search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode Byelection"

    • தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
    • பிரச்சாரத்திற்காக மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் ஈரோடுக்கு வருகை தர உள்ளதால் அதற்கான அட்டவணை தயாராகி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    திருமகன் ஈவெரா பொதுமக்களிடம், தொகுதி மக்களிடமும் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அவர் பொதுமக்களிடம் பழகும் விதம். அணுகும் விதம் அமைதியாக இருக்கும்.

    குறுகிய காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் மேற்கொண்டார். நாங்கள் கடந்த 12 நாட்களாக வாக்கு சேகரிக்கும் போது பெண்கள் மிகவும் துயரத்துடன் திருமகன் மறைவை கூறி வேதனைப்பட்டு எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என்று கூறி வருகின்றனர்.

    திருமகன் ஈவெரா நடவடிக்கையை முதலமைச்சர் சட்ட சபையில் நன்கு கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் உடனடியாக அன்று இரவு ஈரோட்டுக்கு கிளம்பி வந்தார். மறுநாள் எனக்கு போன் செய்து திருமகன் நினைவாக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார்.

    அப்போது திருமகன் ஈவெரா வசித்த கச்சேரி வீதியை திருமகன் ஈவெரா வீதி என்று பெயர் மாற்றினார். நாங்கள் நிச்சயமாக இடைத் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    நாளை தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் ஈரோடுக்கு வருகை தர உள்ளனர். அதற்கான அட்டவணை தயாராகி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைச்சர்கள் கே.என். நேரு, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஓபிஎஸ் கூறினார்.
    • இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி மோதலை தீவிரமாக்கியதுடன் அதற்கு தீர்வு காணும் களமாகவும் மாறியிருக்கிறது. கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை வேண்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர். ஆனால் பாஜக இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

    அதிமுக என கூறிக்கொண்டு இரு தரப்பினரும் வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்ததால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சின்னம் முடக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என்று இன்று காலை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம், ஈரோடு கிழக்கில் சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவதை எடப்பாடி உறுதி செய்திருக்கிறார்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்பாளரை அறிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியின் தொண்டர் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்த அவர், செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார். அதேசமயம் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் தனது வேட்பாளரை திரும்ப பெறுவதாகவும் கூறியிருக்கிறார்.

    அதிமுகவின் சின்னம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றார். சின்னம் முடங்கினால் தனி சின்னத்தில் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் கூறினார்.

    • மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கின்றோம்.
    • ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரும் 10 ரூபாய் நாணயங்களுடன் மனு தாக்கல் செய்ய வந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சுயேச்சைகள் ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.

    மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் (51), அவரது மனைவி இளையராணி(45), அவர்களது ஒரே மகள் சத்யா (24) ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.

    இது குறித்து மாரியப்பன் கூறும் போது,

    நான் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட அமைப்பாளராக உள்ளேன். எனது மனைவி துணை அமைப்பாளராக உள்ளார். எனது மகள் பி.ஏ.பி. எட். முடித்து உள்ளார். நாங்கள் குடும்பத்தினருடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக முடிவு செய்துள்ளோம்.

    ஏற்கனவே இங்கு கை சின்னத்தில் வேட்பாளர் உள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர் எங்களுக்கு என்ன சின்னம் ஒதுக்கிறாரோ அதில் நாங்கள் போட்டியிட தயாராக இருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கின்றோம் என்றார்.

    இதேப்போல் திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் (61) என்பவர் 10 ஆயிரம் மதிப்புள்ள 10 ரூபாய் நாணயங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

    அவர் கூறும் போது, நான் அரசு போக்குவரத்துக் கழக டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று அறிவித்துள்ளது. ஆனால் வங்கிகள் மற்றும் வெளியிடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.

    அறிவிப்பு ஒன்று நடைமுறை ஒன்றாக உள்ளது. இதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 10 ரூபாய் நாணயங்களை எடுத்து வந்துள்ளேன். நான் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எனக்கு 3-வது தேர்தலாகும் என்றார். 

    ×