search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரணியல் அருகே 8-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை
    X

    இரணியல் அருகே 8-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை

    இரணியல் அருகே 8-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    இரணியல் அருகே காரங்காடு நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகள் அஜிஷா (வயது 13).

    இவர், நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது ஆண்டு இறுதித்தேர்வு நடந்து வருகிறது. அஜிஷா நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். தேர்வு எழுதி விட்டு மாலை வீட்டிற்கு வந்தார்.

    வீட்டில் அஜிஷா சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென அஜிஷாவின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பெற்றோர் ஓடிச்சென்று பார்த்த போது அஜிஷா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அஜிஷா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசுபாதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நாகர்கோவில் அருகே எறும்புக்காடு வைராக்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது 31), கூலித் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    சம்பவத்தன்று ஜெகன் தளவாய்புரம் சாலையில் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஜெகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×