search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diarrhea"

    • பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும்.
    • கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை வளர்த்தலும் பிரதான தொழிலாகும். அவ்வகையில், வளர்க்கப்படும் கால்நடைகள் பெரும்பாலும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இந்நிலையில் உடுமலை சுற்றுப்பகுதியில் பரவலாக மழை நீடித்தது. அதேநேரம், மழையால் விளையும் பசுந்தீவனங்களை கால்நடைகள் உட்கொள்வதால், கழிச்சல் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் புதிதாக பறித்த இலை தழைகளை நன்கு காய வைத்த பின் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-

    தற்போதைய சூழலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல், பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். ஈரமான இடங்களில் கட்டி வைக்கப்படும் கால்நடைகளுக்கு கால் வீக்க நோய் ஏற்படும் என்பதால் காய்ந்த நிலப்பரப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பால் கறந்தவுடன் மாடுகளை சிறிது நேரம் கழித்த பின்னரே படுக்க வைக்க வேண்டும்.வழக்கத்திற்கு மாறான நிலையில் கால்நடைகள் இருந்தால் உடனடியாக கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வேதாரண்யத்தில் கலங்கலாக வந்த தண்ணீரை குடித்த 200 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதை சுற்றியுள்ள கரியாப்பட்டினம், சேட்டாக்குடி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பிடித்து குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்களுக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடுமையாக அவதியடைந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம், கரியாப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- எங்கள் பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமான முறையில் இல்லை. இதனால் அசுத்தமாக கலங்கலாக வரும் தண்ணீரை குடித்தவர்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடைய பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி நோய்க்கு இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. #Pneumonia #ChildHealthWeek
    புதுடெல்லி:

    வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெருமளவில் தாக்குகிறது. இந்த நோய்க்கு குழந்தைகள் பலியாகின்றனர். இதுகுறித்த அறிக்கை சமீபத்தில் வெளியானது.

    அதில், 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

    இங்கு தினமும் 735 குழந்தைகள் இறக்கின்றன. இதன்படி இந்த நோய்க்கு இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை பலியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது.



    வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவை தடுக்க அதற்கான தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அவ்வப்போது தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆனால் அதற்கான சரியான சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்படுவதில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pneumonia #ChildHealthWeek
    ×