search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chidambaram natarajar temple"

    • சிவ பக்தர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கீழசன்னதி வழியாக நடராஜர் கோவிலுக்கு சென்றனர்.
    • பக்தர்கள் திருவாசகம், தேவாரம் பாடுவதற்கு தீட்சிதர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    சிதம்பரத்தில் உலகபுகழ் பெற்ற நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு நடராஜர் கோவிலில் கனகசபையில் ஏறி சாமிதரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்து இருந்தனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையினர் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் உடனே அமலுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து கோவிலின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் கோவிலுக்கு சென்றனர். ஆனால் அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

    இந்த நிலையில் கடலூரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு மூலம் கடந்த 2 நாட்களாக இக்கோவில் விவகாரம் குறித்து கருத்துக்கேட்பு நடந்தது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

    இப்படி இப்பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தி வந்த வேளையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு கால பூஜை முடிந்த பிறகும், முதல் 30 நிமிட நேரத்தை பக்தர்கள் தேவாரம், திருவாசகம் ஓதி வழிபடுவதற்கு ஒதுக்கலாம். இதை கோவில் நிர்வாகம் மறுக்கக்கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறையினர் அதிரடி உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவை தொடர்ந்து நடராஜர் கோவில் கனகசபையில் ஏறி தேவாரம் மற்றும் திருவாசகம் பாட சிவ பக்தர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 11.30 மணி அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் சிவ பக்தர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கீழசன்னதி வழியாக நடராஜர் கோவிலுக்கு சென்றனர்.

    பின்னர் சிவபக்தர்கள் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி மனமுருக தேவாரம், திருவாசகம் பாடி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் தீட்சிதர்களிடம், கோவிலில் திருவாசகம், தேவாரம் பாட அனுமதி வழங்க வேண்டும் என கூறி கடிதம் கொடுத்தனர். அதனை தீட்சிதர்கள் பெற்று கொண்டனர். பக்தர்கள் திருவாசகம், தேவாரம் பாடுவதற்கு தீட்சிதர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஹரிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    • ஏற்கனவே கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று உத்தரவிட்ட நாளிலிருந்து கோவிலில் போலீசார் தினமும் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு உத்தரவுபடி பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பக்தர்கள் பாடலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.

    இதற்கான கடிதத்தையும் இந்து சமய அறநிலையத்துறை கோவில் தீட்சிதர்களுக்கு அனுப்பியிருந்தது. அந்த கடிதத்தில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக புகார்கள் வந்தது. அதனால் தேவாரம், திருவாசகம் பாட வருபவர்களுக்கு அரசாணையின்படி அனுமதி அளிக்க வேண்டும். பாட செல்பவர்களும் முன்கூட்டியே கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துவிட்டு பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் பாட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    இதையொட்டி சிதம்பரம் நடராஜர்கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடலாம் என்று உத்தரவிட்ட நாளிலிருந்து கோவிலில் போலீசார் தினமும் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் கடிதத்தால் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் நடராஜர்கோவிலில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட சிவ பக்தர்கள் மற்றும் பக்தர்கள் முடிவுசெய்தனர். அதன்படி நேற்று காலைமுதல் பக்தர்கள் கீழ் சன்னதி வழியாக நடராஜர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சிவபக்தர்கள் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி மனதுருக தேவாரம், திருவாசகம் பாடி சாமி தரிசனம் செய்தனர்.

    என்றாலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் மாவட்ட போலீஸ் கூடுத போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் டி,எஸ். பி.க்கள் சிதம்பரம் ரமேஷ் ராஜ், சேத்தியாத்தோப்பு சுந்தரம் ஆகியோர் தலைமையில் 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவிலின் கனகசபை பகுதி, உள் பிரகாரம், வெளி பிரகாரம், நுழைவுவாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: கருத்து கேட்பு முகாமில் குவிந்த 6,628 மனுக்கள்
    • கோவில் எங்களுக்கே சொந்தம் என பிச்சாவரம் ஜமீன் பேட்டி

    கடலூர் மாவட்டம் சிதம் பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வகித்து வருகிறார்கள். இந்த கோவில் வரவு, செலவு கணக்குகளை காட்ட வேண்டும் என்று தீட்சிதர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை அதி காரிகள் நோட்டீஸ் வழங்கி னர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு செய்ய ஒத்துழைப்பு வழங்க வில்லை.

    இந்த நிலையில் நடராஜர் கோவில் விசாரணை தொடர்பாக பொதுமக்கள் கோவில் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆலோசனை மற்றும் கருத்து களை கடலூர் புதுபாளை யத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ, தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்தது.

    அதன்படி கடலூரில் 2 நாட்களாக பொதுமக்கள், தன்னார்வலர்கள், தமிழ் அமைப்புகள், பல்வேறு அமைப்பு கள் என மின்னஞ்சல் மூலமும், நேரடி யாகவும் மனு கொடுத்தனர். 2 நாட்களில் 6,628 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்தமனுக்கள் கோவி லுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வந்துள்ளது. இந்த மனுக்கள் ஆய்வு செய்து 1 வாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை ஆணை யரிடம் அறிக்கை சமர்ப்பிக் கப்பட உள்ளது என அதி காரி ஒருவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில் சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று பிச்சா வரம் ஜமீன்தாரும், சோழமன்னர் வம்சாவழியு மான பாளை யக்காரர் ராஜா சூரப்ப சோழ கனார் மனு அளித்தார். மேலும் அவர் நிருபர்க ளிடம் கூறறியதாவது:-

    சிதம்பரம் நடராஜர் கோவில் பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்கள் கட்டுப் பாட்டில் தான் இருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்களிட மிருந்து அபகரிக்கப்பட்டது.

    நடராஜர் கோவில் பஞ்சாட சரப்படி அமர வைத்து பட்டாபிசேகமும், முடிசூட்டுவிழாவும், சோழ மன்னர் பரம்பரையினரான எங்களுக்கு செய்யப்படுவது வழக்கத்திலும், நடை முறையிலும் உள்ளது. இந்த கோவில் எங்களுடையது என்பதற்கு இந்த ஆதாரமே போதுமானது.

    ஆனால் தீட்சிதர்கள் தற்போது கோவிலின் மான்பை கொச்சைபடுத்தும் வகையில் நடந்து வருகி றார்கள். அவர்களுக்கு கோவிலில் உரிமை உள்ள தாக எந்தவித ஆதரமும் இல்லை. எனவே தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் சித–ம்பரம் நடராஜர் கோவிலில் கனசபை ஏறி பக்தர்கள் திருவாசகம், தேவாரம் பாட அனுமதி அளித்து இந்துசமய அறநிலை–யத்துறை உத்தர விட்டுள்ளது. இதனை கோவில் நிர்வாகம் மறுக்க கூடாது. என்றும் தெரிவிக் கப்பட்டது.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    • தேவாரம், திருவாசகம் பாட கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்வதற்கு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது தடை விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதற்கிடையே, தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. இருப்பினும் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கவில்லை என பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்ட உத்தரவில், ஒவ்வொரு காலபூஜை முடிந்த பிறகும், முதல் 30 நிமிடத்திற்கு தேவார, திருவாசக திருமுறைகளை ஓதி வழிபடலாம்.

    தேவாரம், திருவாசகம் பாட கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது. தேவாரம், திருவாசகம் பாடுவது பிற பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையிலும், திருக்கோவிலின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது.
    • சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது. தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்வதற்கு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது தடை விதிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதற்கிடையே, தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. இருப்பினும் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கவில்லை என பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

    இதுதொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்ட உத்தரவில், ஒவ்வொரு காலபூஜை முடிந்த பிறகும், முதல் 30 நிமிடத்திற்கு தேவார, திருவாசக திருமுறைகளை ஓதி வழிபடலாம். தேவாரம், திருவாசகம் பாட கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது. தேவாரம், திருவாசகம் பாடுவது பிற பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையிலும், திருக்கோவிலின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி ஏராளமானோர் மனு கொடுக்க வந்தனர்.
    • ஆய்வு செய்ய வந்த சிறப்பு அதிகாரி சுகுமாறன் தலைமையிலான குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை.

    கடலூர்:

    புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவில் வரவு-செலவு கணக்குகளை காட்ட வேண்டும் என்றும், 2 நாட்கள் ஆய்வு செய்வோம் என்றும் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நோட்டீசு வழங்கினர்.

    இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 7, 8-ந் தேதிகளில் ஆய்வு செய்ய வந்த சிறப்பு அதிகாரி சுகுமாறன் தலைமையிலான குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்கவில்லை. வரவு-செலவு கணக்குகளையும் காட்டவில்லை. மாறாக நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி அமைக்கப்பட்ட குழுவாக இருந்தால் வரவு-செலவு கணக்குகளை ஒப்படைப்போம். இல்லையென்றால் வரவு-செலவு கணக்குகளை காட்ட முடியாது என்று தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.

    இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர், இது பற்றி ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறி சென்றனர்.

    இதற்கிடையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த பொதுமக்கள் ஆலோசனை மற்றும் கருத்து கூறலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இதன்படி கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையரிடம் இன்று (திங்கட்கிழமை ), நாளை (செவ்வாய்க்கிழமை ) ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் நேரில் ஆலோசனை மற்றும் கருத்துகளை கூறலாம். இது தவிர தபால் மூலமாகவும், vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாலை 3 மணிக்குள் கருத்துகளை அனுப்ப அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி இன்று காலை துணை ஆணையர் மின்னஞ்சலில் 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன. இதுதவிர நடராஜர் கோவில் பற்றி ஏராளமானோர் நேரில் மனு கொடுக்க வந்தனர். இதனால் துணை ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. நாளை மாலை வரை மனுக்கள் வழங்க அவகாசம் உள்ளதால் இன்னும் ஏராளமான மனுக்கள் குவிய வாய்ப்பு உள்ளது.

    • சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து ஆலோசனை தெரிவிக்க அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
    • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் அறநிலை–யத்துறை உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 2 நாட்கள் ஆய்வு செய்ய சென்றனர். இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் அதிகாரி–களின் ஆய்வுக்கு எந்தவித ஒத்து–ழைப்பும் வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப் பட்டது. எனவே ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிலையில் கோவில் நிர்வாகம் குறித்து கருத்து தெரிவிக்க ஆலோசனை வழங்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:- சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணைய ரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோ–ச–னைகளை வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி–முதல் 3 மணிவரை நேரில் தெரிவிக்க–லாம். அதோடு மின் அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் அறநிலையத்துறை உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 2 நாட்கள் ஆய்வு செய்ய சென்றனர்.

    இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இந்த நிலையில் கோவில் நிர்வாகம் குறித்து கருத்து தெரிவிக்க ஆலோசனை வழங்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 3 மணிவரை நேரில் தெரிவிக்கலாம். அதோடு மின் அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந்தேதி நடக்கிறது.
    • ஆனி திருமஞ்சன தரிசனம் 6-ந்தேதி நடைபெறுகிறது.

    சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் 6 மகாஅபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் சிறப்பு வாய்ந்தது மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் வரும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த 2 திருவிழாக்களையும் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் ஒன்று திரண்டு நடராஜரை தரிசனம் செய்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா வருகிற 27-ந்தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.

    அடுத்த மாதம்(ஜூலை) 1-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதியும், ஆனி திருமஞ்சன தரிசனம் 6-ந் தேதியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதி வளாகத்தில், பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • திட்டமிட்டப்படி இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்த அதிகாரிகள் குழுவினர் வந்தனர்.
    • அவர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கோவில் பகுதியில் ஆய்வு செய்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் நிலங்கள், நகைகள், வரவு-செலவு விபரங்களை நேற்றும், இன்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆய்வுக்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. ஆகமவிதிப்படி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் தலையிடக்கூடாது என நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டினர்.

    என்றாலும் திட்டமிட்டப்படி அறநிலையத்துறை வேலூர் இணை ஆனையர் சுகுமார் தலைமையில், பழனிகோவில் இணை ஆனையர் நடராஜன், கடலூர் துணை ஆனையர்கள் ஜோதி, அசோக்குமார், உதவி ஆணையர் சந்திரன் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அய்வுக்கு வந்தனர்.

    அப்போது பொது தீட்சிதர்கள் அவர்களை வரவேற்றனர். அப்போது அதிகாரிகள் தீட்சிதர்களிடம் கோவில் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ய வந்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால் பொது தீட்சிதர்கள் ஆய்வுக்குறிய சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் நடக்கிறது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எனவே அதிகாரிகள் கோவிலில் உள் பிரகாரம், வெளி பிரகாரத்தில் தற்போதைய மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபம் முகப்பில் தரையில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர்.

    அதன் பின்னர் கோவில் தீட்சிதர்கள் அதிகாரிகளிடம் கோவில் நடை சாத்தும் நேரம் ஆகிவிட்டது என தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் 4 மணிக்கு கோவிலுக்கு வருவதாக புறப்பட்டு சென்றனர். பின்னர் அதிகாரிகள் மீண்டும் 5 மணி அளவில் கோவிலுக்கு வந்தனர்.

    கோவிலுக்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தீட்சிதர்கள் சார்பில் வக்கீல் சந்திரசேகர் பேசினார். சட்டரீதியாக வந்தால் மட்டுமே ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    திட்டமிட்டப்படி இன்று 2-வது நாளாக ஆய்வு நடத்த அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அவர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கோவில் பகுதியில் ஆய்வு செய்தனர்.

    • திட்டமிட்டப்படி இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்துறை அலுவலர் சுகுமார் தலைமையில் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்தனர்.
    • கோவில் ஆவணங்களை பொது தீட்சிதர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்தனர்.

    சிதம்பரம்:

    உலக பிரசித்திபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்தனர். பின்னர் அரசு உத்தரவின் பேரில் அந்த தடை நீக்கப்பட்டு பக்தர்கள் தற்போது கனகசபை மீது ஏறி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த கோவிலை சட்ட விதிகளின்படி தீட்சிதர்கள் நிர்வாகம் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கடலூர் துணை ஆணையர் ஜோதி என்பவரை நியமித்தது. இவரது தலைமையிலான குழு நடராஜர் கோவிலில் இன்று (7-ந் தேதி), நாளை (8-ந் தேதி) 2 நாட்கள் நேரடியாக ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து பொது தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த ஆய்வுக்கு பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று ஆய்வுக்கு வந்த அமைச்சர் சேகர் பாபு கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடாது என்று அறிவித்திருந்தார்.

    என்றாலும் திட்டமிட்டப்படி இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் வருவாய்துறை அலுவலர் சுகுமார் தலைமையில் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வந்தனர்.

    அதாவது 2014-ம் ஆண்டு முதல் வரவு- செலவு கணக்குகள், திருப்பணி குறித்த விபரங்கள், அவற்றுக்கான தொல்லியல் கருத்துறு, இந்து சமய அறநிலைத்துறை அனுமதி விபரம், மதிப்பீடு விபரங்கள், கோவிலுக்கு சொந்தமான கட்டளைகள், அவற்றுக்கு சொந்தமான சொத்து, அவற்றில் இருந்து பெறப்படும் வருவாய் இனங்கள், சொத்துக்களின் தற்போதைய நிலை, இந்துசமய அறநிலையத்துறை சட்டவிதிகளின் படி அங்கீகரிக்கப்பட்ட சொத்து பதிவேடு உள்ளிட்டவற்றை அறநிலையத்துறை அதிகாரிகள், தீட்சிதர்களிடம் கேட்டனர். இதற்கு பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் ஆவணங்களை பொது தீட்சிதர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்தனர்.

    இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் எங்களுக்கு ஆய்வு தொடர்பாக முறையான நோட்டீஸ் எதுவும் வரவில்லை. எனவே ஆய்வு நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பரபரப்பான சூழ்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார்.
    • அவர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பொதுதீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கோரி பக்தர்கள், சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    ஆனால், கொரோனா தொற்று காரணத்தை காட்டி கனகசபை மீது ஏறி நின்று பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை.

    இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் வழக்கும் தொடரப்பட்டது. முடிவில் கனகசபை மீது பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள் அரசாணையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தனர். என்றாலும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கணக்கு வழக்குகளை அறநிலையத்துறை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிடப்பட்டது.

    இந்த ஆய்வு நாளை முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆய்வுக்கும், கோவில் பொதுதீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார்.

    அவர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பொதுதீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். கோவிலில் உள்ள கோ-சாலையையும் பார்வையிட்டார்.

    இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவே வந்தேன். ஆய்வுக்கு வரவில்லை என்றார்.

    ×