என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dhanushkodi"
ராமேசுவரம்:
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
மேலும் தெற்கு அரபிக் கடல், வங்க கடலில் அதிக காற்று வீசி வருவதால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காணப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொண்டி, பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பனைமர உயரத்துக்கு அலைகள் எழுகின்றன. இதன் காரணமாக நேற்று சுற்றுலா பயணிகள் தனுஷ் கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 5-வது நாளாக இன்றும் அதே நிலைமை தொடர்கிறது.
தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் 70 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசுகிறது. இதனால் ராமேசுவரம் முதல் பாம்பன் சாலையில் இருந்த பழமையான மரங்கள் முறிந்து விழுந்தன.
காற்றின் வேகம் காரணமாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் ஊர்ந்து செல்கின்றன.
அரிச்சல்முனை, முகுந்த ராயர் சத்திரம், தனுஷ்கோடி சாலை காற்றின் காரணமாக மணலால் மூடப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவக் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தீவுப்பகுதியான ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஆங்காங்கே மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் ரெயில்களும் பாம்பன் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காற்றின் வேகம் குறைந்த பின்னர் மெதுவாக இயக்கப்பட்டன.
4-வது நாளாக இன்றும் சூறாவளியின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் சாலைகள் மணலால் மூடப்பட்டு போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் கடலில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இன்றும் பாம்பன் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையொட்டி தமிழகத்தின் மலையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் உள்மாவட்டங்களிலும் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.
தெற்கு அரபிக்கடல், வங்கக்கடல் பகுதியில் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வலுவாக வீசுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
குறிப்பாக தனுஷ்கோடியில் எப்போதும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். நேற்றும், இன்றும் பலத்த சூறாவளி வீசுகிறது.
இதனால் வழக்கத்தை விட தனுஷ்கோடியில் கடல் சீற்றம் இன்னும் அதிகமாக உள்ளது. பனை மர உயரத்துக்கு அலைகள் எழும்புகிறது. இதன் காரணமாக நாட்டுப் படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் சாலைகள் மணலால் முழுவதும் மூடப்பட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கடல் சீற்ற ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குகின்றனர்.
ராமேசுவரம் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் லட்சுமணன் தீர்த்தம் தெரு தெப்பக்குளம் அருகில் பனைமரம் முறிந்து மின் கம்பம் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விடிய, விடிய மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ராமேசுவரம்:
மியான்மருக்கு 170 கி.மீட் டர் மேற்கு தென்மேற்கு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் ராமேசுவரம் பகுதியிலும், புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியிலும் கடந்த 2 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. கடலும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.
எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற் கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கம்பிப்பாடு பகுதியை தாண்டி அரிச்சல்முனை பகுதிக்கு சாலை வழியாக வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக போலீசார் தடுப்பு கம்பிகளை அமைத்துள்ளனர்.
இன்று 3-வது நாளாக ராமேசுவரம், தனுஷ் கோடியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழும்புகின்றன. எனவே சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை கடற்கரைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்