search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flag raising"

    • பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பேராலய கீழ்கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது.

    இந்த பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நேற்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டு ஆலயத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அன்னையின் பிறப்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையில் எழிலார்ந்த சூழ்நிலையில் அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம்.

    பூண்டி மாதா பேராலயத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அன்னையின் திருவுருவம் வரையப்பட்ட திருக்கொடியை பக்தர்கள் எடுத்துச் செல்ல, அலங்கரிக்கப்பட்ட அன்னை யின் சிறிய சுரூபத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர். ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் நடைபெற்றது.

    கொடி ஊர்வலம் கொடி மரத்தை வந்தடைந்ததும் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமி அடிகளார் திருக்கொ டியை புனிதம் செய்து அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்க மாக கொடியேற்றி வைத்தார்.

    கொடி ஏற்றப்பட்ட போது பக்தர்கள் மரியே வாழ்க என குரல் எழுப்பினர்.

    அதிர்வேட்டுகள் முழங்கின அதன் பின்னர் அன்னையின் பிறப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி பிஷப் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்றது. திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் அமல வில்லியம் , அன்புராஜ், ஆன்மீக தந்தையர் அருளா னந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு பங்குத்த ந்தையர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து அன்னையின் பிறப்பு பெருவிழாவை ஒட்டி தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி பல்வேறு அருட்தந்தையர்களால் நிறைவேற்றப்படும்.

    இன்று மாலை மரியா -இறை நம்பிக்கையின் நங்கூரம் என்ற தலைப்பில் அரிமளம் பங்கு தந்தை தஞ்சை டோமி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    நாளை மாலை மரியா -சீடத்துவத்தின் அடையாளம் என்ற தலைப்பில் திருச்சி புனித வளனார் கல்லூரி அதிபர் பவுல்ராஜ் திருப்பலி நிறைவேற்றுகிறார்.அன்னையின் பிறப்பு நாளாக கருதப்படும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெறும்.

    அதனை தொடர்ந்து அன்று இரவு 8.30மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டு, தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி அடிகளார் தொடங்கி வைப்பார் . மறுநாள் செப்டம்பர் 9ம்தேதிசனிக்கிழமை காலை 6.மணிக்கு திருவிழா திருப்பலி கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் நிறைவேற்றுவது டன் அன்னையின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறும்.அன்னையின் பிறப்பு பெருவிழாவை ஒட்டி பூண்டி மாதா பேராலயத்தில் நாடெங்கிலும் இருந்து ஏராளமான மக்கள் குவிந்திரு ந்தனர். அன்னையின் பிறப்பு பெருவிழா முன்னிட்டு கோவில்,கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டு இருந்தது. கொடியேற்று நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டு ப்பள்ளி போலீசார் செய்திருந்தனர். பூண்டி மாதா பேராலய அன்னையின் பிறப்பு பெருவிழா ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • கோவிலில் இன்று ஆடிப்பூர பெருவிழா கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
    • பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை அய்யாறப்பர் கோவில் அமைந்துள்ளது.

    திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் இன்று ஆடிப்பூர பெருவிழா கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    இதனை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு நந்தி பகவான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, அலங்கார தீபங்கள், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

    பின்னர் கொடி மங்கள வாத்யங்கள் இசையுடன் மூலவர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    விநாயகர், சண்டிகேஸ்வரர், அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் தனித்தனி சப்பரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்கள்.

    இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள்பொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது,

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்யங்கள்.

    சிவகணங்கள் இசைக்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டன.

    திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருப்பூர் விஸ்–வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்தி–ருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில்களில் வருடந்தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    திருப்பூர்:

    திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்–திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பூர் அரிசி கடை வீதியில் பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளது. கோவில்களில் வருடந்தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா வருகிற ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வருகிற 2-ந் தேதி விஸ்வேஸ்வர சாமி தேரும், 3-ந் தேதி வீரராகவப் பெருமாள் தேரும் இழுக்கப்படுகிறது. தேர்த்திருவிழாவிற்கான கொடியேற்று விழா நேற்று கோவிலில் நடைபெற்றது. முதலாவதாக விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த கொடியேற்று விழாவில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் நமச்சிவாய கோஷத்துடன் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வீரராகவப் பெருமாள் கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.

    • நாளை சந்திரபிரபை, 27-ந்தேதி பூத வாகனம் நடைபெற உள்ளது.
    • வருகிற 5-ந் தேதி ஏழூர் கண்ணாடி பல்லக்கில் உள்ள இறைவனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் கரந்தை சன்னதி தெருவில் புகழ்பெற்ற கருணாசாமி கோவில் அமைந்துள்ளது.

    வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் வசிஷ்டே ஸ்வரர் கோவில் எனவும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

    இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர் என்றும், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி என்றும், திருபுரசுந்தரி என்றும் அழைப்பது உண்டு.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு விழா தொடங்கியது.

    இவ்விழா வருகின்ற ஜூன் 5-ம்தேதி வரை நடக்கிறது.

    விழாவில் இன்று சூரிய பிரபை நடைபெற்றது.

    நாளை சந்திரபிரபை, 27-ம்தேதி பூத வாகனம், 28-ம்தேதி ரிஷப வாகனம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 29-ம்தேதி யானை வாகனம், 30-ம்தேதி கைலாச வாகனம், 31-ம்தேதி குதிரை வாகனம், ஜுன் 1-ம்தேதி திருத்தேர், 2-ம்தேதி காலை வைகாசி தீர்த்தவாரி, மாலை பந்தற்காட்சி, 3-ம்தேதி காலை பிக்ஷாண்டவர், 4-ம்தேதி காலை 5 மணிக்கு சப்தஸ்தான விழா ஏமூர் கண்ணாடி பல்லக்கு புறப்படுதல், 5-ம் தேதி இரவு 7 மணிக்கு ஏழூர் கண்ணாடி பல்லக்கில் உள்ள இறைவனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன், கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றார்கள்.

    • சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவின் 8-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான 8-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது.

    முன்னதாக அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தக டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

    இதில் கோவில் கண்காணிப்பாளர் மணி மேற்பார்வையில், விருதகிரி காசாளர் கலியராஜ், தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா, ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி தலைவர் ஜெயமாலதி சிவராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரானது 4 மாட வீதிகளையும் வலம் வந்து பின்னர் நிலையை அடைந்தது.

    • சுவாமி திருவீதியுலா, 30-ந்தேதி கற்பக திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடைபெறுகிறது.
    • ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேர், ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேர் ஆகியன பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

    அவினாசி:

    கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடப்பெற்ற ஸ்தலமும், தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்டதுமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நாளை 25-ந் தேதி, அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று இரவு திருமுருகன்பூண்டியிலிருந்து திருமுருகநாத சுவாமி வருகை, 26-ந் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகள், 27ந் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம், அன்னம் ஆகிய வாகன காட்சி, 28ந் தேதி கைலாச வாகனம், புஷ்ப பல்லாக்கு ஆகியன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    வருகிற 29-ந் தேதி 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகள் காட்சியளித்தல், சுவாமி திருவீதியுலா, 30-ந்தேதி கற்பக திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ரதோற்சவம் மே 1-ந் தேதி நடக்கிறது.

    அன்றைய தினம் அதிகாலையில் பூர நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 2 மற்றும் 3-ந் தேதி காலை 10 மணிக்கு அவிநாசியப்பர் தேரும் (பெரிய தேர்), 4-ந் தேதி காலை 10 மணிக்கு கருணாம்பிகை அம்மன் (சிறிய தேர்), ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேர், ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் தேர் ஆகியன பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

    வருகிற 4-ந்தேதி இரவு வண்டித்தாரை, 5-ந்தேதி பரிவேட்டை, 6ந் தேதி இரவு தெப்போற்சவம், 7-ந்தேதி நடராஜப் பெருமான் தரிசனம், அன்று மாலை கொடி இறக்கம் ஆகியன நடைபெறுகிறது. 8-ந் தேதி காலை மஞ்சள் நீர் உற்சவம், இரவு மயில்வாகன காட்சியுடன் சித்திரை தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.

    அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேரோட்டம் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த 3 நாட்களிலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து அவிநாசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் கூறியதாவது:-

    தேரோட்டம் நடக்கும் மே 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி கோவையிலிருந்து அவிநாசி வழியாக ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், நாதம்பாளையம் பிரிவு - கணினி ரவுண்டானாவில் இருந்து பைபாஸ் வழியாக சென்று அவிநாசி திருப்பூர் ரோட்டின் வழியாக அவிநாசி புதிய பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும்.

    ஈரோடு, சேலத்தில் இருந்து அவிநாசி வழியாக கோவை, கொச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் பழங்கரை ரவுண்டானாவில் இருந்து பைபாஸ் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம், புளியம்பட்டி,கோபி, நம்பியூரில் இருந்து அவிநாசி மற்றும் திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் மடத்துப்பாளையம் ரோட்டில் நுழைந்து, ராயம்பாளையம், அரசு கலை கல்லூரி அருகே வெளியேறி அவிநாசி புதிய பஸ் நிலையம் சென்று செல்ல வேண்டும்.இந்த போக்குவரத்து மாற்றம் தேரோட்டம் நடக்கும், நான்கு ரத வீதிகளில் வலம் வரும் நேரத்தில் மட்டும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் வடுவூரில் கோதண்டராமர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக சன்னதியில் இருந்து கோதண்டராமர் வில்லேந்திய கோலத்தில் வலம் வந்து கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

    பின்னர் தீட்சிதர்கள் கொடிக்கு பூஜை செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கருடன் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலையில் சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக கோதண்டராமர் திருக்கல்யாண சேவையில் வீதி உலா நடந்தது. விழா நாட்களில் தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறும்.

    இன்று (வெள்ளிக்கிழமை) இரவு சூரிய பிரபை வாகனத்திலும், நாளை(சனிக்கிழமை) வெள்ளி சேஷ வாகனத்திலும் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ந் தேதி கருடசேவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    • பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
    • தேரின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

    திருவாரூர்:

    சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும் சர்வதோச பரிகார தலமாகவும் விளங்குவது புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில். இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் நாளை மறுநாள் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

    அதனை முன்னிட்டு தேரின் கட்டுமான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும். சாதாரணமாக இந்த தேர் 36 அடி உயரமும் 36 அடி அகலமும் கொண்டது.

    நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் சேர்த்து இதன் எடை சுமார் 220 டன்னாக இருக்கிறது.

    இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி நடைபெற்றுள்ளது.

    அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம். அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்பட்டுள்ளது.

    அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை சுமார் 300 டன் ஆகும். முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த தேரின் கட்டுமான பணிகள் என்பது தற்போது நிறைவுப்பணி நடைபெற்று வருகிறது.

    பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர், அம்பாள் தேர், முருகர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் ஐந்து தேருக்கான கட்டுமான பணிகள் நிறைவு பெற்றது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு பகலாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தேரோட்டத்தின் போது தேரை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 600 முட்டுக்கட்டைகள் தயாரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையில் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கட்டுமான பணிகள் வரும் இன்று மாலைக்குள் முழுமை அடையும்.

    அதனைத் தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தியாகராஜ சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

    உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித் தேரோட்டத்தை பார்ப்பதற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிவர்.

    எனவே அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த தேரோட்டப் பணிகளில் பாதுகாப்பு பணிக்ககாக 1500 போலீசார் உள்ளிட்ட 2500 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • அகரம்சீகூர் அருகே அபராதரட்சகர் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் யாக பூஜையும், கணபதி பூஜையும், கடம் புறப்பாடும், அபிஷேகமும் நடைபெற்றது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து சு.ஆடுதுறை கிராமத்தில் அபராதரட்சகர் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அறங்காவலர் துறை பெரம்பலூர் மாவட்ட தலைவர் கலியபெருமாள் துவக்கி வைத்தார். இதையொட்டி விக்னேஷ்வரர் பூஜையும், கலச பூஜையும், யாகமும், கொடி படத்திற்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் யாக பூஜையும், கணபதி பூஜையும், கடம் புறப்பாடும், அபிஷேகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கருணாகரன், கோவில் அர்ச்சகர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • வருகிற மார்ச் 5-ந் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி பிரகன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் பிரகாரத்தை சுற்றி வந்து, கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    இதையடுத்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, கொடி மரத்திற்கும், சாமி, அம்பாளுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மார்ச் 5-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. 6-ந் தேதி மாசி மகத்தையொட்டி மதியம் 12 மணியளவில் தீர்த்தவாரியும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.


    • அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம்.
    • இந்த ஆண்டு மாசிமக விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம்.

    இது போல் பல்வேறு சிறப்புகளை உடைய இந்த திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகர சுவாமி மகர தோர வாயிலில் கொடிமரத்து முன்பு எழுதருளி கொடியேற்றம் நடைபெற்றது.

    இதில் யாழ்பாணம் பரணி ஆதினம்செவ்வந்தி நாதா பண்டார சன்னதி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன், சலஸ்தார்கள் கையிலை மணி, வேதரத்தினம், கேடிலிஅப்பன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கோவிலில் மார்ச் 3 ந்தேதிதேர்திருவிழா, மார்ச் 8ந் தேதி தெப்பதிருவிழா, பிப்-22 திருக்கதவு திறக்க அடைக்க பாடும் நிகழ்ச்சி என முக்கிய விழாக்கள் நடைபெற உள்ளது.

    ×