என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chest Pain"
- சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக ஆசைத்தம்பி பணியாற்றி வந்தார். இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள போலீஸ் குடியி ருப்பில் வசித்து வந்தார். நேற்று இரவுஇவர் நெஞ்சுவலிக்கிறது என்று கூறி உள்ளார். அதன் பெயரில் அவர் குடும்பத்தி னர் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடி யாக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆசைத்தம்பி இறந்தார். இவரது சொந்த ஊர் வானூர் அருகே புதுப்பாளையம் கிராம மாகும். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது இதையடுத்து அவர் தனது வீட்டிற்கும் தகவலும் கொடுத்துள்ளார்.
- இது குறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி(வயது56) . இவர் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். நேற்று கழுதூர் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது இதையடுத்து அவர் தனது வீட்டிற்கும் தகவலும் கொடுத்துள்ளார். மேலும் மீண்டும் சரியாகி விட்டது என்று கூறி வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் அப்போது மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதை அறிந்த கழுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். இது குறித்து வேப்பூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வேப்பூா் போலீசார் இறந்த ரகுபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- அங்கிருந்து வீட்டுக்கு சென்று இரவு தூங்கச்சென்றார்.
- போலீசார் சம்ப வஇடத்திற்குவிரைந்து சென்று வழக்குபதிவு செய்துதீவிரவிசா ரணைமேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 36). இவர் உளுந்தூ ர்பேட்டை நகராட்சியில் தற்காலிக ஊழியராக குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை விருத்தாச்சலம் ரோட்டில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்றார். அங்கு போண்டா வடைபோன்றவை சாப்பிட்டு விட்டு டீ குடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்று இரவு தூங்கச்சென்றார். அப்போதுதூங்கிக் கொண்டிருந்த பிரபுவிற்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மூச்சுத திணறல் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவி யுடன்அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமை யிலான போலீசார் சம்ப வஇடத்திற்குவிரைந்து சென்று வழக்குபதிவு செய்துதீவிரவிசா ரணைமேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உளுந்தூர்பேட்டை சுகாதார துறை அதிகாரிகள் சாலை ஓரம் உள்ள டீக்கடை போன்ற சிற்றுண்டிகளில் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்