என் மலர்
நீங்கள் தேடியது "people impact"
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதை சுற்றியுள்ள கரியாப்பட்டினம், சேட்டாக்குடி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பிடித்து குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள், முதியவர்களுக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடுமையாக அவதியடைந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம், கரியாப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:- எங்கள் பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் சுகாதாரமான முறையில் இல்லை. இதனால் அசுத்தமாக கலங்கலாக வரும் தண்ணீரை குடித்தவர்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடைய பீதியை ஏற்படுத்தி உள்ளது.






