search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emergency landing"

    மோசமான தட்பவெப்பநிலை நிலவியதால் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் சென்ற ஹெலிகாப்டர் புத்த கயா பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #RamVilasPaswan #Helicopter
    கயா:

    பீகார் மாநிலம் பெலகஞ்ச் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக லோக் ஜனசக்தி கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான், பா.ஜனதா கட்சியை சேர்ந்த பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் மோடி ஆகியோர் ஹெலிகாப்டரில் நேற்று சென்றனர்.

    அப்போது மோசமான தட்பவெப்பநிலை நிலவியதால் அந்த ஹெலிகாப்டர் புத்த கயா பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ராம்விலாஸ் பஸ்வான், சுஷில் மோடி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #RamVilasPaswan #Helicopter 
    124 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சின் பகுதியில் பறவை மோதியதால் பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #AirIndia
    பாட்னா:

    கொல்கத்தாவிலிருந்து டெல்லி நோக்கி இன்று பிற்பகலில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 124 பயணிகள் இருந்த இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எஞ்சின் பகுதியில் பறவை மோதியது. இதனால், பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    விமானத்தில் உள்ள பயணிகள் பத்திரமாக உள்ளதாகவும், தொழில்நுட்ப பணியாளர்கள் விமானத்தை சரிசெய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக அசாம் மாநிலத்தின் லக்கிம்பூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #ArmyHelicopter
    தேஸ்பூர்:

    அசாம் மாநிலம் தேஸ்பூர் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதில் பைலட் உள்பட் மூன்று ராணுவ அதிகாரிகள் பயணித்தனர்.

    இந்நிலையில், ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த பைலட், லக்கிம்பூர் பகுதியில் உள்ள கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார்.

    இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று ராணுவ அதிகாரிகளையும், பைலட்டையும் பத்திரமாக மீட்டனர். #ArmyHelicopter
    ×