search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cybercrime"

    • டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் இணையவழி சேவைகள் அதிகரித்ததில் இருந்து சைபர்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • சைபர் குற்றங்களை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசாங்கம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    சைபர் குற்ற செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 28 ஆயிரம் மொபைல் நம்பர்களை கண்டறிந்துள்ளதாக ஹரியானா காவல் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி தெரிவித்து இருக்கிறார். சைபர்கிரைம் உதவி எண் 1930 மற்றும் சைபர் குற்றங்கள் பற்றி தகவல் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் 27 ஆயிரத்து 824 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டதாக கூடுதல் காவல் துறை தலைவர் ஒ பி சிங் தெரிவித்து இருக்கிறார்.

    கண்டறியப்பட்டு இருக்கும் மொபைல் போன் நம்பர்களின் சேவைகள் விரைவில் துண்டிக்கப்பட்டு விடும் என காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இந்த நம்பர்கள் சைபர்சேப் போர்டலில் பதிவேற்றம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் கிரைம் மையம் சார்பில் இந்த பாதுகாப்பு தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    குருகிராமில் இருந்து 7 ஆயிரத்து 142, பரிதாபாத்தில் இருந்து 3 ஆயிரத்து 896 நம்பர்களும், பஞ்ச்குலாவில் இருந்து 1420. சோனிபட்டில் இருந்து 1408, ரோடக்கில் இருந்து 1045, ஹிசரில் இருந்து 1,228, அம்பாலாவில் இருந்து 1,101 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டன என்று ஒ பி சிங் தெரிவித்துள்ளார். மொபைல் போன் நம்பர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக மாவட்ட சைபர்கிரைம் அலுவலகங்களுக்கு தகவல் கொடுக்குப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 1930 உதவி எண், 29 சைபர் காவல் நிலையங்கள், 309 சைபர் உதவி மையங்களில் இருந்து 47 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 15 கோடிக்கும் அதிகமான பணத்தை காவல் துறை மீட்டுள்ளது என ஒ பி சிங் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் அக்டோபர் மாதம் தேசிய சைபர் செக்யுரிட்டி மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    • மர்ம நபர்கள் ஓ.டி.பி.யை வைத்து வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ்.
    • 6 நாளில் சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டு கொடுத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கடந்த 17-ந் தேதி வந்த செல்போன் குறுந்தகவலில் ஆன்லைன் மூலம் கிரெடிட் கார்டு ரிவார்டு பாய்ன்ட்ஸ் கிலைம் செய்து தருகிறோம்.

    அதற்கு உங்களது மொபைலில் ஒரு ஓ.டி.பி. வரும் அதனை எங்களுக்கு தெரிவியுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்படி அந்த நபர் ஓ.டி.பி.யை தெரிவித்தார்.

    உடனே மர்ம நபர்கள் ஓ.டி.பி.யை பெற்று கொண்டு அவரது 3 வங்கி கணக்கில் இருந்து ரூ.69947 பணத்தை அபேஸ் செய்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

    இது குறித்து அவர் தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து துரித நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி மோசடி செய்த நபரின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்கி ரூ. 19883ஐ முதல் கட்டமாக மீட்டு புகார்தாரரின் வங்கி கணக்கிற்கு திரும்ப வரவு வைத்தனர்.

    இந்த நிலையில் அவரை அழைத்து இன்று தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில்

    ரூ.19883 பணத்தை சைபர் கிரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

    மீதமுள்ள பணத்தை மீட்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 6 நாளில் சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

    ×