search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CITU"

    பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று சி.ஐ.டி.யூ. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
    தாயில்பட்டி:

    சுப்ரீம் கோர்ட்டு விதித்த நிபந்தனைகளால் பட்டாசு தொழிலை நடத்த முடியாத சூழல் உள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டி, ஆலைகளை மூடி போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

    இந்த போராட்டம் காரணமாக பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களது நலனை கருத்தில் கொண்டு பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட சி.ஐ.டி.யூ. பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

    சிவகாசி பஸ் நிலையம் சாட்சியாபுரம் பஸ் நிலையம் அருகில், பூலாவூரணி, தாயில்பட்டி, சாத்தூர் மதுரை பஸ் நிறுத்தம், வெம்பக்கோட்டை உள்பட 13 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தேவா தொடங்கி வைத்தார்.

    நிர்வாகிகள் சுரேஷ் குமார், ஜோதிமணி, அருளானந்தம், வேம்புலுசாமி மற்றும் தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

    திருவாரூரில் தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்தக்கோரி இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    திருவாரூர்:

    திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொழிலாளர் நல சட்டங் களை அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தோடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ×