search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flag raising"

    • திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகுவிற்குரியஸ்தலமாக போற்றப்படுகிறது.
    • தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகுவிற்குரியஸ்தலமாக போற்றப்படுகிறது.

    இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்கியாக, 7ம் நாளான இன்றிரவு, உற்சவர் நாகநாதசுவாமி, கிரிகுஜாம்பிகை, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    முன்னதாக, சீர்வரிசைகள் சமர்பித்தலும், மாலை மாற்றும் வைபவமும் பின்னர் ஊஞ்சலில் நலுங்கு உற்சவமும் நடைபெற்றதை தொடர்ந்து, சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் ஜபிக்க, யாகம் வளர்த்து, நாதஸ்வர மேள தாளம் முழங்க, உதிரி மலர்கள் தூவி, மங்கல ஞான் பூட்டும் வைபவமும் நடைபெற்றது.

    இதில் பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான 10ம் தேதி சனிக்கிழமை திரு தேரோட்டமும் தொடர்ந்து 10ம் நாளான 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மல்லாரி இசை திருவிழா அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் திருக்கோவிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் ஒருசேர எழுந்தருள கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது பிறகு 11ம் நாளான 13ம் தேதி திங்கட்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் இவ்வாண்டிற்காண கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா நிறைவு பெறுகிறது.

    • பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்,:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது.

    இந்த பேராலயம் வங்க கடலோரம் அமைந்திருப்பதால் மேலும் சிறப்பு பெற்றுள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு பெருவிழா பல்வேறு சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த விழாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டு பெருவிழாவை முன்னிட்ட பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. இதற்காக பேராலயத்தில் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது.

    • கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலும் இருந்து வருகிறது.
    • பக்தர்கள் அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலும் இருந்து வருகிறது.கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    அதேபோல் ஆடிக்கு ண்டம் திருவிழா இக்கோவிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 19-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் ஆடிக்குண்டம் திருவிழா ெதாடங்கியது. இதையடுத்து இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.தொடர்ந்து நாளை பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல்,அதை தொடர்ந்து ஆடி 10-ம் நாள் செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து ஆடி 11-ம் நாள் மாவிளக்கு, பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, ஆடி 12-ம் நாள் ஆடி அமாவாசை பரிவேட்டை, ஆடி 13-ம் நாள் மகா அபுஷேகம் மஞ்சள் நீராடல், ஆடி 16-ம் நாள் 108 குத்துவிளக்கு பூஜை,ஆடி 17-ம் நாள் மறுபூஜை உடன் ஆடிக்குண்டம் திருவிழா நிறைவடையும்.ஆடிக்குண்டம் திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தாசம்பத்,உதவி ஆணையர் செயல் அலுவலர் கைலசாமூர்த்தி செய்து வருகின்றனர்.

    மேலும் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில், மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் (பொறுப்பு),போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×