search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Facial"

    ஒயின் பேஷியல் செய்துகொண்டால் சருமத்தின் இறந்த செல்கள் உதிர்ந்து, முகம் புத்துணர்வுடனும் பளபளப்புடன் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
    முன்பு ஆரோக்கியத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட திராட்சை, தற்போது அழகுக்காகவும் பயன்படுகிறது. பன்னீர் திராட்சை எனப்படும் கறுப்பு திராட்சையே உண்மையில் ஆரோக்கியமானது. திராட்சையிலிருந்து தயாரிக்கப்படும் சிகப்பு, ரோஸ், வெள்ளை நிற ஒயின்கள், அழகியல் சார்ந்த சிகிச்சைக்குப் பயன்படுகிறது. அதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட், சருமத்தில் உள்ள எலாஸ்டிக் ஃபைபர்களை மீட்டு சருமச் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. இதனால், வயதான தோற்றத்தை மறைக்க முடியும்.

    வெயிலினால் முகம் கறுத்துக் காணப்படுகிறது, சருமத்தின் உண்மையான நிறம் மங்கி சருமம் பொலிவிழந்து இருக்கிறது என்பவர்களுக்கு, ஒயின் ஃபேஷியல் பெஸ்ட் சாய்ஸ். முகத்தை கிளென்சிங், டோனிங் செய்ததும், வழக்கமான ஃபேஷியல் போன்றே ஸ்க்ரப்பர், மசாஜ் செய்யப்பட்டு, சுத்தம் செய்யப்படும். வழக்கமான ஃபேஷியலைவிட ஒயின் ஃபேஷியல் கூடுதல் நிறம் மற்றும் உடனடி அழகைக் கொடுக்கும்.

    ஒயின் தெரப்பி:

    புத்துணர்வுக்கும் உடல் பொலிவுக்கும், உடலில் உள்ள சுருக்கங்கள் நீங்கவும் உடல் முழுவதும் ஒயினால் செய்துகொள்ளப்படும் சிகிச்சையே, ஒயின் தெரப்பி. வயது முதிர்வால் தோலில் சுருக்கங்கள் காணப்படுகிறது என்பவர்களுக்கு, ஒயின் தெரப்பி பெஸ்ட் சாய்ஸ். கறுப்புத் திராட்சையின் விதை மற்றும் தோலை அரைத்து, உடல் முழுவதும் அப்ளை செய்து ஸ்க்ரபராகப் பயன்படுத்தப்படும்.



    இதனால், சரும துவாரங்கள் திறந்துகொள்ளும். அதன்பின், வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் குளிக்க வேண்டும். இதன்மூலம் உடலின் இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். அதன்பின் ஒயின் கலக்கப்பட்ட ஜெல் மற்றும் க்ரீம்களால் உடல் முழுவதும் அப்ளை செய்யப்படும். இறுதியாக, ஒயின் சீரம் அப்ளை செய்யப்படும்போது, மீண்டும் சரும துவாரங்கள் மூடிக்கொள்ளும். இது, இளமையான தோற்றத்தையும் உடல் பளபளப்பையும் கொடுக்கும்.

    உங்கள் சருமத்துக்கான ஒயின் தேர்வுசெய்யும் முன்பு கவனிக்கவேண்டியவை...

    டிரை ஸ்கின் உடையவர்கள், ஸ்வீட் ஒயினைப் பயன்படுத்தவும்.

    சென்சிட்டீவ் ஸ்கின் உடையவர்களுக்கு, ரெட் ஒயின் பெஸ்ட் சாய்ஸ். இது, சருமத்தின் ஆழ்துவாரங்கள் வரை சென்று, பருக்கள் மற்றும் கட்டிகள் வருவதைக் குறைக்கும்.

    நார்மல் ஸ்கின் எனில், டிரை ஒயினைத் தேர்வுசெய்யலாம். இதில் உள்ள டார்டாரிக் அமிலம் மற்றும் மாலிக் அமிலம், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைத் தக்கவைத்துக் கூடுதல் அழகில் காண்பிக்கும்.

    டிரை ஸ்கின் எனில், ரெட் ஒயின், தேன், கற்றாழையின் சதைப் பகுதி என மூன்றையும் சேர்த்துப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

    எண்ணெய் பசை சருமம் எனில், ரெட் ஒயினுடன் சம அளவு தயிர் கலந்து பயன்படுத்துவதன் மூலம் அழகான தோற்றத்தைப் பெறமுடியும்.
    உங்களை எப்போதும் பிரைட்டாக காட்ட, முகம் ப்ரெஷாக இருக்க வேண்டும். அதற்காக, வீட்டிலே செய்துகொள்ளக்கூடிய சூப்பரான பேஸ் மாஸ்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    உங்களை எப்போதும் பிரைட்டாக காட்ட, முகம் ப்ரெஷாக இருக்க வேண்டும். அதற்காக, வீட்டிலே செய்துகொள்ள வேண்டியவை...

    காய்ச்சிய பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தைச் சுத்தம் செய்யவும். அதன்பின், பொடித்த சர்க்கரைத்தூளை முகத்தில் தேய்த்து, முகம் முழுவதும் லேசாக மசாஜ் செய்யவும். அதன்பின், ரோஸ்வாட்டரை முகத்தில் அப்ளை செய்து காயவிடவும். அதன்பின், பாலாடையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். இறுதியாக, பேஷ் பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவவும். மாசு மருவற்ற முகம் பளிச்சென மிளிரும்.

    பேஷ் பேக்:

    முல்தானிமெட்டி - ஒரு டீஸ்பூன்
    வெள்ளரிக்காய் ஜூஸ் - ஒரு டீஸ்பூன்
    ரோஸ்வாட்டர் - ஒரு டீஸ்பூன்

    இவற்றை ஒன்றாகச் கலந்து, முகத்தில் அப்ளை செய்யவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு கழுவவும். அல்லது, பாலாடையுடன் குங்குமப் பூ, வெள்ளரிச் சாறு, அரைத்த சந்தனம் ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் பேக் போட்டுக்கொள்வதன் மூலம் முகம் அழகாக மிளிரும்.

    இதனைச் செய்ய நேரம் இல்லை என்பவர்கள், க்ளென்சிங், டோனிங் மாய்சரைஸிங்கை உங்கள் சருமத்துக்கு ஏற்ப க்ரீம் டைப்பாகவோ, ஜெல் டைப்பாகவோ தேர்வுசெய்து பயன்படுத்தலாம். அல்லது, மாதம் ஒருமுறை பார்லரில் சென்று பேஷியல் செய்துகொள்வதன் மூலம், இறந்த செல்களைச் சருமத்திலிருந்து நீக்கி, முகத்தைப் பளிச்சிட செய்யலாம்.
    தக்காளி பேஷியல், கோல்டன் பேஷியல், பப்பாயா பேஷியல் என்று பலவகை பேஷியல்கள் இருந்தாலும் ஒயின் மற்றும் வோட்கா பேஷியல்கள் முகத்திற்கு கூடுதல் அழகு தருகின்றன.
    பெண்கள் சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்வதற்காக செய்வதுதான் பேஷியல். தக்காளி பேஷியல், கோல்டன் பேஷியல், பப்பாயா பேஷியல் என்று பலவகை பேஷியல்கள் இருந்தாலும் ஒயின் மற்றும் வோட்கா பேஷியல்கள் முகத்திற்கு கூடுதல் அழகு தருகின்றன.

    வோட்கா பேஷியல் செய்வதற்காக அழகு நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.வீட்டில் இருந்தவாறே இந்த பேஷியலை செய்யலாம், அதாவது இரவு தூங்குவதற்கு முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள்.

    காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும். இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.

    இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். இதை அடிக்கடி பூசிக்கொள்வதால் நாளடைவில் உங்கள் முகம் மிருதுவாவதை காணலாம்.
    முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்களுக்கு இந்த பேஷியல் ஒரு சிறந்த மருந்து. வெயிலில் செல்லும் முன்பு இதை போட்டுக் கொண்டு சென்றால் சருமம் மாசுபடாமல் இருக்கும்.

    வெளியில் செல்லும் போது ஏற்படும் தூசியால் சிலருக்கு முகம் களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு பேஷியல்..
    ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் "ப்ளிச்" ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

    சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்.
    1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

    ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15 நிமிடம் கழித்து நன்கு கழுவ வேண்டும்.

    வாரத்திற்கு ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பியூட்டிபார்லர் போகாமல் பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும்.

    ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் ஸ்பூன், கசகசா விழுது ஒரு ஸ்பூன், சந்தனத்தூள் கால் ஸ்பூன் அனைத்தையும் சேர்த்து கெட்டியான விழுதாக்கிக் கொள்ள வேண்டும்.

    தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் அப்ளை பண்ணி காய்ந்ததும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
    ×