search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganapathi"

    • இவரே சகோதரத்துவத்தின் மகிமையை எடுத்துரைக்கும் சகோதர விநாயகராகவும் அருள்பாலிக்கிறார்.
    • தன் தம்பி முருகன் வள்ளி திருமணத்திற்கு மிகவும் உதவினார்.

    சிறு வயதாக இருக்கும் போது தனது சகோதரன், சகோதரி மீது இருக்கும் பாசம், பெரியவர்களான பிறகு மாறிவிடுகிறது.

    நாரதர் கொடுத்த பழத்திற்காக, உலகைச் சுற்றி வரக் கூறிய போது, பெற்றோரை சுற்றி வந்து அவர்கள் தான் உலகம் என்பதை உணர்த்தியவர் விநாயகர்.

    இவரே சகோதரத்துவத்தின் மகிமையை எடுத்துரைக்கும் சகோதர விநாயகராகவும் அருள்பாலிக்கிறார்.

    தன் தம்பி முருகன் வள்ளி திருமணத்திற்கு மிகவும் உதவினார்.

    இந்த ஐதீகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிந்திருக்கும் சகோதரர்கள் விநாயகரை வணங்கினால் ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.

    • இவருக்கு முற்காலத்தில் தேசி விநாயகர் என்றே பெயரே வழங்கி வந்திருக்கிறது.
    • தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர்.

    வேறு எந்த தலத்திற்கும் இல்லாத பல சிறப்புகளைக் கொண்டவராக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார்.

    மற்ற விநாயகரின் உருவத்தில் இருந்து பிள்ளையார்பட்டி விநாயகர் முற்றிலும் மாறுபட்டவர்.

    குடை வரைக் கோவிலாக உள்ள இக்கோவிலில் புடைப்பு சிற்பமாக விநாயகர் வடிவம் அமைந்துள்ளது.

    இரு கைகளுடன், பாச அங்குசம் போன்ற படைக்கலன்களின்றி காணப்படுகிறார்.

    கால்களை மடக்கிய நிலையில் அமர்ந்த கோலத்தில், கையில் சிவலிங்கத்தை தாங்கிக் கொண்டு வீற்றிருக்கிறார்.

    உலக நன்மைக்காக சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

    கிரீடம் இல்லாமல் சடை முடி தாங்கி எளிமையானவராக உள்ளார்.

    இவருக்கு முற்காலத்தில் தேசி விநாயகர் என்றே பெயரே வழங்கி வந்திருக்கிறது.

    தினமும் இவருக்கு 108 மோதகங்கள் படைக்கின்றனர்.

    விநாயகர் சதுர்த்தியன்று முக்குருணி அளவில் (சுமார் 24 கிலோ அரிசியால் செய்த கொழுக்கட்டை) ஒரே மோதகத்தைப் படைக்கின்றனர்.

    • நாயுருவி கொண்டு கணபதி ஹோமம் செய்ய, கிரகங்களின் தீய தாக்கங்கள் விலகும்.
    • செந்தாமரையால் ஹோமம் செய்ய, பெரும் பொருள் சேரும்.

    வெள்ளிக்கிழமை அருகம்புல், தேங்காய் ஆகியவற்றைக் கொண்டு கணபதி ஹோமம் செய்தால் பெருஞ்செல்வமும் நீண்ட ஆயுளும் வாய்க்கும்.

    நாயுருவி கொண்டு கணபதி ஹோமம் செய்ய, கிரகங்களின் தீய தாக்கங்கள் விலகும்.

    செந்தாமரையால் ஹோமம் செய்ய, பெரும் பொருள் சேரும்.

    வெண்ணிற நீர்நெர்ச்சி கொண்டு ஹோமம் செய்ய, உயர்வை பெறலாம்.

    கெட்டி பதம் தயிரால் ஹோமம் செய்ய, வளம் பெருகும்.

    நீலோற்பவ மலரால் ஹோமம் செய்ய, அனைத்து மக்களும் வசியமாவர்.

    வெல்லம், வாழைப்பழம், பாயசம், நெய் கலந்த தேங்காய் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் எண்ணியவை திண்ணமாக நிறைவேறும்.

    விநாயகரை செவ்வாய்க்கிழமைகளிலும் சண்டியை வெள்ளியிலும் வழிபட்டால் ராகு, கேது ஆகிய கிரகத்தின் தாக்கங்களில் இருந்து விடுபடலாம்.

    • அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்கு சென்று அலங்காரம் செய்விப்பதுடன்
    • வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவிக்க வேண்டும்.

    அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்கு சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

    கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம்.

    அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம்.

    கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம். 

    • நிலம் (பூமி) & விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்.
    • நீர் & சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.

    பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான்.

    அவர் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு பெரும் சக்தியை உணர்த்துகிறது.

    நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியன ஐம்பெரும் சக்திகள்.

    இந்த பஞ்சபூதங்களை நம்முன்னோர்கள் வணங்குவதற்குக் காரணம் அவை மனிதர்களால் அடக்கமுடியாத மாபெரும் சக்திகள் ஆகும்.

    அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:

    நிலம் (பூமி) & விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்.

    நீர் & சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.

    நெருப்பு & அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கும்

    காற்று & இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்.

    ஆகாயம் & இருபுருவங்களின் அரைவட்டம் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தைக் குறிக்கும்.

    • சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
    • நடராஜர் கோவில் இருந்தபோது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர்.

    சிதம்பரம் நகரின் தெற்குத் தெருவில் மிகச்சிறிய கோவிலில் நடராஜர் சன்னிதியை நோக்கியவாறு சக்தி பால விநாயகர் உள்ளார்.

    சிதம்பர ரகசிய ஓலைச்சுவடியில் 64ம் பக்கத்தில் இந்த விநாயகரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    நடராஜர் கோவில் இருந்தபோது இவ்விநாயகர் கோவில் இருந்தது என்பதால் இவரே ஆதி விநாயகர் என்பர்.

    குழந்தை முகமும், கோரமான பற்களும், இடது கையில் அதிர்த கலசமும், வலது கையில் மோதிரமும் அணிந்துள்ளார்.

    மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு அருளும் விநாயகர் இவர்.

    • விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர்.
    • தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார்

    விநாயகர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர்.

    தன் அன்னையைப் போல் சிறந்த பெண் வேண்டும் என்று ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும் வீற்றிருக்கிறார் என்பார்கள்.

    தம்மை வழிபடும் அடியவர்களுக்கு காரிய சித்தியும், அதற்குரிய புத்தியையும் அளிப்பவர் விநாயகர்.

    அந்த பண்புகளையே தன் இரு மனைவியராக கொண்டு சித்தி புத்தி விநாயகராக வீற்றிருக்கின்றார்.

    • சதுர்த்தசி : விஜய கணபதி
    • பவுர்ணமி : நிருத்ய கணபதி

    அமாவாசை : நிருத கணபதி

    பிரதமை : பால கணபதி

    த்விதியை : தருண கணபதி

    திருதியை : பக்தி கணபதி

    சதுர்த்தி: வீர கணபதி

    பஞ்சமி: சக்தி கணபதி

    சஷ்டி : த்விஜ கணபதி

    சப்தமி : சித்தி கணபதி

    அஷ்டமி : உச்சிஷ்ட கணபதி

    நவமி : விக்ன கணபதி

    தசமி : க்ஷிப்ர கணபதி

    ஏகாதசி : ஹேரம்ப கணபதி

    துவாதசி : லசுட்மி கணபதி

    திரையோதசி : மகா கணபதி

    சதுர்த்தசி : விஜய கணபதி

    பவுர்ணமி : நிருத்ய கணபதி

    • ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டை கையாளுகிறோம்.
    • ஆனால் அவை அனைத்துக்கும் பொதுவாகவும் முதன்மையானதாகவும் இருப்பது விநாயகர் வழிபாடுதான்.

    இந்து சமயத்தில் எத்தனையோ கடவுள்கள் வழிபடப் படுகின்றன.

    ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டை கையாளுகிறோம்.

    ஆனால் அவை அனைத்துக்கும் பொதுவாகவும் முதன்மையானதாகவும் இருப்பது விநாயகர் வழிபாடுதான்.

    அதனால்தான் விநாயகரை நாம் முழு முதற்கடவுள் என்று அழைக்கிறோம்.

    வேறு எந்த தெய்வத்துக்கும் இந்த சிறப்பு இல்லை.

    எனவே எப்போது இறைவழிபாட்டை தொடங்கினாலும் விநாயகருக்கு முதல் மரியாதையை நாம் அளிக்க வேண்டும்.

    "கணபதி பூஜை கைமேல் பலன்" என்று சொல்வார்கள்.

    நாம் எந்த செயலை தொடங்கினாலும் முதலில் விநாயகரை நினைத்துக் கொண்டு அந்த செயலை தொடங்கினால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும் என்பது இதன் அர்த்தமாகும்.

    கணபதி என்றிட கலங்கும் வல்வினை என்று சொல்வது இதனால்தான்.

    கணபதி என்றால் பக்தர்களின் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானம் கொடுத்து பரிபூரண முக்தி நிலையை தரும் தலைவன் என்று அர்த்தமாகும்.

    • ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர்.
    • இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை.

    "ஓம் வக்ரதுண்டாய ஹீம்"

    என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகைவரை எளிதாக வென்று விடலாம்.

    முருகன் தாராசுரனை வென்றதும், வாமனன் மகாபலியை வென்றதும், பரசுராமர் அசுரர்களை வீழ்த்தியதும், மது கைடபர்களை திருமால் அழித்ததும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் தான்.

    ராஜராஜ சோழன் வணங்கிய கணபதி

    ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர்.

    இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை.

    தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்னச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர்களை தான் அவர் வணங்கி வந்தார்.

    பரிவார ஆலயத்துப்பிள்ளையார் என்று பெயர் வழக்கத்தில் உள்ளது.

    • விநாயகப் பெருமான் தனது உடன் பிறப்பான முருகப்பெருமானுக்கு தன் உடலில் பாதியைக் கொடுத்துள்ளார்.
    • இவரை வணங்கினால் சகோதர ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

    சென்னை தங்கசாலைத் தெருவில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில்

    விநாயகப் பெருமான் தனது உடன் பிறப்பான முருகப்பெருமானுக்கு தன் உடலில் பாதியைக் கொடுத்துள்ளார்.

    அவருக்கு பின்புறம் முருகனது தோற்றம் உள்ளது.

    எழு நாகர்தலை உருவின் மேல் ஐந்து முருகங்களுடன் அமர்ந்த கோலத்தில் இவர் காணப்பட,

    பின்புறம் நின்ற கோலத்தில் தம்பி முருகன் இருக்கிறார்.

    இவரை வணங்கினால் சகோதர ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

    • வலது புறம் அன்னை பார்வதி தேவியையும் இடதுபுறம் கங்கா தேவியையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.
    • பவிஷ்ய புராணத்தில் தூர்வான்டமி விரத பூஜையின் மகிமை குறிப்பிடப்பட்டுள்ளது.

    நெல்லையிலிருந்து ஐம்பது கி.மீ தொலைவில் உள்ளது காரையார் பாணதீர்த்தம் என்ற அருவி.

    அதன்கிழக்குக் கரையில் உள்ள சித்திவிநாயகர் வலது புறம் அன்னை பார்வதி தேவியையும்

    இடதுபுறம் கங்கா தேவியையும் வைத்துக்கொண்டு காட்சி தருகிறார்.

    பிரம்மஹத்தி தோஷம், இவரை வணங்குவதால் போய்விடும் என்று நம்புகிறார்கள்.

    தூர்வாஷ்டமியில் அருளும் கணபதி

    தூர்வா என்பதற்கு அருகம்புல் என்று பெயர்.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமிக்கு தூர்வாஷ்டமி என பெயர் நிலைத்தது விநாயகப்பெருமானது அருள் அன்று கிடைப்பதால் தான்.

    இந்த சுபநாளில் விரதம் இருந்து விநாயகரை அருகம் புல்லால் அர்ச்சித்து வணங்குபவர்களுக்கு நல்ல அறிவுள்ள குழந்தைகள் பிறப்பார்கள்.

    பவிஷ்ய புராணத்தில் தூர்வான்டமி விரத பூஜையின் மகிமை குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×