search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eraniel suicide"

    இரணியல் அருகே 8-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    இரணியல் அருகே காரங்காடு நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் அஜிஷா (வயது 13).

    இவர், நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது ஆண்டு இறுதித்தேர்வு நடந்து வருகிறது. அஜிஷா நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். தேர்வு எழுதி விட்டு மாலை வீட்டிற்கு வந்தார்.

    வீட்டில் அஜிஷா சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென அஜிஷாவின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பெற்றோர் ஓடிச்சென்று பார்த்த போது அஜிஷா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அஜிஷா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசுபாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நாகர்கோவில் அருகே எறும்புக்காடு வைராக்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 31), கூலித் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    சம்பவத்தன்று ஜெகன் தளவாய்புரம் சாலையில் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஜெகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இரணியல் அருகே உடல் நலக்குறைவு காரணமாக தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இரணியல்:

    இரணியல் கோணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 56). தச்சு தொழிலாளி.

    மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவர், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

    இந்த நிலையில் மணிகண்டனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றார். எனினும் நோய் குணமாகவில்லை. இதனால் மணிகண்டன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் மணிகண்டன் சம்பவத்தன்று வீடு அருகே வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அவர், வி‌ஷம் குடித்து இருக்கலாம் என்று கருதிய அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து மணிகண்டனின் மகன் ராஜேஷ், இரணியல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பேபி தங்கம் வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் அவர் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்.
    ×