search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egg Price"

    • முட்டை விற்பனை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது.
    • முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவதற்கான முடிவு செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கு அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விற்பனை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்துவதற்கான முடிவு செய்யப்பட்டது. அதன்படி 465 காசுகளாக இருந்த முட்டை விலை 470 காசுகளாக உயர்ந்தது.

    கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் பிடி தடைக்காலம் இருப்பதால் முட்டை விற்பனை அதிகரித்து உள்ள நிலையில் தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    • முட்டை விலையில் எந்த மாற்றமும் இன்றி 465 காசுகளாக நீடிக்கிறது.
    • ஏற்றுமதி முட்டை விலை 455 காசுகளாக தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உட்பட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்துக்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த 12-ந்தேதி ரூ.109 ஆக இருந்த கறிக்கோழி விலை, நேற்று ரூ.116 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கிலோவுக்கு ரூ.7 உயர்ந்துள்ளது.

    கறிக்கோழி தேவை அதிகரித்து உள்ள நிலையில் கடும் வெயிலால் அதன் எடை குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மீன்பிடி தடையால் விற்பனை தடை இன்றி நடைபெறுவதும், மைனஸ் விலை இல்லாததாலும் தற்போதைய விலையே தொடரலாம் என பண்ணையாளர்கள் என்.இ.சி.சி கமிட்டி உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை அடுத்து முட்டை விலையில் எந்த மாற்றமும் இன்றி 465 காசுகளாக நீடிக்கிறது. ஏற்றுமதி முட்டை விலை 455 காசுகளாக தொடர்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கடந்த 1-ந்தேதி முதல் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது.
    • கடந்த 8-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான முட்டை விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) கடந்த 1-ந்தேதி முதல் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. கடந்த 8-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை ரூ. 4.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஏற்றுமதிக்கான முட்டை விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முட்டை விலை 15 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆகவும், எக்ஸ்போர்ட் முட்டை விலை ரூ.4.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்யும்போது, ஏற்கனவே என்.இ.சி.சி விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து விற்பனை செய்தனர். இனி அவ்வாறு செய்யத்தேவையில்லை.

    முட்டை வியாபாரிகளுக்கும் என்.இ.சி.சி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், பண்ணையாளர்கள் முட்டையை மைனஸ் விலைக்கு விற்கத் தேவையில்லை என்று என்.இ.சி.சி அறிவித்துள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு :-

    சென்னை 505, பர்வாலா 469, பெங்களூர் 510, டெல்லி 490, ஹைதராபாத் 455, மும்பை 505, மைசூர் 515, விஜயவாடா 485, ஹொஸ்பேட் 470, கொல்கத்தா 550.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.106 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 86 ஆக சி.கா நிர்ணயித்துள்ளது.

    • முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.45 ஆகவும், எக்ஸ்போர்ட் முட்டை விலை ரூ.4.35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    • கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்யும்போது, ஏற்கனவே என்.இ.சி.சி விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து விற்பனை செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) கடந்த 1-ந்தேதி முதல் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.45 ஆகவும், எக்ஸ்போர்ட் முட்டை விலை ரூ.4.35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்யும்போது, ஏற்கனவே என்.இ.சி.சி விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து விற்பனை செய்தனர். இனி அவ்வாறு செய்யத் தேவையில்லை.

    முட்டை வியாபாரிகளுக்கும் என்.இ.சி.சி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் முட்டையை மைனஸ் விலைக்கு விற்கத் தேவையில்லை என்று என்இசிசி அறிவித்துள்ளது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-சென்னை-495, பர்வாலா-444, பெங்களூர்-490, டெல்லி-460, ஹைதராபாத்-435, மும்பை-495, மைசூர்-495, விஜயவாடா-470, ஹொஸ்பேட்-450, கொல்கத்தா-540.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.114 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.82 ஆக நிர்ணயித்துள்ளது.

    • 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
    • ஏற்றுமதி விலையும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுவதால் அதற்கான கமிட்டி அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் விலை அறிவிப்பு வெளியாகி வருகிறது. மே 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த தினசரி விலை நிர்ணய நடைமுறையால் பண்ணையாளர்கள் நஷ்டமின்றி தங்களுடைய தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த 4 நாள்களில் 20 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஏற்றுமதி விலையும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.25-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.105-ஆகவும், முட்டைக் கோழி விலை ரூ.83-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

    • சிறிய முட்டை பெரிய முட்டை நடுத்தர முட்டை என 3 பிரிவாக முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நேற்று நடந்த கூட்டத்தில் 405 காசுகளாக இருந்த முட்டை விலையை 410 காசாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணப்பு குழு வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவித்தது.

    சில நேரங்களில் நெஸ்பேக் மற்றும் முட்டை வியாபாரிகள் சங்கத்தினரும் நெக் விலையில் இருந்து மைனஸ் செய்து பண்ணைகளில் இருந்து கொள்முதல் செய்யும் விலையை அறிவித்தனர். இதனால் பண்ணையாளர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை.

    அவற்றை மாற்றி அமைக்க கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகள் ஆலோசனை கூட்டடம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் முட்டைக்கு மைனஸ் விலை இல்லாமல் நெக் அறிவிக்கும் விலைக்கு மட்டும் தமிழகம் முழுவதும் பண்ணையாளர்களும், வியாபாரிகளும் கடைபிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து இன்று முதல் நெக் அறிவிக்கும் விலைக்கு மட்டுமே முட்டையை பண்ணைகளில் விற்பனை செய்யப்படும். மேலும் சிறிய முட்டை பெரிய முட்டை நடுத்தர முட்டை என 3 பிரிவாக முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நேற்று நடந்த கூட்டத்தில் 405 காசுகளாக இருந்த முட்டை விலையை 410 காசாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்த விலை இன்று தமிழகம் மற்றும் கேரளாவில் அமுலுக்கு வந்துள்ளது.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது.
    • முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 22-ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-465, பர்வாலா-395, பெங்களூரு-450, டெல்லி-390, ஹைதராபாத்-400, மும்பை-450, மைசூர்-455, விஜயவாடா-385, ஹொஸ்பேட்-410, கொல்கத்தா-470.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.109 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 77 என நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது.
    • முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 20-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.

    இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 20-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நெஸ்பேக் 40 பைசா மைனஸ் விலை அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 3.90 மட்டுமே கிடைக்கும்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:- சென்னை-425, பர்வாலா-352, பெங்களூர்-420, டெல்லி-375, ஹைதராபாத்-358, மும்பை-413, மைசூர்-428, விஜயவாடா-365, ஹொஸ்பேட்-380, கொல்கத்தா-410.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.109 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 77 ஆக நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.

    • முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 12-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

    இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெட் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.

    இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 12-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    அதேசமயம் நெஸ்பேக் 40 பைசா மைனஸ் விலை அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 3.80 மட்டுமே கிடைக்கும்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:- சென்னை-415, பர்வாலா-340, பெங்களூரு-400, டெல்லி-375, ஹைதராபாத்-350, மும்பை-410, மைசூர்-408, விஜயவாடா-345, ஹொஸ்பேட்-360, கொல்கத்தா-400.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.105 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 77 ஆக நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.

    • நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.

    இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 10-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நெஸ்பேக் 30 பைசா மைனஸ் விலை அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.80 மட்டுமே கிடைக்கும்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-435, பர்வாலா-382, பெங்களூர்-410, டெல்லி-400, ஹைதராபாத்-363, மும்பை-420, மைசூர்-410, விஜயவாடா-385, ஹொஸ்பேட்-370, கொல்கத்தா-435.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.92 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 72 ஆக நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.

    • முட்டை விலை நாளுக்கு நாள் சரிந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    • 420 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசுகள் மேலும் குறைந்து 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மூட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை நாளுக்கு நாள் சரிந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் முட்டை தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசனைக்கப்பட்டது. பின்னர் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டது.

    அதன்படி 420 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசுகள் மேலும் குறைந்து 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. உற்பத்தி சரிவாலும், வடமாநிலங்களில் விலை குறைந்ததாலும் நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலை சரிந்துள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 30 காசு சரிந்த நிலையில், நேற்று மேலும் 20 காசு சரிந்து 3 நாட்களில் மட்டும் 50 காசுகள் சரிந்துள்ளதால் கோழி பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் கோழிப்பண்ணைக்கு தேவையான உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாது. பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மற்ற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் வருமாறு:

    சென்னை-435 காசு, விஜயவாடா-395, ஹைதராபாத்-370, விஜயவாடா-395, பார்வால-375, மும்பை-430, மைசூர்-415, பெங்களூர்-410, கொல்கத்தா-455, டெல்லி-405 காசுகள் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கறிக்கோழி மற்றும் முட்டை கோழி விலையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    • கோடையில் கோழிகள் அதிக அளவில் தீவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உற்பத்தி 15 சதவீதம் சரிந்துள்ளது.
    • கடந்த மார்ச் 1-ந்தேதி 440 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து, 16-ந் தேதி 460 காசுகள் ஆனது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் 8 கோடி கோழிகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த முட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டலம் நிர்ணயம் செய்கிறது. இந்த விலை நிர்ணயம் வாரத்திற்கு 3 நாட்கள் செய்யப்படுகிறது.

    கடந்த மார்ச் 1-ந்தேதி 440 காசுகளாக இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து, 16-ந் தேதி 460 காசுகள் ஆனது. தொடர்ந்து 25-ந் தேதி 10 காசு குறைந்து 450 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. 2 வாரத்துக்கு பின் நேற்று 30 காசு குறைந்தது. இதனால் முட்டை விலை 420 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணை தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

    கோடையில் கோழிகள் அதிக அளவில் தீவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உற்பத்தி 15 சதவீதம் சரிந்துள்ளது. மேலும் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை சரிந்துள்ளது. பெங்களூர், சென்னை பகுதிகளுக்கு ஹைதராபாத் முட்டைகள் வரத்து உள்ளன.

    நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலையை குறைக்காவிட்டால் விற்பனையின்றி முட்டைகள் பண்ணையிலேயே தேக்கமடைந்து விடும். அதனால் நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலை 30 காசு குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×