்லை. இன்று காலை சாப்பாடு தயார் செய்யப்படவில்லை.

    திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணமகள் மற்றும் மணமகன் உறவினர்கள் திருமண மண்டபத்துக்கு வந்தனர். திருமணம் நின்றுபோன தகவல் அறிந்து அவர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அரச்சலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    ×