search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bride suicide attempt"

    தக்கலை அருகே இன்று திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் திடீரென்று விஷம் குடித்ததால் மாப்பிள்ளை வேறு பெண்ணை மணந்தார்.
    தக்கலை:

    தக்கலையை அடுத்த முட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கப்பலில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த வாலிபருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக இரணியலை அடுத்த திங்கள் நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பெண் பார்த்தனர்.

    இளம்பெண் நர்சிங் படித்துள்ளார். வெளி மாவட்டத்தில் வேலை பார்த்துவருகிறார். இவருக்கும், கப்பலில் வேலை பார்க்கும் வாலிபருக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

    நிச்சயதார்த்தத்தின்போது இன்று திருமணம் நடப்பதாக பேசி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து திருமண நாள் நெருங்கியதும், வாலிபர் கப்பலில் இருந்து ஊருக்கு வந்தார். திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்தார்.

    இதுபோல பெண் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. அங்கும் அழைப்பிதழ்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது.

    திருமணத்திற்கு முன் தின நாள் மாப்பிள்ளை வீட்டில் இருந்து மணப்பெண்ணுக்கான பட்டுச்சேலை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    இதுபோல நேற்று வாலிபர் வீட்டில் இருந்து மணப்பெண்ணுக்கான பட்டுச்சேலை, சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு மாப்பிள்ளையின் உறவினர்கள் பெண் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்களை வரவேற்க யாரும் இல்லை. மாறாக மணப்பெண் வி‌ஷம் குடித்து விட்டதாகவும், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் கூறப்பட்டது.

    மணப்பெண் வி‌ஷம் குடித்த தகவல் அறிந்து மாப்பிள்ளை வீட்டார் அதிர்ந்தனர். அவர் எதற்காக வி‌ஷம் குடித்தார் என்பதை விசாரித்தபோது, யாரும் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் நொந்து போன மாப்பிள்ளை வீட்டார் அடுத்து என்ன செய்வது? என்ற யோசனையில் இறங்கினர்.

    இதற்குள் நேற்றைய பொழுது முடிந்து இன்று அதிகாலை விடிந்து விட்டது. மாப்பிள்ளை வீட்டார், திருமணத்தை நிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்தனர். நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணுக்கு பதில் வேறு பெண்ணை மணமகளாக்க முடிவு செய்தனர்.

    அதன்படி, மணமகனின் உறவுப்பெண் ஒருவரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. அவரும் கப்பல் மாப்பிள்ளையை மணக்க சம்மதம் தெரிவித்தார். உடனடியாக அந்த பெண்ணுக்கு மணமகள் அலங்காரம் நடந்தது.

    இன்று காலை குறிப்பிட்ட முகூர்த்தத்தில் மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளையின் உறவுப்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரச்சலூர் அருகே மணமகன் வராததால் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கோப்பம் பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகன் பொன்மணிகண்டனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று அரச்சலூரில் உள்ள கோவிலில் நடப்பதாகவும், பின்னர் விருந்து வைபவங்கள்அரச்சலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடப்பதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    திருமணத்துக்காக நேற்று இரவே மணமகன் திருமண மண்டபத்துக்கு வந்து விடுவார் என மணமகன் வீட்டார் தெரிவித்து இருந்தனர். அதன்படி மணமகன் வீட்டை சேர்ந்த பலரும் திருமண மண்டபத்துக்கு வந்து விட்டனர்.

    ஆனால் மணமகன் வர வில்லை எனவே மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். திருமண மண்டபத்துக்கு வந்திருந்த மணமகன் வீட்டாரிடம் இதுபற்றி கேட்டனர். ஆனால் அவர்களிடம் சரியான பதில் கிடைக்கவில்லை.

    மணமகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். போன் ரிங் ஆனது. ஆனால் போனை மணமகன் எடுக்கவில்லை. மணமகன் திடீரென மாயமானதால் மணமகள் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் செய்வதறியாது விழித்தனர்.

    நேற்று இரவு நடக்க வேண்டிய திருமண நிகழ்ச்சிகள் ஏதும் நடக்க வில்லை. இதனால் திருமண கனவில் இருந்த மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.

    மணமகன் வரவில்லை என்ற தகவல் அறிந்த அவர் திருமண மண்டப அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணமகளை மீட்டனர்.

    இதற்கிடையே இன்று காலை திருமணம் நடக்க இருப்பதால் மணமகன் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் காலையிலும் மணமகன் திருமண மண்டபத்துக்கு வரவில்லை. இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றது.

    திருமண நிகழ்ச்சிக்காக நேற்று இரவு சாப்பாடு தயார் செய்யப்பட்டிருந்தது. மணமகன் மாயமானதால் விருந்து நிகழ்ச்சி நடைபெற வில்லை. இன்று காலை சாப்பாடு தயார் செய்யப்படவில்லை.

    திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மணமகள் மற்றும் மணமகன் உறவினர்கள் திருமண மண்டபத்துக்கு வந்தனர். திருமணம் நின்றுபோன தகவல் அறிந்து அவர்கள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அரச்சலூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    ×