என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » facebook messenger
நீங்கள் தேடியது "Facebook Messenger"
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குறுந்தகவல்களை அழிக்கும் வசதி ஒருவழியாக வழங்கப்பட்டுள்ளது. #Facebook #Messenger
ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. மெசஞ்சரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சம் முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டது.
வாட்ஸ்அப் போன்றே மெசஞ்சர் செயலியிலும் குறுந்தகவல்களை தனிநபர் மற்றும் க்ரூப் சாட்களில் அழிக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. மெசஞ்சரில் அழிக்க வேண்டிய குறுந்தகவலை க்ளிக் செய்து “Remove for Everyone” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த பின் அழிக்கப்பட்ட குறுந்தகவல் இருந்த இடத்தில் குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உணர்த்தும் தகவல் இடம்பெறுகிறது. மெசஞ்சரில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க பத்து நிமிடங்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு தற்சமயம் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மெசஞ்சரில் குறுந்தகவல்களை அழித்தபின், இந்த அம்சம் உருவாக்கப்படுவதை ஃபேஸ்புக் உறுதி செய்திருந்தது. குறுந்தகவல்களை பயனர் தங்களுக்கு மட்டும் அழித்துக் கொள்ள குறுந்தகவல்களை தேர்வு செய்து “Remove for You” ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இந்த ஆப்ஷனை க்ளிக் செய்ததும் குறுந்தகவல் பயனருக்கு மட்டும் அழிக்கப்பட்டு விடும். ஃபேஸ்புக் இந்த அம்சத்தை முதற்கட்டமாக எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், லி்ண்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய 10 நிமிடங்களில் அழிக்க முடியும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கான மெசஞ்சர் செயலியில் வழங்கப்படுகிறது.
ஃபேஸ்புக் மெசன்ஜரில் பயனர்களுக்கு வரும் மெசேஜ் போலி கணக்கில் இருந்து அனுப்பப்பட்டதா என்பதை தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #Facebook
ஃபேஸ்புக்-இன் மெசன்ஜர் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பதை தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செயய்ப்படுவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய அம்சம் ஃபேஸ்புக் மெசன்ஜர் இன்பாக்ஸ்-இல் வரும் குறுந்தகவல்களில் அறிமுகமில்லாத கான்டாக்ட், சமீபத்தில் உருவாக்கப்பட்ட அக்கவுன்ட், ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறாரா அல்லது போன் நம்பர் மூலம் மெசன்ஜரை பயன்படுத்துகிறாரா, வசிக்கும் நாடு அல்லது பகுதி என்பது போன்ற கூடுதல் தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அம்சம் மூலம் பயனர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு உடனடியாக பதில் அனுப்ப வேண்டுமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வழி செய்கிறது. இதுகுறித்து மதர்போர்டு சார்பில் வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்ட குறுந்தகவலை அனுப்பியவர் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருக்கவில்லை என்ற தகவலை வெளிப்படுத்தி இருந்தது.
இத்துடன் கூடுதல் விவரங்களில் குறுந்தகவலை அனுப்பியவர் மெசன்ஜர் செயலியை தனது மொபைல் எண் ரஷ்யாவில் இருந்து உருவாக்கியிருப்பதாகவும், இந்த அக்கவுன்ட் சமீபத்தில் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.
தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாகவும், ஆள்மாறாட்டத்தை எதிர்த்து ஃபேஸ்புக் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. #Facebook #socialmedia
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X