search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Opinion Camp"

    • பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
    • இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சேர்க்கப்படும்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று காலை பா.ஜ.க. சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை மத்திய மந்திரி எல். முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

    இதனையடுத்து திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையில், மாவட்ட பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட பிரதமரின் கருத்து கேட்பு முகாமில் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பிரதமருக்கு வழங்கும் வகையில் அதற்கான வைக்கப்பட்ட பெட்டியில் அளித்தனர். இதனை மத்திய மந்திரி எல்.முருகன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி, வலிமையான பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார். அதன டிப்படையில் பா.ஜ.க. சார்பில் கருத்துக் கேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    எனவே பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், அனைத்து தரப்பு மக்கள் இந்த முகாம்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு, நமது நாட்டின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் தகுந்த கருத்துக்களை ஆலோசனைகளை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இந்த கருத்துக்கள், ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சேர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: கருத்து கேட்பு முகாமில் குவிந்த 6,628 மனுக்கள்
    • கோவில் எங்களுக்கே சொந்தம் என பிச்சாவரம் ஜமீன் பேட்டி

    கடலூர் மாவட்டம் சிதம் பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வகித்து வருகிறார்கள். இந்த கோவில் வரவு, செலவு கணக்குகளை காட்ட வேண்டும் என்று தீட்சிதர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை அதி காரிகள் நோட்டீஸ் வழங்கி னர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு செய்ய ஒத்துழைப்பு வழங்க வில்லை.

    இந்த நிலையில் நடராஜர் கோவில் விசாரணை தொடர்பாக பொதுமக்கள் கோவில் நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆலோசனை மற்றும் கருத்து களை கடலூர் புதுபாளை யத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ, தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக அறிவித்தது.

    அதன்படி கடலூரில் 2 நாட்களாக பொதுமக்கள், தன்னார்வலர்கள், தமிழ் அமைப்புகள், பல்வேறு அமைப்பு கள் என மின்னஞ்சல் மூலமும், நேரடி யாகவும் மனு கொடுத்தனர். 2 நாட்களில் 6,628 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்தமனுக்கள் கோவி லுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வந்துள்ளது. இந்த மனுக்கள் ஆய்வு செய்து 1 வாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை ஆணை யரிடம் அறிக்கை சமர்ப்பிக் கப்பட உள்ளது என அதி காரி ஒருவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில் சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று பிச்சா வரம் ஜமீன்தாரும், சோழமன்னர் வம்சாவழியு மான பாளை யக்காரர் ராஜா சூரப்ப சோழ கனார் மனு அளித்தார். மேலும் அவர் நிருபர்க ளிடம் கூறறியதாவது:-

    சிதம்பரம் நடராஜர் கோவில் பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்கள் கட்டுப் பாட்டில் தான் இருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் பிச்சாவரம் ஜமீன் பாளையக்காரர்களிட மிருந்து அபகரிக்கப்பட்டது.

    நடராஜர் கோவில் பஞ்சாட சரப்படி அமர வைத்து பட்டாபிசேகமும், முடிசூட்டுவிழாவும், சோழ மன்னர் பரம்பரையினரான எங்களுக்கு செய்யப்படுவது வழக்கத்திலும், நடை முறையிலும் உள்ளது. இந்த கோவில் எங்களுடையது என்பதற்கு இந்த ஆதாரமே போதுமானது.

    ஆனால் தீட்சிதர்கள் தற்போது கோவிலின் மான்பை கொச்சைபடுத்தும் வகையில் நடந்து வருகி றார்கள். அவர்களுக்கு கோவிலில் உரிமை உள்ள தாக எந்தவித ஆதரமும் இல்லை. எனவே தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் சித–ம்பரம் நடராஜர் கோவிலில் கனசபை ஏறி பக்தர்கள் திருவாசகம், தேவாரம் பாட அனுமதி அளித்து இந்துசமய அறநிலை–யத்துறை உத்தர விட்டுள்ளது. இதனை கோவில் நிர்வாகம் மறுக்க கூடாது. என்றும் தெரிவிக் கப்பட்டது.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×