search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goundampalayam"

    கவுண்டம்பாளையம் அருகே அதிகாரி போல் நடித்து நகை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 79). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர். நேற்று இவரது வீட்டிற்கு ஒருவர் வந்தார். தான் கோவை மாநகராட்சி அதிகாரி என்றும் உங்கள் வீட்டு தண்ணீர் பில் மற்றும் வரி வசூலுக்காக கட்டிடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.

    அப்போது வெங்கடேசன் மற்றும் அவரது மனைவியும் இருந்தனர். தண்ணீர் பில் புத்தகம் மற்றும் வரி புத்தகத்தை பீரோவில் இருந்து எடுத்து கொடுத்தனர். அதனை வாங்கிப்பார்த்த நபர் மாடியை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

    மாடியில் எங்களால் ஏற முடியாது. நீங்கள் சென்று பார்வையிடுங்கள் என்று வெங்கடேசன் கூறினார். அவர் மாடியில் ஏறி அங்குமிங்கும் நடந்து அளவீடு செய்தார். இறங்கி வந்த பின்னர் முதியவர்களிடம் இருந்து வாங்கிய ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறிச்சென்றுவிட்டார்.

    சிறிது நேரத்தில் பீரோவை பார்த்தபோது அவசரத்தில் பீரோவை பூட்ட மறந்து விட்டது தெரியவந்தது. அதனை சோதனை செய்தபோது 2 பவுன் நகை திருட்டுபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மாநகராட்சி அதிகாரிகள் போல் வந்த நபர் கொள்ளையன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி அதிகாரிபோல் நடித்து கொள்ளையடித்த நபரை தேடி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம் அருகே மொபட்டில் வைத்திருந்த நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் மருதம் நகரை சேர்ந்தவர் செபின் வி. ஜோஸ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி லீலா வர்கீஸ் (30). இவர் சரவணம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை கல்லூரிக்கு சென்று விட்டு மொபட்டில் வீட்டிற்கு வந்தார். லீலா வர்கீஸ் தனது இரண்டரை பவுன் நகையை கழற்றி தனது கைப்பையில் வைத்து இருந்தார். பையை மொபட்டில் வைத்து விட்டு வீட்டின் வெளிப்புற கதவை திறந்தார். திரும்பி வந்து பார்த்த போது கைப்பையை காணவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர் கைப்பையை திருடி சென்று விட்டான்.

    இது குறித்து லீலா வர்கீஸ் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம்பாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 41). ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரது மனைவி பிந்துராணி. தனியார் கம்பெனி ஊழியர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சிவக்குமார் கடந்த சில நாட்களாக வேலையின்றி இருந்தார். இந்த நிலையில் மகள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர தயாரானார். நேற்று மனைவி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகனும், மகளும் நல்லாம்பாளையத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றனர்.

    தனியே இருந்த சிவக்குமார் வீட்டில் இருந்த மண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வேதனை தாங்கமுடியாமல் சிவக்குமார் அலறி சத்தம்போட்டார்.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிவக்குமார் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மகளை கல்லூரியில் சேர்க்க பணம் இல்லாத இருந்த நேரத்தில் சிவக்குமார் தற்கொலை செய்து கொண்டார். மகளை படிக்க வைக்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறினர்.

    ×